Posts

Showing posts from May, 2010

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு

Image
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு நேற்று திங்கள்கிழமை கல்யாணக்கால் வெட்டு வைபவம் நடைபெற்றபோது கல்யாணக்காலை சீர்செய்து சந்தனம் பூசி பட்டாடை அணிவித்து பூசை செசய்வதையும் காணலாம் ..

மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு

Image
மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  செவ்வாய் கிழமை நடை பெற்றது. மாநகர முதல்வராக  மசூர் மவுலானா நியமிக்கப் பட்டதை அடுத்து  கொழும்பிலிருந்து மருதமுனைக்கு வந்த அவருக்கு  மருதமுனை மக்களால் பாராட்டு வழங்கப்பட்டது. நேற்று மசூர் மவுலானா தலைமையில் நடை பெற்ற மாதாந்த அமர்வின் போது சக உறுப்பினர்களால் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நடை பெற்ற அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மருதமுனை சட்டத்தரணி ரகீப் ,அமீர் ஆகியோர்  பிரசன்னமாகி இருக்கவில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் சாரதி அனுமதிப்பத்திரம்-

Image
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒன்லைன் திட்டத்தின்கீழ் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டம் அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முதற்கட்டமாக கம்பஹாவிலும் குருணாகலிலும் இரண்டு அலுவலகங்களை அடுத்தவாரம் திறக்கின்றது. இந்த இரண்டு மாவட்டச் செயலகங்களிலும் இரண்டு தனியான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏனைய வளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்லைன் முறைமையின்கீழ் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் நிரப்பி வழங்கவேண்டிய தேவையில்லை. வருகைதரும் கிரமத்தின் அடிப் படையில் இலக்கங்கள் வழங்கப்பட்டு அதற்கேற்ப பின்னர் நேரில் அழைக்கப்படுவர். அப்போது தமது அடையாளஅட்டை, பிறப்புச் சான்றிதழ், மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்போது கைவிரல் அடையாளம் பெறப்படுவதுடன் திணைக்களத்தின் விசேட கமராமூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறையில் கையொப்பமும் பெறப்படும். அதன்பின்னர் கட்டணம் செலுத்துவதோடு தமது விபரங்களைச் சரிபார்த்துக் கொடுக்க வே

உள்ளுராட்சிசபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியின் உதவியுடன் நெல்சிப் .

Image
வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியினுதவியுடன் நெல்சிப் என்ற ஒரு புதிய ஜந்தாண்டு திட்டமொன்று வட-கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக சில பிரதேச சபைகளில் மக்களது கருத்துக் கணிப்பு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் காரைதீவு பிரதேசசபையில் சனியன்று நடைபெற்ற அமர்வில் நெல்சிப் திட்ட நிபுணர்களான கலாநிதி. ஏம்.றசாக் மற்றும் கலாநிதி.எஸ்.அமீர்தீன் ஆகியோர் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

தமிழ் வின் மூட்டி விடும் முட்டாள் தனமான செய்தி

Image
கல்முனையில் மீண்டும் ஒரு தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் சாத்தியம் : அச்சமடையும் தமிழ் மக்கள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 02:29.05 AM GMT +05:30 ]  பாண்டிருப்பு மகா வித்தியாலய காவாலியும்  அவரது போதை நண்பர்களும் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் உடைக்கப்பட்ட பாடசாலை சொத்தை திரிபு படுத்தி தமிழ் முஸ்லிம் இனகலவரம் உருவாகும் என சொல்லுவது வெட்கம் கேட்ட விடயமாகும் .இந்த செய்தி எழுதிய அந்த கேதீஸ்  என்பவனும் அவ்னுகளுடைய குடிகார கூட்டாளி.  கல்முனையில் தமிழ் முஸ்லிம் உறவில் எந்த பாதிப்பும் இல்லை. ஒற்றுமையாக வாழும் மக்களை பீதியடைய செய்யும் இவ்வாறான செய்தி எழுதுவதை தமிழ் வின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் வாழ்வாதார உதவி

Image
ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் வாழ்வாதார உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பதினைந்து  குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் சாய்ந்தமருது இணைப்பாளர் ஏ.எம்.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ், முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை அத்துமீறி அபகரித்துள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு மாவட்ட செயலர் உத்தரவு

Image
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்திற்கு உட்பட்ட படுகாடு, முதலைமடு பகுதிகளில் பன்னெடுங்காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் விவசாயத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். அம்மக்களால் பல வருடகாலமாக விவசாயம் செய்கைபண்ணப்பட்டுவந்த வயல் காணிகளை அப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரினதும், பெரும்பான்மை அரசியல்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரினதும் அனுசரணையுடன் தமிழ் முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் . திருகோணமலை மாவட்ட செயலாளர் தலமையில் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களின் பங்குபற்றலுடன் சேருநுவர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் இவர்களை வெளியேற்றி தங்களின் காணிகளை பெற்றுத்தறுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் வேண்டியிருந்தனர். இத

அமைச்சர் அதாவுல்லாவுக்கு வரவேற்பு விழா

Image
  இன்று வெள்ளிக்கிழமை  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு அக்கரைப்பற்று  மக்கள் மக்கள் வழங்கும் "மலை மேகத்திற்கு மண்ணின் மரியாதை" வரவேற்பு விழா இன்று நடை பெறும்.

கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்படும். சிவநேசதுரை சந்திரகாந்தன்

Image
தற்பொழுது கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றது இக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் வருகின்ற முதலமைச்சர் மாநாட்டில் இது தொடர்பான ஓர் விசேட பிரேரணை ஒன்றை தான் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார் இன்று அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் AJM இர்சாத் தலைமையில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்படி அபிவிருத்தி ஆய்வுக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் நிலவுகின்ற ஆளனி

சாதனை விருது

Image
கல்முனை பற்றிமா மாணவன் ரிஷிகேசுக்கு   கடந்த 2009 ஆம் ஆண்டு நடை பெற்ற கல்விப் பொது தரதர பத்திர சாதாரண தர பரீட்சையில் 9A தர சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் நான்காம் இடத்தையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் மாவட்ட மாட்டத்தில் முதலாம் இடத்தையும் அடைந்து கல்முனை கல்வி வலயத்திற்கும், கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்த செல்வன் வரதராஜன் ரிஷிகேஷ் என்ற மாணவனுக்கு புதன் கிழமை M.R.C நிறுவனத்தின் சமுக சேவை  பிரிவு பாராட்டு வழங்கி கௌரவித்தது. நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் ,கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு உட்பட கல்முனை பிர தேச கல்விமான்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் தீ

Image
விசேட செய்தி கொழும்பு துறைமுகத்தில் இரசாயன கொள்கலன் தீப்பற்றிக் கொண்டதுள்ளதாக துறைமுக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

19 ஆம் 20 ஆம் திகதிகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு அரசு கோரிக்கை!

Image
பயங்கரவாதத்துக்கு எதிரான யூத்தத்தில் இராணுவத்தினா; அடைந்த மாபெரும் வெற்றியை தேசியரீதியில் நினைவூகூறும் வகையில் இம்மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

கல்முனை மேயர் மசூர் மௌலானாவே

Image
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு  கல்முனை மேயர் மசூர் மௌலானாவே  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவுப் ஹக்கீம்  ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அடுத்த மாநகர சபை தேர்தலின் போது சட்டத்தரணி ரகீபை மேயராக்குவோம்  எனவும் கல்முனை மாநகர சபையின் முடிவுக் காலம் வரையும் மவுலானாவே மேயராக இருக்கட்டும் எனவும் ரவுப் ஹக்கீம் கூறியதாக கல்முனை பிர தேச அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.

அரசு முஸ்லிம் காங்கிரஸ் உறுபினர்களை பிரித்து எடுக்க முயற்சி ?

Image
ஹசன் அலி எம்.பி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுபினர்களுடன் அரசு தனிப்பட்ட முறையில்   பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது  ஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் “  என்று  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்து அவர்களிடம் இறைவனை முன்னிறுத்தி சத்திய பிரமாணம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிபிடதக்கது

கிழக்கில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

Image
மாகாண அமைச்சரவை பேச்சாளர் உதுமா லெப்பை கிழக்கு மாகாணத்தில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார். மாகாண அமைச்சின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த சனியன்று திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகற்ற ஆறு கிராமங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஹுஸைனி, சின்னக்குளம், திமிரிகொள்ள ஆகிய மூன்று கிராமங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வடமுனை, எம்.ஐ.எச். நகர் ஆகிய கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்தில் கங்குவேலி, கிராமமும் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை, பொத்துவில், குச்சவெளி, மூதூர் ஆகிய நீர்ப்பாசன பொறியிலாளர் காரியாலயங்களுக்கு பதில் பொறியல

கிழக்கு மாகாண முதல்வர் திரு சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மா. சபை உறுப்பினர்கள் கேரளா விஜயம்

Image
் எதிர்வரும் யூன் 6ந் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு பயணமொன்றை மேற்கொள்ள உள்ளனர். கேரளா மாநில அரச நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு விடயங்களை நேரடியாக பார்வையிட்டு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளுக்கு அவ் அனுபவங்களை பயன்படுத்தும் நோக்கில் இவ் ஐந்து நாள் பயணம் யூ. என். டீ. பி. நிதி அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான எம். எஸ். உதுமா லெவ்வை கூறினார். கிழக்கு மாகாண சபையின் 35 உறுப்பினர்களும் மூன்று குழுக்களாக கேரள மாநிலத்திற்கான பயணத்தை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உதுமா லெப்பை மேலும் கூறியுள்ளார்.

கொழும்பு நகரின் காண்காணிப்பிற்கு வீடியோ கமரா

Image
கொழும்பு நகரின் குற்றச் செயல்கள், வீதி போக்குவரத்துகளை கண்காணிப்பதற்காக வீடியோ கமரா பொருத்துவதற்கு பொலிஸார் எண்ணியுள்ளனர். இதற்கான மொத்த செலவாக 30 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

முதலாம் தரத்துக்கு பாடசாலை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

Image
முதலாம் தரத்துக்கு பாடசாலை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம் சட்ட மா அதிபருக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் பின்னர் அதனை அமைச்சரவையின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகத் தாம் விரும்பும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடியதாகவே இந்தப் புதிய சுற்றுநிருபம் அமைந்துள்ளது.

ஊடகவியலாளர் வருடாந்த பொதுக் கூட்டம்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய வருடாந்த பொதுக் கூட்டம் இன்று நிந்தவூர்  அல்-மஸ்கர் பெண்கள் பாடசாலையில் ஒன்றிய தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது. அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ஜே.எம்.இர்ஷாத் பிரதம அதிதியாக இங்கு கலந்து கொண்டு "உள்ளூராட்சி மன்றங்களும் ஊடகவியலாளர்களும் " என்ற தலைப்பில் அங்கு உரையாற்றினார். நடப்பு வருட ஆண்டுக்கான தலைவர் ,செயலாளர்களாக் மீண்டும் மீரா இஸ்ஸதீன்,றிசான் ஆகியோர் தெரிவு செயப்பட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

Image
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக   நியமிக்கப்பட்டுள்ளார் என்று  கிழக்கு மாகாண சபை முக்கியஸ்தர் ஒருவர் கல்முனை நியூஸ்  இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹன் விஜயவிக்ரம முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் சுபையிர் சுகாதர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று கிழக்கு மாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். இவர் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

18ம் திகதி இல்லந்தோறும் விளக்கேற்ற வேண்டுகோள்

Image
படைவீரர்களுக்கு அஞ்சலி உயிர் நீத்த படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 18ஆம் திகதி மாலை நாடு முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ரணவிரு அதிகார சபை நாட்டு மக்களிடம் நேற்று (14) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் படைவீரர்களின் பெற்றோரும் மற்றும் பிரமுகர்களும் கலந்துகொள்வார்களென படையினர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு

Image
8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை ஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.  

கல்முனை கடற்கரை பள்ளி 188 வது கொடியேற்ற விழா

Image
சாஹுல் ஹமீது வலியுள்ளா அவர்களின் 188 வது  நினைவு தின வருடாந்த கொடியேற்ற விழா இன்று சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் சிறப்பாக  நடை பெற்றது பெரும்  திரளான மக்கள் கலந்து கொண்டனர் .பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ,பிரதேச செயலாளர் நௌபல்,மக்கள் தொடர்பாடல் போலீஸ் அதிகாரி நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

காலியில் இடி மின்னல் தாக்குதலில் பலர் காயம் அவதானமாக இருக்க எச்சரிக்கை

Image
இன்று அதிகாலை தொடக்கம் கொழும்பு  காலி , களுத்துறை போன்ற பிரதேசங்களில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. காலி பிரதேசத்தில் கடும் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு தொலை தொடர்பாடல் கோபுரம் செயலிழந்துள்ளதுடன் பலர்  மின்னல் தாக்குதல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக காலி தகவல்கள் தெரிவிக்கின்றன, மின்னல் தாக்குதல்  அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு  வேண்டப்படுகின்றார்கள்

கல்முனையில் சி.ஐ.டிகொள்ளையர் மூவர் கைது

Image
சி.ஐ.டி எனக் கூறி கல்முனை தமிழ் வீடொன்றில் நகை கொள்ளையடித்த சிங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் மூவர் இன்று கல்முனை பொலிசாரினால் கைது செயப்பட்டுள்ளனர் .......... இவர்களிடம் இராணுவ அடையாள அட்டை இருந்ததாக கூறப்படுகிறது   . .(விபரம் தொடரும் ...............) பிந்திய செய்தி  கல்முனை வைத்திய சாலை  வீதியில்  உள்ள தமிழ் வீடொன்றுக்கு சென்ற இவர்கள்  இராணுவ அடையாள அட்டையை  காண்பித்து  வீட்டை சோதனை இடுவதாக கூறி வீட்டு அலுமாரியில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து செல்லும் போது கல்முனை வைத்திய சாலை பொலிசாரிடம் வசமாக மாட்டிக்  கொண்டனர். இவர்கள் மூவரும்  அம்பாறை,களனி,களுத்துறை பிர தேசங்களை  சேர்ந்தவர்கள். பொலிசாரின் விசாரணையை   தொடர்ந்து இவர்கள் போலி இராணுவ அடையாள அட்டை பயன் படுத்தியதாக தெரிய வந்துள்ளது  இவர்கள் இன்று கல்முனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்  பட்டனர்.

கல்முனை மா நகர சபை கூட்டம் ஒத்தி வைப்பு

Image
எதிர் வரும் பதின் எட்டாம் திகதி நடை பெறவிருந்த கல்முனை மாநகர சபை மாதாந்த  கூட்டம் எதிர் வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி முதல்வர் மசூர் மவ்லானா தெரிவித்தார். கடந்த இரண்டு மாத கூட்டம் நடை பெறவில்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

கிழக்கு மாகாணசபையின் வரவேற்பும் பிரியாவிடையும்.

Image
கிழக்கு மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்வர்களுக்கான பிரியாவிடையும் ஊள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வும் கிழக்கு மாகாண சபையினால் நேறு;று ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஏ. எச். எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சராக இருந்த எம். எல். எல். எம் ஹிஸ்புல்லா, எதிர்க் கட்சித் தலைவர் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம். டி. ஏ. எம். குணவர்த்தன, எதிர்கட்சி உறுப்பினர் தௌபீக் ஆகியோருடன் அபையின் செயலாளராகவிருந்த ஆர். தியாகலிங்கம் ஆகியோருக்கான பிரியாவிடையும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சரான ஏ. எல். எம் அதாவுல்லாஹ் மற்றும் புதிய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் திருமலை வெல்கம் கோட்டலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்

நகரமற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் மட்டும் தொகுதி வாரியாக நடைபெறும்!

Image
இலங்கையில் நகர மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் மட்டும் தொகுதிவாரியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் தேர்தல்களை தொகுதிவாரியாக நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. எனவே மாநகரசபை மற்றும் நகரசபைகளினது தேர்தல்களை மட்டும் தொகுதிவாரியாக நடாத்தி ஏனைய பிரதேச சபைகளினது தேர்தல்களை வழமையான விருப்புவாக்கு தெரிவு முறையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரி அடிப்படையில் ஒருகட்சியிலிருந்து 1வேட்பாளர் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடதக்கது 14மாநகரசபைகளுக்கும் 38 நகரசபைகளுக்கும் இவ்வாறு தேர்தல் நடத்தப்படவுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை

Image
முன்பக்கம் கறுப்புக்கண்ணாடிகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டள்ளது எந்தவகை வாகனமாக இருந்தாலும் முற்பக்க கண்ணாடிகள் தெளிவானதாக உட்புறம் இருப்பவர்களை தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு பணிப்பரை விடுத்துள்ளது இதற்கமைய அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இவ்விடயத்தை கருத்திற் கொண்டு வருமாறும் கேட்கப்பட்டுள்ளது எனவே கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களை பின்பற்றி நடவடிக்கை எடுப்பதில் இலங்கை போக்குவரத்துப் பொலிஸார் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர் ஆனால் வாகனங்களின் பின்பக்க கண்ணாடிகள் கறுப்புக் கண்ணாடிகளாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் வர்த்தக நிலையம் கொள்ளை

Image
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இயங்கி வந்த பால் மா வகை விற்பனை முகவர் நிலையம் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. பத்து இலட்சம் ரூபாவுக்கும்  அதிகமான பொருட்கள் எடுத்து செல்லப்பட்டிருப்பதாக கல்முனை போலீசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. இதே பிர தேசத்தில் இரண்டு வாரங்களுக்குள் மூன்று வீடுகளும் கொள்ளை இடப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கல்முனையில் Air Tel நிறுவனம்

Image
கல்முனையில் Air Tel நிறுவன கிளை காரியாலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கல்முனை பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் இக் காரியாலயம் அமைந்துள்ளது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து  கொண்டு  இக்காரியாலயத்தை இன்று திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத்,ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

Image
300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்த்தி உதவி தொகையை பெற்றுக் கொண்டுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் டபிள்யு.ஜே.எல்.எஸ்  விஜயசிறி தெரிவித்துள்ளார் இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை 15வீதத்தினால் குறைவடைந்துள்ளது. சமூர்த்தி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த பட்ச தகுதியற்றவர்கள் பலர் உதவிதொகையை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளனர். 16லட்சம்பேர் உதவித் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் இதில் 3லட்சம்பேர் உதவிதொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 100மில்லியன் ரூபா பணத்தை செலவிடுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

இலங்கையில் எய்ட்ஸ்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது

Image
இலங்கையில் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இந்த 2010ம் ஆண்டில் முதல் மூன்று மாதத்தில் மட்டும் இந்நோயால் 6பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் எய்டஸ் நோயை உருவாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 1223பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 313பேருக்கு எய்ட்ஸ்நோய் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 212ஆண்களும் 101பெண்களும்  அடங்குகின்றனர். 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த ஆண்டில் இந்த வைரஸ் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது கடந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 3பேர் மட்டுமே இந்நோயால் இறந்தனர் இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்கு ஆகியுள்ளது 2009ம் ஆண்டு முழுமையானதுமான புள்ளிவிபரத்தின்படி 16பேரே மொத்தமாக உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

நற்பிட்டிமுனை வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

Image
நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக்கழகம் எதிர்வரும் 15, 16 திகதிகளில் “நற்பிட்டிமுனை வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளதாக கழகத்தின் தலைவர் ஆஷிக் பர்வீன் தெரிவித்தார். ஒற்றுமை, சமாதானம், நட்பு என்பவற்றை விளையாட்டினூடாக ஏற்படுத்தும் நோக்குடன் நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (13) பிற்பகல் 4.30 மணிக்கு முன்னர் தலைவர் 15 ஏ, மத்ரசா வீதி, நற்பிட்டிமுனை எனும் முகவரியுடனோ அல்லது 0773764916 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும். அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

சவளக்கடை அரிசி ஆலையை மீண்டும் இயங்கச் செய்ய கோரிக்கை

Image
சவளக்கடை அரிசி ஆலையை மீண்டும் புனருத்தாரணம் செய்வ துடன் நெற்கொள்வனவுப் பணி களை ஆரம்பிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளை சந்திக்க வேண்டுமெனும் தீர்மானம் முஸ் லிம் சமாதான செயலக மாதாந் தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது. செயலக தவிசா ளர் எம்.எச். யாக்கூப், பணிப்பாளர் முபீதா உஸ்மான், உட்பட செயலக பிரதேச அங்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர். அரிசி ஆலை எல்லை விபரம் மற்றும் புனருத்தாரணம் செய்வதற்கான நிதி தொடர்பாக நாவிதன் வெளி பிரதேச செயலாளரை சந்திப்பதற்கென கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பிர்தெளஸ், ஆசிரிய ஆலோசகர் எஸ். சிறா ஜுதீன் ஆகியோர் நியமிக்கப்பட் டனர். இதேவேளை ஒலுவில் துறைமுக அபிவிருத்தி அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக மாகாண உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் இதற்கென விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டது. அதிபர் ஜனாபா காதர், சட்டத்தரணி ஜனாபா எம் றபாய்தீன், முன்னாள் அரச அதிபர் ஏ.எல். இப்றாலெவ்வை, அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செய லாளர் ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் சபீன

கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள்

Image
கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக இருவர் இன்றுகாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மாகாணசபை அமர்வு இன்று காலை கூடியபோது ஐ.ம.சு.மு யின் உறுப்பினராக காத்தான்குடியைச் சேர்ந்த கே.எல்.எம். பரீட் மற்றும், ஐ.தே.க. உறுப்பினராக புல்மோட்டையைச் சேர்ந்த ஆர்.எம். அன்வர் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பாராளுமன்றத்துக்குத் தெரிவான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்¡ல்லாஹ் மற்றும் எம்.எஸ்.தெளபீக் ஆகியோரின் வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

சுவர் விழுந்து பத்து வயது பாலகன் பரிதாப மரணம்

Image
பட்டம் விட வீட்டுக் கூரை மீது எறிய பத்து வயது பாலகன் வீட்டுச் சுவர் விழுந்து மரணமான சம்பவம் இன்று மாலை கல்முனை குடியில் இடம்  பெற்றது. கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்முனைகுடியை  சேர்ந்த ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும்  மாணவனே இவ்வாறு மரணமானார்.

காரைதீவுப்பிரதேசத்தில் மீண்டும் கடற்படை முகாம்.

Image
காரைதீவுப்பிரதேசத்தில் மீண்டும் கடற்படை முகாம் அமைக்கப்படுவதற்கு   அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னர் அகற்றப்பட்ட முகாம் மீண்டும் அமைக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது எனக்கூறும் அரசுதற்போது காரைதீவில் மினிமுகாம் அமைப்பது எதற்காக? இந்நடவடிக்கை மக்களை பீதிகொள்ளச்செய்துள்ளது.மக்கள் இப்போதுதான் ஓரளவு நிம்மதியடைந்துள்ளார்கள்.இந்நிலையில் இப்போது ஏன் இந்த முகாம்.சுவாமிவிபுலானந்தர் பிறந்த மண்ணில் கடலைப்பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் சிறுதொகையினரே எனச்சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட முகாமை அகற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.