Posts

Showing posts with the label சமயம்

கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது மதத்திற்கு முரணானது

Image
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தினால் உயிரிழந்த அனைவரது ஆத்மசாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் முழுமையாகக் குணமடையவும் கொழும்பு பேராயர் இல்லத்தில் விசேட தேவ ஆராதனை இன்று காலை இடம்பெற்றது.  கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை நடத்தினார். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.  அதிமேற்றிராணியார் உரையாற்றுகையில் இந்தத் தாக்குதல் மனித செயற்பாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும் என்று தெரிவித்தார்.  கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது முழுமையாக மதத்திற்கு மாறுபட்ட ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

“நாம் இலங்கையர்”என்ற ரீதியில் முஸ்லிம்களின் எதிர்காலசெயற்பாடுகள் சகவாழ்வுக்கு முன்னுரிமை வழங்குவதாக அமைய வேண்டும்.

Image
மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் அறிக்கை. (கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்) யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் சென்ற ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடாத்திய சம்பவத்தை மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- “இஸ்லாம்” சாந்தி சமாதானம் சக வாழ்வு என்ற அர்த்தத்தைக் கருதுகின்ற ஒரு அறபுச் சொல் என்ற வகையில் அதிலிருந்து பெயரெச்சமாக வரும் முஸ்லிம் என்ற சொல் “சாந்தியளிப்பவன்” சமாதானத்தை உருவாக்குபவன் என்ற அர்த்தங்களில் கையாளப்பட்டு வருகின்றது. எனவே இஸ்லாம் ஒரு போதும் வன்முறைச் சம்பவங்களையோ பயங்கரவாத தாக்குதல்களையோ தற்கொலை தாக்குதல்களையோ ஆதரிக்கவில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இலங்கை வாழ் முஸ

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது

Image
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.  IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன் அதில் ஒருவர் மட்டும்  முகத்தை திறந்தவாறு  உள்ளார்.  முகத்தை திறந்தவாறு  உள்ள குறித்த நபரே இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹசீம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்!

Image
முன்னாள் அமைச்சர் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின்  வேண்டுகோளுக்கு அமைய சஊதி அரபியா  அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்!  சஊதி நாட்டு தூதுவர் உத்தியோகபூர்வமாக காத்தாகுடியில் ஆளுனரிடம் தெரிவித்தார். இலங்கைக்கு இதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக  இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் பொறுப்பேற்றவுடன் உடனடியாக சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் "அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித்" அவர்களுடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல்  ஆலமி அல் இஸ்லாமி செயலாளர் "கலாநிதி ஈஸாயி" , சஊதி  இளவரசர் "முக்ரின்" உட்பட பல தரப்பினர்களோடு பேசி  2500 கோட்டாவை ஆக குறைந்தது 1000 ஆக  அதிகரித்து 3500 தர வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதனை பரீசிலித்த சஊதி அரசு இலங்கையின் ஹஜ் கோட்டாவ

சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன், றியாத் ஏ. மஜிட்) சென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவிக்கப்பட்டார்.  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை மாநில துணைத் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.  இதன்போது இராஜாங்க அமைச்சர் உலகளாவிய முஸ்லிம்களின் ஐக்கியம், ஒற்றுமையினை வலியுறுத்தி பேசினார். அத்தோடு குறிப்பாக தமிழ் நாட்டு முஸ்லிம் மக்கள் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  

கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலய நத்தார் ஆராதனை

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றன . கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார்   வழிபாடுகளை நடாத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் .  இந்த நள்ளிரவு  ஆராதனை வழிபாட்டில் பிரதேச கிறிஸ்தவ பங்கு மக்கள் ஆலயம் நிறைந்து காணப்பட்டனர் . நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் .. இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும்  இவ்விழாவின் கொண்டாட்டங்களில்  கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி ,குடில்கள்ந,த்தார் பாப்பா ,வாழ்த்து அட்டைகளயும்  பரிசுகளையும் பரிமாறல் ,கிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல் , கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  கிறித்தவ மக்கள்  ஆலயங்களில் ஒன்று கூடி நள்ளிரவு  ஆராதனைகளில் ஈடுபடுவர். கல்முனை பிரதேசத்தில்

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சமய ஆராதனை வழிபாடு

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களிலொன்றான மெதடிஸ்த திருச்சபையின்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் சிறப்பாக நடை பெற்றன . கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட் பணி எஸ்.டி. வினோத் அடிகளார் வழிபாடுகளை நடாத்தினார். கல்முனை சேகர மக்கள் பலர் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில் வட மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்குண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் செல்ல விசேட பிரார்தனையும் அங்கு இடம் பெற்றது. நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும் நத்தார் பாப்பா இவாழ்த்து அட்டைகளையூம்  பரிசுகளையூம் பரிமாறல் இகிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல்  கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  மெதடிஸ்த திருச்சபையில்  ஒன்று கூடி வழிபாடுகளில் ஈட

கல்முனை திரு இருதயநாதர் தேவாலய ஒளி விழா

Image
கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலய வருடாந்த ஒளி விழா ஞாயிற்றுக் கிழமை (16)நடை பெறவுள்ளது . இருதய நாதர்  ஆலய பங்குத்தந்தை  அருட் தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையில் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு  நடைபெறவுள்ளது . இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை அருட்தந்தை  எஸ்.மொறாயஸ்  கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்  கெளரவ  அதிதியாக  கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ்  மற்றும்  கல்முனை செலான் வாங்கி உத்தியோகத்தர் ரீ.எஸ்.றினோ , ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக் , அருட் சகோதரி ஜீ.செல்வராணி ,அருட்சகோதரர்  ஜெ.டொமினிக் செவியோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்

கல்முனையில் பெண்கள் நத்தார் இன்னிசை ஆராதனை வழிபாடு

Image
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  வடக்கு கிழக்கு திரு மாவட்ட  பெண்கள் ஐக்கிய சங்கத்தின்  “வாழ்வு  கொடுக்கும் இறைவன்” பெண்கள் நத்தார் இன்னிசை ஆராதனை வழிபாடு சமீபத்தில்  கல்முனையில் நடை பெற்றது. இந்த ஆராதனை வழிபாட்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  பிரதித் தலைவர் பி. தம்மிக்க பெர்ணாந்து பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நத்தார் இன்னிசை ஆராதனை கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் நடை பெற்றது. இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்  வடக்கு கிழக்கு செயலாளர் அருட் திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் நடை பெற்ற  பெண்கள் நத்தார் இன்னிசை வழிபாட்டில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு , திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்முனை நகர மத்தியில் ஒன்று சேர்ந்த வடக்கு கிழக்கு பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கல்முனை பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டு கல்முனை  மெதடிஸ்த திருச்சபைக்கு அழைத்து வரப்பட்டனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்க

மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரியில் முப்பெரும் விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு ,  இரண்டாம் மாடிக்கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பித்து  வைத்தல் மற்றும்  அதிதிகள் பாராட்டி கௌரவித்தல் போன்ற முப்பெரு விழா நாளை  ஞாயிற்றுக் கிழமை( 2 ) மாளிகைக்காட்டில்  இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.திலீப் நவாஸ்  பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கௌரவ அதிதியாகவும் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் , சமய சமூக ஆர்வலர் எம்.பீ.எம்.பரீன் , மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.எம்.தஸ்லீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வின் போது பாடவிதான அபிவிருத்தி , ஒழுக்க விழுமியங்கள் , கல்லூரிக்கான வருகை , சமய கிரிகை ஒழுங்கு , பாடநூல்களை ஒழுங்காக பேணுதல் , இணைப்பாடவிதான செயற்பாடு , தலைமைத்துவம் ஆகியவற்றில் தமது தி

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஒளி விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) பட்டிருப்பு  மத்திய மகா வித்தியாலயத்தில்  ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி கிறிஸ்தவ ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஒளிவிழா ” பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் நேற்று  புதன் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை கல்லாறு கேசரம் அருட்செல்வி ஜோதினி சீனித்தம்பி , முன்னாள் மண்முனை தென் எருவில்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா , ஓய்வுபெற்ற ஆசிரியைகளான ஜயந்தி , சுந்தரி , பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

2019 தேசிய மீலாத் விழா தர்கா நகரில் நடைபெறும்!

Image
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு  2019ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா களுத்துறை  மாவட்டத்தின் தர்கா நகரில் நடைபெறும் என முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று  (26.11.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.  2018 தேசிய மீலாத் விழா இன்று கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.  அத்துடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல்,  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்   அஷ்ஷேய்க்   எம்.ஆர்.எம்.மலிக் , இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.தார்ஸைத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட் ஸாஹிட் ஸுஹைல் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  இ