Posts

Showing posts from March, 2020

மேலும் 10 பேருக்கு கொரோனா - கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!

Image
இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 142 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 124 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது

Image
இன்று மாத்திரம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க படமாட்டாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயாவில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - மீறினால் ஊருக்கு சீல்!

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆராதனை தொடர்ந்து கடந்த 29 திகதி முதல் அவ் ஆலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதி வரை தனிமை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் சிலர் யாழ்ப்பாணம் தேவ ஆராதனையின் போது கலந்து கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படுத்தப்பட்டதை அடுத்து டிக்கோயா ஆராதனையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உலர் உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களும் ஆராதனையில் கலந்து கொண்ட 65 குடும்பங்கள் உட்பட கொழும்பு அவதான பகுதியிலிருந்து வருகை தந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன. இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார். இதே வே

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது

Image
எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் சில பிரதேசங்களில் நேற்று (30) தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. விசேடமாக இவ் ஊரடங்குச் சட்டம் தொற்றுநோயைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். குறித்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய தினத்திலிருந்து இதுவரை சட்டத்தை மீறியவர்கள் 7000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 1700 வாகனங்கள் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், ஆனாலும் தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு

Image
இன்று (31) பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 114 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்!

Image
கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!

Image
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

Image
8 மணி நேரத் தூக்கம் நம் இரவுத் தூக்கம் பாதிக்கப்படக் கூடாது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். வீட்டிலிருக்கும் நாள்கள் தானே என்று இரவு தாமதமாகத் தூங்குவது, காலையில் தாமதாக எழுவது இரண்டையும் தவிர்க்க வேண்டும். மனிதன் ஆழ்ந்து உறங்கும்போதுதான் உடலில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் சைட்டோகின்ஸ் என்ற புரதச்சத்து உற்பத்தியாகும். இரவு நேரத்தில் எளிய உணவுகள், தூங்குவதற்கு முன்பாக கேட்ஜெட் பயன்பாடுகளைத் தவிர்த்தல் ஆகியவை நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். நீர்ச்சத்துள்ள உணவுகள் தண்ணீரையே குடித்துக்கொண்டிருக்காமல் சமைத்த சோற்றிலிலிருந்து வடித்த கஞ்சித் தண்ணீர், பழைய சாதத்தில் ஊற்றி வைத்த தண்ணீர், நீர் மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை வெட்டி அப்படியே சாப்பிட வேண்டும். குழந்தைகள் பழங்களை விரும்பிச் சாப்பிடவில்லையென்றால் தேன் கலந்து கொடுக்கலாம். உடல் இயக்கம் மிகவும் குறைந்துவிடும் என்பதால் சோறு, இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு பிற்பகல் 2.00க்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம்

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர். எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது. எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா - 3 பேர் பூரண குணம்!

Image
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் இரண்டு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 122 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கம் கல்முனை நகர் முடக்கம்

Image
ஊரடங்கை நீக்கினாலும் தொடர்ந்தும் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி அரசு முன்னெடுக்கும் கொரனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்  கடந்த மூன்று தினங்களாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம்  இன்று  திங்கட் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட போதிலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கல்முனை கொரனா செயலணியின் தீர்மானத்துக்கமைய கல்முனை வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பன திறக்கப்படவில்லை. சுகாரார திணைக்கள அதிகாரிகள் , கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , இராணுவ அதிகாரி, பிரதேச செயலாளர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் அடங்கலாக கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான கல்முனை கொரனா செயலணி எடுத்த முடிவின் பிரகாரம் இன்று   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வர்த்தக நிலையங்கள் , பொதுச்சந்தை என்பவற்றை தொடர்ந்தும் மூடியதனால் பெருந்தொகை மக்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒன்று கூடுவதை தவிர்க்க முடிந்துள்ளது. பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடரந்தும் மூடப்பட்டிருந்த போதிலும் அரச தனியார் வங்கிகள் , சதோச ,பூட் சிற்றி விற்பனை நிலையங்கள் த

ஹட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Image
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனை கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப்பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, " தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹட்டனுக்கு அழைத்து வந்துள்ளார். 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். அதன்பின்னர் திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு 16, 17 ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளை பக

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக அதிகரிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போன்று பரவி வருவதால் பலியோனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரழந்தோரின் எண்ணிக்கையும் அஞ்சப்படும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று மதியம் நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,060 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேரும், ஸ்பெயினில் 6,528 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 785 பேர் குணமடைந்துள்ளனர்.

மட்டு. தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

Image
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள்

Image
கொரோனா கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமைய நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ நேற்று தெரிவித்திருந்தார்.. மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான இவர் ,இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக் காரணமாக மரணமான முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தகது

கொரோனா சந்தேகத்தில் கடலுக்கு சென்ற மீனவரை மீண்டும் அழைத்து வந்த கடற்படை!

Image
திருகோணமலை காவல்துறையினரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை இன்று (2020 மார்ச் 29,) நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நபர் திருகோணமலை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபின் ரகசியமாக மீண்டும் கரைக்குத் திரும்ப முயன்கிறார் என்று திருகோணமலை காவல்துறையினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்ற படகை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் பின் குறித்த நபர் பயணித்த படகு உட்பட மேலும் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் கடற்படை கைது செய்துள்ளதுடன் படகுகளில் பயணித்த 10 நபர்களையும் கண்டுபிடித்து திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இந்த 03 படகுகளையும் கடற்படை இன்று (29) அதிகாலை கரைக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர், அனைத்து ப

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

Image
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உய

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.

Image
இன்று (28) இரவு 8.00 மணியளவில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையின் முதலாவது மரணம்

Image
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக நண்பர்களுக்காக

Image

அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைப்பேசி இலக்கங்கள்

Image
அத்தியாவசிய பொது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரிமாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசி இல :- 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இல :- 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 தொலைநகல் இல :- 0112333066, 0114354882 மின்னஞ்சல் - ptf@pmoffice.gov.lk

கல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

Image
"கொரோனா கொவிட் 19" வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் . விசேட அதிரடிப்படை,பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் கல்முனை நகரத்தை சுத்திகரித்து தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. கல்முனை பஸ் தரிப்பு நிலையம் ,மக்கள் ஒன்று கூடும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதைக்காணலாம்

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Image
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்த அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளர்!

Image
மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டுள்ளார். மத்திய மாகாணத்தில் முதலாவது கொவிட் 19 வைரஸ் தோற்று பரவிய ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 15 ம் திகதி இந்தியாவிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்தவர் என்றும் இவர் இந்தியாவிலிருந்து வந்த விடயம் தொடர்பாக எவருக்கும் அறிவிக்கவில்லை. என்றும் குறித்த நபர் தனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் இன்று (28) கண்டி வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற பின்பே இவருக்கு கொவிட் 19 வைரஸ் பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் இரு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் படுவதாகவும் இது குறித்து மருத்துவ அறிக்கையினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்ற

திங்கட் கிழமை ஊரடங்கு நீக்கினாலும் கல்முனையில் வர்த்தக நிலையங்கள் திறக்க முடியாது

Image
  கொரானா  வைரஸ் பரவுவதை தடுக்கும் முகமாக எதிர்வரும்  திங்கட் கிழமை ஊரடங்கு  சட்டம்  நீக்கப்பட்டாலும்  கல்முனையில்  வர்த்தக நிலையங்கள் ,பொது சந்தை திறக்கப்படமாட்டாது  மீறி திறந்தால் திறக்கப்படுகின்ற வர்த்தக நிலையங்களின் வியாபார உரிமைப்பத்திரம்  மாநகர சபை கட்டளை சட்டத்தின் கீழ் இரத்து செய்யப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார் . கொரானா  செயலணியின்  03ஆவது அமர்வு இன்று    கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடை பெற்றது. பிரதேச செயலாளர்கள் ,பொலிஸ் ,இராணுவ ,கடற்படை அதிகாரிகள் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதார வைத்திய அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்கள்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில்  இதனை  கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார் . சுகாதார திணைக்களம் வர்த்தக நிலையங்களை  திறப்பதற்கு தங்களின்  நியாயபூர்வமான எதிர்ப்பு கருத்தினை தெரிவித்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.