Posts

Showing posts from April, 2011

மே 31ம் திகதிக்கு முன் தேர்தல் நடைபெறலாம்?

Image
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் மே 31ம் திகதிக்குப் பின்னர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடுமென நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியம நேரத்தை பரவச்செய்தல்

Image
  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்திற்கிணங்க, தேசிய நேர மற்றும் மீடிறன் நியமங்கள், அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் தேசிய ஆய்வு கூடத்தினால் பேணப்படுகின்றன. இலங்கையின் நியம நேரமானது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு ( UTC ) துன்னதாக 5 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களாகும். ஒருங்கிணைக்கப்படட சர்வதேச நேரம் என்பது ( UTC ) சர்வதேச நிறைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் இவங்கையில் பேணப்படுகின்ற நேரத்தினையும் குறிக்கின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் ( UTC ) நேரத்திற்கான சட்ட அடிப்படையில் நிறைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச பணியகத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட சர்வதேச நேர அளவீடாகும்.இம்முறையானது கடிகார சுழற்சியினைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரத்தின் சர்வதேச நியமமானது பாரிசிலுள்ள நிறைகள் மற்றும் அள

கல்முனை ஸாஹிரா, மஹ்மூத் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை

Image
கல்முனையின் பிரபல பாடசாலைகளான ஸாஹிரா தேசியக் கல்லூரி, மஹ்மூத் மகளிர் கல்லூரிகளிலிருந்து க.பொ.த உயர்தரம் பயில்வதற்கு 433 பேர் தகுதி பெற்று கல்முனை வலயத்திலும் தேசிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலும் சாதனை படைத்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதரணதர பரீட்சை முடிவுகளின்படி மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 4 மாணவிகளும் ஆங்கில மொழி மூலம் 2 மாணவிகளுமாக 6 மாணவிகள் 9 பாடங்களிலும் “ஏ’ தரச்சித்தியையும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒரு மாணவனும் அதிதிறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் ஏ.ஏ.எப்.இன்சிராஹ், எம்.ஐ.எப்.ஸஹானா, எம்.எச்.எப்.நுஸ்ரா பானு, எம்.ஐ.எம்.எப்.அப்ஸானா அபாப், எஸ்.ஐ.எம்.எப்.நுப்லா, ரீ.எச்.ஆர்.ஆகானி, ஆகிய மாணவிகளும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் எம்.எப்.அஹமட் றிபாத் என்ற மாணவனுமே சகல பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 96 வீதமான மாணவிகள் சித்தியடைந்திருப்பதுடன், 273 மாணவிகள் உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளதுடன்

தனி அலகு அங்கீகாரமும் அதிகாரப் பகிர்வுமே தீர்வு

Image
மு.கா.. செயலாளர் ஹஸன் அலி எம்.பி. சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களைத் தனித்தனி அலகுகளாக அங்கீகரித்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக் கப்படுவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைத்த யோசனைத் திட்டங்களில் இதனைப் பல தடவைகள் குறிப்பிட்டிருந்த தாகவும் ஹசன் அலி வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் இவ்வாறு கூறினார். சிறுபான்மைச் சமூகங்கள் தனித்தனி சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, கெளரவிக்கப்பட்டு அரசாங்கம் அவர்களுக்கும் அதிகாரத்தில் பங்கைக் கொடுக்க வேண்டும் என்றும், உலகின் பல நாடுகளில் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட ஹசன் அலி, இரு சமூகத்திற்கும் ஒரு தேவை ஏற்படவேண்டுமாயின் இரண்டு சமூகமும் உடன்பாடொன்றுக்கு வரவ