Posts

Showing posts with the label பாலியல்

8வயது பாலகிக்கு 53 கிழவனால் பாலியல் துன்புறுத்தல்

Image
53 வயது முதியவரால்  8வயது சிறுமி  பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவம் கல்முனை பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலை ஒன்றில் சிகிச்சைக்குட்படுதப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் நேற்று  கல்முனையில் இடம் பெற்றுள்ளது . பாலியல் குற்றம் புரிந்தவர் என்ற சந்தேகத்தில் 53 வயதான அந்த முதியவர் கல்முனை பொலிசாரினால்  கைது செய்யப்பட்டு விச்சாரணையின் பின்னர் இன்று  வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கல்முனை மாநகர சபையில் சுகாதார தொழிலாளியாக பணி  புரிகின்றவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் - எச்சரிக்கை சுவரொட்டிகள்!

Image
வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன.  இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்று வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன

விலைமாதுவாக நடிக்கிறார் ஸ்ரேயா

Image
புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் பழைய நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் புதுமுக நடிகைகளுக்கு இணையாக ஈடுகொடுக்க கடுமையாக போராடி வருகிறார்கள். சிலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பீல்டு அவுட்டான நடிகைகளின் பட்டியலில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் விலைமாது கேரக்டர். விலைமாதுவாக நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயாக கூறியுள்ளதாவது, படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

1000 ஆண்களுடன் உறவுகொண்ட பெண்!

Image
தான் பாலியலுக்கு அடிமை என்கிறார். - பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார். கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண்  தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார். இவர் 15 வயதில் கன்னித்தன்மையை இழந்தாராம். 17 வயதையடைந்தபோது ஏற்கெனவே 40 பேருடன் உறவுகொண்டிருந்தாராம். "மக்கள் பொதுவாக பாலியலுக்கு அடிமையாதலை பெண்களுடன் தொடர்புபடுத்த மாட்டார்கள். பாலியல் உறவை தவிர்ப்பதற்கு காரணம் கூறுபவர்களாகத் தான் நாம் (பெண்கள்) இருப்போம். ஆனால் எனது நிலை வித்தியாசம். நான் நாள் முழுவதும் செக்ஸ் பற்றி எண்ணிக்கொண்டிருப்பேன்" என கிறிஸ்டல் வாரென் தெரிவித்துள்ளார். அவர் பாலியல் தொழிலாளியாக தொழில்புரிந்ததில்லை. தற்போது கடையொன்றில் முகாமையாளராக பணியாற்றுகிறார். வார இறுதி நாட்களில் பகலில் மதுபான விடுதிகளுக்கோ  தேனீர் விடுதிகளுக்கோ சென்று யாரேனும் ஆணை தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்துவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம் அவர். ஒரு மோசமான நாளில் 24 மணித்தியால இடைவெளியில் 7 பேருடன் உறவுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். '