Posts

Showing posts from April, 2016

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும்....

Image
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் எஸ்.எம்.முஹம்மட் அலி தனது 32 வருடகால கல்விச்சேவையிலிருந்து 2016.05.01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது 60வது வயதில் ஓய்வு பெறுவதையொட்டி 2016.04.30ஆந் திகதி சனிக்கிழமை கல்லூரி திறந்த வெளியரங்கில் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது. புதிதாக கல்லூரி அதிபராக கடமையேற்கவிருக்கும் பிரதி அதிபர் அலி சப்றி அவர்களின் தலைமையில் கல்லூரி அதிபரின் மகத்தான பிரியாவிடை வைபவமும், மாணவர் பரிசளிப்பு விழாவும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ Z.A.நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ அப்துல்லா மஹ்ரூப், கௌரவ இம்ரான் மஹ்ரூப் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஆர்.எம்.அன்வர், கௌரவ ஜே.எம்.லாஹிர், கௌரவ நஜீப் ஏ மஜீத் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருதமுனை பறக்கத் டெக்ஸ் உதவி

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை எக்ஸ் றே  பிரிவுக்கு  மருதமுனை  பறக்கத் டெக்ஸ் நிறுவனம் ஒரு தொகை எக்ஸ்றே  கவர்  அன்பளிப்பு செய்துள்ளது. பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின்  பணிப்பாளர்  எம்.ஐ.ஏ.பரீட்  தனது சொந்த நிதியில் இந்த உதவியை வழங்கினார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் பறக்கத் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர் . இந்த உதவியை வழங்கிய பறக்கத் நிறுவனத்துக்கும் அதன் பணிப்பாளருக்கும் வைத்திய அத்தியட்சகர் நன்றி தெரிவித்தார் 

நற்பிட்டிமுனை சாதனை மாணவர்களுக்கு கல்வி அமைச்சில் பாராட்டு

Image
கல்முனை கல்வி வலயத்தில் சாதனை படைத்த  நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகா வித்தியாலயம் மற்றும்  லாபீர் வித்தியாலய மாணவர்களுக்கு கல்வி அமைச்சில் பாராட்டு வைபவம் நேற்று இடம் பெற்றது . சாதனை மாணவர்களுக்கு நினைவு சின்னம் தங்கப் பதக்கம், சான்றிதழ்  வழங்கி கல்வி  ராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன்  கௌரவித்தார். நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் அனுசரணையுடன்  இந்த கௌரவிப்பு விழா நேற்று செவ்வாய்க் கிழமை (26) கல்வி ராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது. நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்பாளருமான சீ .எம்.ஹலீம்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சி.எம்.முபீத்  உட்பட  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர்களான திருமதி முனாசீர்,வீ.ஸம் ஸம் ,ஏ.சாலித

ஊடகவியலாளர் மப்றுாக் மனைவி வபாத்

Image
மருதமுனை மைதான வீதியைச் சேர்ந்த ஆசிரியை ஏ.எச்.ஹசனா பானு வபாத்தானார் ஏ.ஆர்.ஏ.கலீலின் மகளான இவர் ஊடகவியலாளர் யூ.எல்.மப்றுாக் இன் மனைவியாவார் இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்திய சாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலன்  இன்றிரவு காலமானார் . இவர் களை நாசினி அருந்திய ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக வைத்திய சாலை வட்டாரம் தெரிவிக்கின்றது 

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் தொடரும் பாரிய சத்திர சிகிச்சைகள்

Image
The First Laparascopic Liver Cystectomy done by Dr. A W M. Sameem Consultant Surgeon on 20/4/2016 in the base hospital Sammanthurai history .. சம்மாந்துறை வைத்தியசாலையில் மட்டுமல்ல இப்பிரதேசத்திலே செய்யப்பட்ட ஒரு முக்கிய சத்திரசிகிச்சையாக   இதைக்குறிப்பிடலாம். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருக்கும் வளத்தைப்பயன்படுத்தி அரிய சத்திர சிகிச்சையொன்றை Dr. AWM.சமீம் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளார் .. ஈரல் கட்டியொன்றை கமராமூலம் வெட்டியெடுத்தது Dr. AWM Sameem Consultant Surgeon ன் திறமையென்றுதான் கூறவேண்டும். அக்கட்டியின் நிறை சுமார் மூன்றரை கிலோவாகும்.(3.5Kg). இவ்வாறு விதவிதமான சத்திரசிகிச்சைகள் Laparascopy மூலம் செய்யப்படுவது சிங்கப்பூரைப்போல் உள்ளது எனலாம். இதில் புதுமை என்னவென்றால் வயிற்றில் வெட்டுக்காயம் இல்லாமல் சத்திர சிகிச்சை   செய்து முடிக்கப்பட்டமையேயாகும்.

நட்பிட்டிமுனையில் மகுடம் சூட்டும் மகிழ்ச்சிப் பெருவிழா

Image
(யு.எம்.இஸ்ஹாக்) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள  மகுடம் சூட்டும் மகிழ்ச்சிப் பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடை பெறவுள்ளது . கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை பெறவுள்ள இவ்விழாவில்  கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்..நஸீர்  பிரதம அதிதியாகவும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நற்பிட்டிமுனை கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தல்,துறைசார் உயர் பதவிகளில் பணியாற்றுபவர்களை கௌரவித்தல், 2015ஆம் ஆண்டு அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களை கௌரவித்தல் , கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர்கள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் சிதியடைந்தவர்களை  கௌரவித்தல்  போன்ற நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன . மர்ஹூம்  தமிழாசான் ஏ.காசிம் பாவா  நினைவரங்கி நடை பெறவுள்ள நிகழ்வில்   விசேட அழைப்பாளராக  கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ.சமது  கலந்து சிர்ப்பிக

நாட்டில் சிறந்ததொரு வைத்தியசாலையாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையை மாற்றுவேன்

Image
-  பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூர்- சம்மாந்துறை வைத்தியசாலை சகல வளங்களுடனும் தரமுயர்தப் பட வேண்டிய  சூழல்  உருவாக்கப் பட்டுள்ளது . இந்த சந்தர்ப்பத்தை  வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர்  உட்பட வைத்திய அதிகாரிகளும் அபிவிருத்திக் குழு அங்கத்தவர்களும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சம்மாந்துறை  வைத்தியசாலையில் திறமை மிக்க சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் திறமை மிக்க பொதுவிதிய நிபுணர்  இருவர் நியமிக்கப் பட்டிருக்கும் நிலையில்  இவர்களின் வைத்திய சேவையைப் பெற  பொலநறுவை,திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அம்பாறை  மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசத்தவர்களும்  சம்மாந்துறை வைத்திய சாலைக்கு வருகை தருகின்றனர் . இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன்  ஊழியர் பற்றாக்குறை,இடப்பற்றாக்குறை, மற்றும்  உபகரணப் பற்றாக்குறை நிலவுகின்றன . குறித்த விடயம் தொடர்பாக  சத்திர சிகிச்சை நிபுணர் DR. AWM. சமீம் , பொது வைத்திய நிபுணர் DR.ஆபிதா ஆகியோரால் வைத்தியசாலை அத்தியட்சகரின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம்.மன்சூரின்  கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. சம்மாந்துறை வைத்திய

கல்முனை செலான் வங்கி கிளையில் இடம் பெற்ற புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

Image
( யூ.எம்.இஸ்ஹாக் ) புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை சுப வேளையில் கல்முனை செலான் வங்கி கிளையில்  நடை பெற்றது .  வங்கி முகாமையாளர்  திருமதி .பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  சமயப் பெரியார்கள் ,வாடிக்கையாளர்கள்  என  கலந்து  கொண்டனர் . நிகழ்வில்  பரிசுகள்  வழங்கப் பட்டதுடன்  பால் சோறு ,பலகாரமும் பரிமாறப் பட்டன . வங்கி உதவி முகாமையாளர்   உட்பட  ஊழியர்கள் சகலரும் கலந்து கொண்டனர் .