Posts

Showing posts from April, 2013

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைத் தீர்மானங்கள்

Image
கிழக்கு   மாகாணசபையின்   அமைச்சரவைக்   கூட்டம்   சென்ற 22.04.2013 ம்   திகதி   கிழக்கு   மாகாண   முதலமைச்சர்   நஜீப் அப்துல்   மஜீட்   அவர்களின்   தலமையில்   நடைபெற்ற அமைச்சரவைக்   கூட்டத்தின்   போது   எடுக்கப்பட்ட தீர்மானங்களை   கிழக்கு   மாகாண   அமைச்சரவையின் பேச்சாளரும் ,  வீதி   அபிவிருத்தி   அமைச்சருமான எம் . எஸ் . உதுமாலெப்பை   அவர்கள் பத்திரிகையாளர்   மகாநாட்டில்   வெளியிட்டார் . அத்தீர்மானங்கள்   பின்வருமாறு . 01.  அக்கரைப்பற்று   கல்வி   வலயத்தில்   தொடர்ச்சியாக   நிலவிவரும்   ஆசிரிய   வெற்றிடங்களை நிரப்புதல் .  அக்கரைப்பற்று   வலயத்திற்குட்பட்ட   பொத்துவில்   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில்   97  ஆசிரிய   வெற்றிடங்களும் ;,  அட்டாளைச்சேனை   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில் 31  ஆசிரிய   வெற்றிடங்களும் ,  அக்கரைப்பற்று   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில்  5 ஆசிரிய   வெற்றிடங்களும் ;  மொத்தமாக   அக்கரைப்பற்று   கல்வி   வலயத்தில்  133  ஆசிரிய வெற்றிடங்கள்   நீண்ட   காலமாக   நிலவி   வருவதால்   பல   பாடசாலைகளின்   கல்வி   வளர்ச்சி பாதிப்படை

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இ கணனி கல்வி மையம் திறந்து வைப்பு

Image
தெயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இ கணனி கல்வி மையம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.வீ.முஜீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பேற்று, தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கணனி மையத்தினை திறந்து வைத்தார். பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய நிலையமாக 4 மில்லியன் ரூபா செலவில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வருகையினை நினைவு கூறும்வகையில் மரக் கன்றொன்றும் நட்டிவைக்கப்பட்டது. அத்தோடு வித்தியாலய அதிபரினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் பி.

இலங்கையிலுள்ள 31 இலட்சம் நாய்களில் 60 வீதமானவை கட்டாக்காலிகள்

Image
இலங்கையிலுள்ள 31 இலட்சம் நாய்களுள் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களென தகவல் வெளியாகியுள்ளதாக கால்நடை வைத்தியப் பணிப்பாளர் டொக்டர் எம். ஹரிச்சத்திர தெரிவித்தார். இலங்கையில் 31 இலட்சம் நாய்கள் இருந்த போதும் 12 இலட்சம் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது. 19 இலட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. நாய்களுக்கான தடுப்பூசிக்கு 100 ரூபா நிதியை அரசு செலவிடுகிறது. கட்டாக்காலி நாய்களின் தடுப்பூசிக்கு 30,000 ரூபா வரை செலவாகிறது. நாய் கடித்து மூன்று மணித்தியாலங்களுள் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் இருக்கும் எட்டுப் பேருள் ஒருவருக்கு ஒரு நாய் என்ற வீதத்தில் நாய்கள் உள்ளன. ஆனாலும் வருடத்துக்கு ஒரு முறையேனும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்க பலர் ஆர்வம் செலுத்துவதில்லை. விசர் நாய்கடி ஒரு ஆட்கொல்லி நோயாகும். வருடாந்தம் எட்டுப் பேர் இந்த நோயினால் மரணிக்கின்றனர். மூச்சு விட கஷ்டம், கண்சிவப்பாகுதல், சளி வருதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் என்றும் அவர் தெரிவித்தார்

சாரணியம் தலைமைத்துவப் பண்புகளை மட்டுமல்ல நல்ல ஒழுக்க பண்புகளையும் கற்றுத் தருகின்றது.

Image
பல பாடசாலைகளில் இன்று மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடு அருகி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாணவர்கள் பாடசாலைகளில் புறக்கிருத்திய செயற்பாடுகளில் பங்கு பெற ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியர்களும் பெற்றார்களும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும் என சிரேஸ்ட விரிவுரையாளரரும் கல்முனை மாவட்ட கௌரவ மாவட்ட ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா தெரிவித்தார். கல்முனை வை.எம்.சீ.ஏ சாரணர்களின் ஒரு நாள் பாசறை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது . கல்முனை வை.எம்.சீ.ஏ செயலாளர் ஏ.பி.பத்லோமியஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முஸ்தபா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எதிர் காலத்தில் நற்பிரஜைகளை உடல்ரூபவ்உளரூபவ்சமூக அபிவிருத்தி கொண்டவர்களாக உருவாக்குவது அனைவரது கடமையாகும். சாரணியம் தலைமைத்துவப் பண்புகளை மட்டுமல்ல நல்ல ஒழுக்க பண்புகளையும் கற்றுத் தருகின்றது. இன மத மொழிகளுக்கப்பால் பணியாற்றும் இவ்வமைப்பில் இணைந்து கொள்வதன் மூலம் சிறந்த பயன்களை பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.