Posts

Showing posts from February, 2013

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையைஅரசாங்கம் பொறுப்பேற்பதென்பது பாவகரமான ஒரு நடவடிக்கையாகும்.

Image
-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு- ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்காதென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று (28) பிற்பகல் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்: ஒரு சமயத்துக்கு உரிய ஒரு பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதென்பது ஒரு பொருத்தமான நடவடிக்கை அல்ல. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்பது முறையல்ல என்று மல்வத்தை பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது சில குழுவினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அர்த்தம் அற்ற பாவகரமான ஒரு நடவடிக்கையாகும். இப்பிரச்சினை தொடர்பில் இன்று அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சர் சம்பிக்க ரனவக்கவுடன் சுமுகமாகப் பேசிக்கொண்டிருப்பதை நான் அவதானித்தேன் என்றும் அமைச்சர் கூறினார். 

சந்தாங்கேணி விளையாட்டு மைதானக் காணி அயலவர்களினால் சுவீகரிப்பு; முதல்வர் அதிரடி நடவடிக்கை!

Image
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானக் காணி சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் நேற்று  (27.02.2013) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது. சந்தாங்கேணி மைதானம் நாளுக்கு நாள் அயல்வாசிகளினால் சவீகரிக்கப்பட்டு வருவது  தொடர்பில் விளையாட்டுக் கழகங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆனையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்டீன், எச்.எம்.எம்.நபார், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்ட போது முதல்வரினால் மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டது.

கல்முனை கார்மேல் பற்றிமா பாராட்டு

Image
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை யில் சித்தி அடைந்த ஐந்தாம் தர மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு  தலைமையில் நடை பெற்றது. இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அடிகளார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் , கல்முனை வளைய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு!

Image
பிந்திய செய்தி  கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண  நிகழ்வில் நடப்பட்ட நினைவு கல்  மற்றும் பதாகை என்பன இனம் தெரியாதவர்களால் அன்றிரவு உடைத்து சேதப் படுத்தப்பட்டுள்ளது  கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு! கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக் கூட்டமும் இன்று (27.02.2013) மாலை நடைபெற்றது. இவ்வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடற்கரை பள்ளி வீதியின் பிரதான வீதிச் சந்தியிலும் பொதுக் கூட்டம் அல்-பஹ்றியா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது. கடற்கரைப்பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டத்தினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

ஊஞ்சலில் ஆடிய சிறுமி சேலை கழுத்தில் இறுகி உயிரிழப்பு

Image
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் கிராமத் தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று (25) திங்கள் கிழமை ஊஞ்சல் கட்டி விளை யாடிய சேலை கழுத்தில் இறுகியதால் ஸ்தலத் தில் உயிர் இழந்துள் ளார். மேற்படி கிராமத் தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்றழைக்கப்படும் 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளவராவார். வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி கற்கும் இம் மாணவி நேற்று விடுமுறை என்பதால் வீட்டு வளையில் சீலையினால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார். இவர் விளையாடிக் கொண்டு இருக்கும் வேளையில் ஊஞ்சலுக்காக கட்டப்பட்டிருந்த சீலைக்குள் கழுத்து இறுகியதால் இவர் உயிர் இழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இவர் சம்ப வேளையில் தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் தெரிய வருகின்றது. இம் மரணம் தொடர்பாக வாழை ச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலாவணை சுனாமி வீட்டுத்திட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு

Image
கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம் பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் திறந்துவைக்கப்பட்டு இரண்டு வாரங்களாக இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றிவருகின்றது.  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நீலாவணை சுனாமி வீட்டுத்திட்ட வாழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  குறிப்பாக இவ்வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த்தொட்டி சீராக இயங்காமையினால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு அதனை சுத்திகரிப்பதற்கு பணிப்புரைவிடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. அத்தோடு இப்பிரச்சினை தொடர்ச்சியாக இருப்பதனால் இதற்கான நிரந்தர தீர்வினையும் மிக விரைவில் பெற்றுத்தருவதாக ம

ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவிப்பு

Image
நாட்டில் சார்சையை ஏற்படுத்தி வந்த ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.இம்மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்றது. ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை. எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என உலமா சபை தெரிவித்துள்ளது

புனாணையில் முஸ்லிம் அதிகாரியிடம் இருந்து கார் பறிப்பு!

Image
பிந்திய செய்தி  வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து முஸ்லிம் அதிகாரி ஒருவரிடம் இருந்து காரொன்றை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இறந்துள்ளனர். முன்னதாக துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்து இவ்விருவரும் தப்பிச்சென்று விட்டனர். எனினும் திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன் தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர். அந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் சற்று முன்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் கொள்ளை கோஷ்டியின் உறுப்பினர்கள் என்றும் நகைகள் மற்றும்  பணங்களை கொள்ளையடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில் கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. காத்தான்குடியை சேர்ந்த எச்.எம்.கசியுதீன் என்பவரின் பாவனையில் உள்ள காரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளர

பளீல் மௌலானாவின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நல்லடக்கம்;

Image
Faleel Moulana கிழக்கிலங்கையின் மூத்த கல்விமான்களுள் ஒருவரும் மார்க்க அறிஞரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான மருதமுனை சமூக ஜோதி அல்ஹாஜ் அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பளீல் மௌலானா (வயது-92) அவர்கள் இன்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நிலையில் காலமானார். இவர் யெமன் தேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட- அஹ்லுல் பைத் எனும் முஹம்மத் நபி 9ஸல்) அவர்களின் குடும்ப வாரிசைச் சேர்ந்தவரான கலீபத்துஷ் ஷாதிலி அஸ்செயயித் அஷ்ஷெய்க் மௌலவி ஐதுருஸ் மௌலானா அவர்களின் புதல்வர்களுள் ஒருவராவார். அத்துடன் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி அமீருல் அன்ஸார் மௌலானா, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா, கல்முனை பற்றிமா கல்லூரி ஆங்கில ஆசிரியர் ஜின்னா மௌலானா ஆகியோரினதும் நான்கு பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் செனட்டர் மசூர் மௌலானா, மர்ஹூம் கலைச்சுடர் சக்காப் மௌலானா ஆகியோரின் சிறிய தந்தையுமாவார். அன்னாரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில்  அமைச்சர்களான ரவூ

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவுகள் திறந்து வைப்பு

Image
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக் கூடம், தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபாலா பிரதம அதிதியாகவும், மருத்துவ சேவைகள் பணிப்பாளர் டாக்டர் லால் பனாப்பிட்டிய மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இணைப்பாளர் டாக்டர் எம்.றிபாய் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியசாலையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடலும் இடம்பெற்றன.

அம்பாறையில் அவசர நெல் அறுவடை

Image
அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெருவெள்ளத்தின் பின்னர் எஞ்சிய விளைந்த வேளாண்மைகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். வயல் வெளிகள் இன்னமும் ஈரமாகவெ உள்ளன. இதனால் பிரதான வீதிகளிலும், பாடசாலைகளிலும் நெல்லை உலர வைக்கின்றார்கள்.

உள்ளுராட்சி டிப்ளோமாதாரிகளுக்கு அமைச்சர் அதாவுல்லாவினால் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

Image
உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தில் உள்ளுராட்சி உயர்தர டிப்ளோமா பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 55 பேருக்கு இன்று பி.எம்.ஜ.சி.எச் இல் அமைச்சர் அதவுல்லாவினால் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.கே.ரணவக்க, இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் தலைவர் ஜ.ஏ.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்மற்றும் கிழக்கு முதல்வர் நஜீப் ஈரான் விஜயம்!

Image
ஈரான் நாட்டின் தலைநகரமான டெக்ரானிற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நாளை வெள்ளிக்கிழமை (22.02.2013) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். டெக்ரான் நகரின் மேயரின் விசேட அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் கல்முனை முதல்வர் மூன்று நாட்கள் அங்கிருந்து கல்முனை நகரின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வினைத் திறனுள்ள செயலாற்றுகை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார். தனது காலப்பகுதிக்குள் தன்னால் முடியுமான அபிவிருத்திகளையும் உதவிகளையும் இம்மாநகரத்திற்கு செய்யவேண்டும் என்ற உத்வேகத்தோடு செயற்படும் முதல்வரின் இவ்விஜயம் கல்முனை நகரிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதும் பயணிக்கவிருப்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமனம்

Image
மாகாண சபை உறுப்பினர்களுக்கு  ஒதுக்கியுள்ள திணைக்கள விபரம் கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இவர்களுக்கான நியமன கடிதங்கள் முதலைமச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இந்த கண்கானிப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளத்திற்கு மேதிகமாக 40,000 ரூபா மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.  

கல்முனையில் 55 டெங்கு நோயாளர்கள்; ஒருவர் மரணம்

Image
கல்முனைப் பிரதேசத்தில் 2013 ஜனவரி தொடக்கம் இதுவரை 55 டெங்;கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தெரிவித்துள்ளது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபை, மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இவர்களில் ஜனவரி மாதத்தில் 29 பேரும் பெப்ரவரி மாதத்தில் 26 பேரும் உள்ளடங்குகின்றனர். மேலும் இதில் கல்முனை, கல்முனைக்குடி பிரதேசத்தில் 24 நோயாளிகளும், மருதமுனை பிரதேசத்தில் 31 நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.  இதேவேளை இன்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றயீஸ் தலைமையிலான குழுவினர் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை வரை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியை சேர்ந்த 50 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர் என வைத்தியசாலையின் வைத்

முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் கி.மா.சபையில் நிறைவேற்றம்!

Image
நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று சமர்பிக்கபட்ட கண்டனத் தீர்மானம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று  செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மதிய இடைவேளைக்குப் பின்னர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இதன்போது ஹலால் தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அதவேளை மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க முன்மொழிந்த திருத்தத்துடன் குறித்த கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சமாதான நீதவான்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த பணம் அறவிட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும் - நீதி அமைச்சு

Image
JP  ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு சமாதான நீதவான்களுக்கோ வேறு நபர்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் நீதி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.  சத்தியக்கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் சமாதான நீதவான்கள் சிலர் பணம் அறவிடுவதாக நீதி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. இதனையெடுத்தே இவ்வேண்டுகோளை நீதி அமைச்சு விடுத்துள்ளது.  மேலும் அவ்றிக்கையில்  ஆவணங்களை எவற்றையும் உறுதிப்படுத்துவதற்காக சமாதான நீதவான்கள் எவ்விதமான பணத் தொகையையும் அறவிடக் கூடாதென அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் நீதி அமைச்சு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.  சமாதான நீதவான் பதவி இலவசமாக வழங்கப்படும் சேவை சம்பந்தமானது என்பதோடு ஆவணங்களை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வரும் பொது மக்களிடம் இருந்து பணம் கேட்டுப் பெறுவதற்கு அப்பதவி வகிப்போருக்கு எத்தகைய அதிகாரமும் கிடையாது.  இலவசமாக வழங்கப்படவேண்டிய இச்சேவைக்காக பணம் அறவிடும் சமாதான நீதவான்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, நீதி அமைச்சு, பொலி

பொது பல சேனாவுக்கு எதிராக கி.மா. சபையில் கண்டனப் பிரேரணை; மு.கா.குழுத் தலைவர் ஜெமீல் சமர்ப்பிக்கிறார்

Image
நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான் ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார். இன்று காலை நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணை சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண சபையின் இன்றைய மாதாந்த சபை அமர்வில் இன்னும் சில நிமிடங்களில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்று மிகவும் அமைதியாக இருக்கின்ற நமது நாட்டில் ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முஸ்லிம்கள் வேறுபல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன. இச்செயற்பாடுகளை கிழக்கு மாகாண