Posts

Showing posts from December, 2017

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

Image

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Image
2018ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.முதலாம் தவணைக்குரிய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, சகல பாடசாலைகளையும் டெங்கு அற்ற வலயங்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடக்கம் ஆசிரிய – ஆசிரியைகள் வரை சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள், பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் ஞாயிறு தினங்களில் பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்தும் நட

விளக்கங்களுக்கு மாவட்டதெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும்

Image
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறவுள்ளது. இதனால் இது குறித்து  வேட்பாளர்களுக்கோ வாக்காளர்களுக்கோ விளக்கம் அவசியம தேவையெனில் அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும். தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்   நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. என்றும் குறிப்பிட்டார். புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே சரியான தெளிவு இல்லாததால், அவர்களுக்குத் தெளிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயநத்தார் நள்ளிரவு வழிபாடுகள்

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றன . கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை லியோ அண்டனி  வழிபாடுகளை நடாத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் .  இந்த நள்ளிரவூ ஆராதனை வழிபாட்டில் பிரதேச கிறிஸ்தவ பங்கு மக்கள் ஆலயம் நிறைந்து காணப்பட்டனர் . நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் .. இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும்  இவ்விழாவின் கொண்டாட்டங்களில்  கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி ,குடில்கள்ந,த்தார் பாப்பா ,வாழ்த்து அட்டைகளயும்  பரிசுகளையும் பரிமாறல் ,கிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல் , கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  கிறித்தவ மக்கள்  ஆலயங்களில் ஒன்று கூடி நள்ளிரவு  ஆராதனைகளில் ஈடுபடுவர். கல்முனை பிரதேசத்தில் நீண்ட கால வரலாற்

வேட்புமனுக்களை மீள் பரிசோதிக்கும் பணிகள் ஆரம்பம்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் பரிசோதிக்கும் பணிகள் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பெறப்பட்டு இந்த பரிசீலனை இடம்பெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் உதவி தேர்தல் ஆணையாளர்களினால் தேர்தல்கள் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றைய தினம் மேலும் எட்டு மாவட்டங்களின் உறுதிப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களின் பிரதிகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் எடுத்து வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் வாக்காளர் பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2017 க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உயர்தரம்” (துறைசார் தெரிவுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு)

Image
இச்செயலமர்வில்  •துறைசார் நிபுணர்களின் விளக்கவுரைகள் •பல்கலைக்கழக மாணவர்களுடனான நேரடி கலந்துரையாடல் என்பன நடைபெறக் காத்திருக்கின்றன.அத்துடன் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி தெரிவுகளுக்கான வழிகாட்டல் கையேடும் வழங்கப்படவுள்ளது. இச்செயலமர்வில் பிரதம வளவாளராக சகோ.சாபிர் ஹாஸிம் (Learning motivator personality,Life skills and leadership trainer)CEO, Reality trainer international Pvt Ltd.அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள். துறைசார் விரிவுரையாளர்களாக, உயிரியல் விஞ்ஞான துறை - Dr.MIS.சபீனா (Senior lecturer in biology)department of biological science,SEUSL பெளதீக விஞ்ஞான துறை - Dr.SM.ஜுனைதீன் (Dean,Faculty of engineering,SEUSL) வர்த்தக துறை - Dr.S.குணபாலன் (Dean,Faculty of management,SEUSL) தொழில்நுட்ப துறை -     Mr.CMM.மன்சூர் ( Lecturer in Computer science,SEUSL) கலைத் துறை - Mrs.AWN.நளீபா (Lecturer in sociology,Department of sociology faculty of arts and culture) திங்கட்கிழமை (25 டிசம்பர் 2017) காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை ஹிஸ்புழ்
Image

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு

Image
  கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றில் 2 சுயேற்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்காக  அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு  வருகை தந்த  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் 

அமைச்சர் றிஸாத் பதியுதீன் சிபாரிசில் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயம் தரமுயர்வு

Image
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச பணிப்பாளருமான சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோரின்  கோரிக்கைக்கு அமைய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாத் பதியுதீன் சிபாரிசில் 38வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயம்  1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான ,கணித ,தொழில் நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலயமாக பெயர் மாற்றமும் பெற்றுள்ளது . இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசு பரீட் சையில் சித்தி பெற்ற சாதனை மாணவர்களை பாராட்டி  கெளரவிக்கும் நிகழ்வும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய  தரம் உயர்வு  அனுமதி கடிதம் கையளிக்கும் நிகழ்வும் இன்று  கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,பிரதிக் கல்வ

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்

Image
எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017 .12.12 முதல் 2017.12.21 வரையில் நடைபெறவுள்ளது.  பரீட்சை கலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்கவேண்டும். இவ்வாறு பரீட்சைக்கு சமூகமளிக்கும் போது பரீட்சை அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அவசியம் கொண்டுவரவேண்டும். பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி பரீட்சை அட்டையில் தாம் விண்ணப்பித்துள்ள பாடத்திற்கான மத்திய மற்றும் உறுதிசெய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் சரியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத்திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும். இதேபோன்று பரீட்சையின் போது பரீட்சார்த்திகள

வடக்கு,கிழக்கில் 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று கனத்த மழை

Image
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம் நகர்வு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நகர்ந்ததையடுத்து நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் எனவும் கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பும் 90 முதல் 100 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இவற்றினூடான அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். இதுவரை இலங்கையில் சுனாமி ஏற்படுமென்ற சாத்தியக்கூறுகள் பெருமளவில் கிடையாது என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்: வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கைக்கு கிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலேயே தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது படிப்படியாக பலம் ப

காலநிலை பற்றி அனைவரும் கரிசனையாக இருப்பது அவசியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

Image
இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளது, தாழமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவை நெருங்கும் போது இந்த நிலைமை ஏற்படும். காங்கேசந்துறை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதி கொந்தளிப்பாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.எஸ்.எச்.பிரேமலால் தெரிவித்தார்.  மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் காற்றமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்தை நெருங்கும் போது சில இடங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாண மக்களுக்கு இதன் மூலம் கூடுதலான தாக்கம் ஏற்படலாம். இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை

மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் திறந்த வெளியரங்கு திறந்து வைப்பு

Image
மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ஜெமீல்  சகோதரர்களால் நிர்மாணிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு கல்லூரி பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது . கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளரும் ,தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை  நிறைவேற்றுப் பணிப்பாளருமான சித்தீக் நதீர் , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை  சத்திர சிகிச்சை நிபுணர் சித்தீக் ஜெமீல் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும்  மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  கெளரவ அதிதியாகவும்  கலந்து கொண்டு  கட்டிடத்தை  திறந்து வைத்தனர். அத்துடன் இன்று கல்லூரியில் நடை பெற்ற ஓ.எல்  தின விழாவிலும் இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்  --