Posts

Showing posts with the label பாராபட்சம்

நல்லாட்சியில் அம்பாறை முஸ்லிம்கள் புறக்கணிப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

Image
சவூதி  அரசாங்கத்தால்  இலங்கைக்கு  அன்பளிப்பு செய்யப் பட்ட  பேரீத்தம் பழம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு  இன்னும் வழங்கப் படவில்லை என அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள்  சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம்  தொடர்பாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் , செயலாளர் எம். ஏ.எம். ரஸீன் ஆகியோர் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் , நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு   பேரீத்தம் பழம்  விநியோகிக்கும் நடவடிக்கை புனித நோன்பு ஆரம்ப்பிப்பதற்கு முன்னரே முடிந்து விட்ட நிலையில் முஸ்லிம்கள் நிறைந்து  வாழ்கின்ற   அம்பாறை அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நிறைந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிறைந்துள்ள இம்மாவட்டத்தை நல்லாட்சி  அரசும் புறக்கணிக்கிறது என  சம்மேளனத்தின் செயலாளர்    எம். ஏ.எம். ரஸீன் தெரிவித்தார்  

மோட்டார் சைக்கள் வழங்கக் கோரி அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

Image
இன்று (10.06.2015)அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதுவரை வழங்கப்படாத அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்க கோரிய கவனயீர்ப்பு பேரணி அம்பாறை மணிக்கூட்டு சந்தியில் ஆரம்பித்து அம்பாறை கச்சேரி வரை சென்றது.இறுதியில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது...

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்

Image
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும், திணைக்களங்களிதும் நேர்முகப் பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.  ஒரு குறிப்பிட்ட அமைச்சு, திணைக்களம் நேர்முகப் பரீட்சைக்காக பட்டதாரி பயிலுனர்களை அழைக்கும் போது தகுதியானவர்களை அனுப்பாது தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களையும் மாத்திரமே சம்பந்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் அனுப்பி வருவதாகவும், இதன்காரணமாக தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன,மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக்கூறிவருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிர