Posts

Showing posts from February, 2012

கல்முனை அபிவிருத்திக்கு நாம் ஒரு போதும் தடையல்ல

Image
ஜவாத் , ஜெமீல் அறிவிப்பு  கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். "நான் அறிந்த வரையில் ஆளுநரிடம் 350 மில்லியன் ரூபா செலவு செய்யுமளவுக்கு பணமில்லை. அப்படியான அபிவிருத்தி வேலைகளை செய்வதாயின் கிழக்கு மாகாண சபையின் நிதியிலிருந்து பெற்று தான் செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார். "அவ்வாறு மேற்கொள்வதாயின் மாகாண சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வாறான எந்த நிதியும் கிழக்கு மாகாண சபையிலிருந்து கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படவில்லை" எனவும் ஜவாத் தெரிவித்தார். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பெப்ரவரி 21ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Image
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.  இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது. இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பி.எச்.பியசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா

Image
கல்முனை மாநகர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய 443 மில்லியன் ரூபா இன்று அம்பாறையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜ பக்ச தலைமையில் நடை பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒதுக்கீடு செயப் பட்டுள்ளது 

பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும்

Image
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் - அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான் மற்றும் சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் ஈரா

சகல எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை வெற்றிபெறும் !

Image
ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் மகிந்த சமர சிங்க  நேற்று மாலை உரையாற்றிய படம் 

கல்முனையில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
மேற்குலக நாடுகளை அராஜகத்தை கண்டித்து தாய் நாட்டை காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்றும் கல்முனையில் இடம் பெற்றது . பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்,கல்முனை மாநகர் முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,மாகான சபை உறுப்பினர் துல்சான் ஆகியோரின் பங்களிப்புடன் காமுனை ,சாய்ந்தமரு வாழ் பொதுமக்களும்,கல்முனை மாநகர் சபை உறுப்பினர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கல்முனை நகர்வரை சென்று முடிவடைந்தது, இன்றைய தினம் சாய்ந்தமருது,கல்முனை பிரதேச வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடை பெற்றது.

கல்முனையில் இன்று கண்டன பேரணி!

Image
இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதிலும் மாபெரும் மக்கள் பேரணி இடம் பெற்றது . கல்முனை நகரில் இலங்கை போக்குவரத்து ஊழியர்களால் நடாத்தப் பட்ட ஊர்வல கட்சிகளில் சில 

பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Image
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பன்னாட்டு அரச பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி சமாதானம் அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  அமைச்சர்களில் ஒருவராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று வரவேற்றுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

Image
ஜெனிவாவில் நாளை ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று வரவேற்றுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால் அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும். பொது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாதுகாத்ததால் சிறிலங்கா அரசாங்கம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை. விடுதலைப் புலிகளால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. நாட்டில் அவசரகாலச் சட்டம் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை. ஜனநாயகம்

சாப்பு சட்டம் பிரிவினைக்கு வழி வகுக்கக் கூடாது

Image
வர்த்தகர் சங்கம் அறிக்கை  “கல்முனையில் சாப்புச் சட்டத்தினைநடைமுறைப்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்குவெள்ளிக்கிழமையும்,தமிழர்களுக்குஞாயிற்றுக் கிழமையும் எனதீர்மானித்திருப்பது இரு சமுகங்களைதொடர்ந்தும் பிரித்துவைப்பதற்குஏதுவாகஇருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறுவிளைவிப்பதாகவும் உள்ளது.”எனகல்முனைவர்த்தகசம்மேளனம் விடுத்துள்ளஊடகஅறிக்கையில் தெரிவித்துள்ளது. “மேற்படிவிடயம் தொடர்பாககல்முனைவர்த்தகசம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.ஏ. கரீம்,தவிசாளர் யூ.எல்.எம். பஸீர் ஆகியோர் கையெழுத்திட்டுவெளியிட்டுள்ளஅறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, கல்முனைமாநகரில் வர்த்தகம் புரிந்துவந்தசகலவர்த்தகர்களும் பன்னெடுங்காலமாககல்முனைப் பகுதியின் நிலைமையைப் புரிந்துஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்துவெள்ளிக்கிழமையினைவிடுமுறைதினமாகஏற்றுசாப்புச்சட்டஒழுங்குவிதிகளைநன்குமதித்துசெயற்பட்டுவந்துள்ளனர். விடயம் இவ்வாறிருக்கஒருசிலவர்த்தகர்களின் தனிப்பட்டவேண்டுகோளைநிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைதமிழ் தேசிய கூட்டமைப்புடன் துணைபோயிருப்பதுமிகவும் வேதனைக்குரியதும் வன்மையாககண்டிக்கப்படவேண்டியவிடயமுமாகு

சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

Image
 கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல் நிகழ்வு நேற்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடை பெற்றது. இதில் கல்முனை குடி 01  ,02 ஆகிய கிராம சேவை பிரிவு குழுக்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப் பட்டது   

அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என செய்தியாளர்களிடம் தெரிவிப்பு

Image
அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என  செய்தியாளர்களிடம்   தெரிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர  சபை உறுப்பினர் ஏ.சி.முபீத் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள கல்முனை மாநகர அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமைத்துவம் தடுக்கின்றது என்ற அறிக்கைக்கு  பதில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று இரவு மாநகரசபை உறுப்பினர் ஏ,எம்.பரகத் அவர்களின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரகீப்,ஏ.எம்.பரகத் ,எம்.எல்.சாலிதீன்,ஏ.ஆர்.அமீர்,எஸ்.ஏ.பிர்தௌஸ் ,மற்றும் உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்  அங்கு கருது தெரிவிக்கையில் கல்முனை மாநகர  சபை உறுப்பினர் முபீத் தெரிவித்திருக்கும் கருத்து அவரது அரசியல் நோக்கத்துக்காக  சொல்லப் பட்டவையாகும் . கல்முனைக்கு வருகை தரவிருந்த கிழக்கு மகான ஆளுநரின்  வருகை  பிற்போடப்பட்டமயானது  கல்முனை பிரதேசத்தில் இன நல்லுறவுடனான அபிவிருத்தியை ஏற்படுத்தும்  நோக்கமாகும் . கல்முனைக்கு வருகை தரவிருந்த ஆளுநர் 350 மில்லியன் ர

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கல்முனை ஒருபோதும் அபிவிருத்தி காணக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது.

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுள் காணப்படுகின்ற உட்பூசல் காரணமாக பாதிக்கப்படுகின்றவர்கள் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந் மக்களே. இதற்கான முழுப் பொறுப்பினையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஸி.முபீத் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.    சில அரசியல் சக்திகளின் தான்தோன்றித்தனமான போக்குகளினாலும் கல்முனை பிரதேச அபிவிருத்தியினை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கல்முனை ஒருபோதும் அபிவிருத்தி காணக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. அரசுடன் அவ்வப் போது பங்காளிகளாக இணைந்து கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடும் ஜனாதிபதியோடும் அன்னியோன்யமாக வாழ்ந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை பிரதேச மக்களை மட்டும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வெறுப்புள்ளவர்களாக தேர்தல் காலங்களில் காண்பித்து தம

கல்முனை பிரதேச செயலக பிரிவில்மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு

Image
அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது

ஒபாமாவின் ஆலோசகர் இஸ்ரேல் விரைவு

Image
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தாய்லாந்து தலைநகர் பாங்காங் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான டொம் டோனிலோன் அவசர பயணமாக நேற்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 2 நாட்கள் தங்கி இருந்து ஈரான், சிரியா விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஈரான் நாடு சமீபத்தில் அணு உலையில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது என்றாலும் அணு உலை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் இந்த நாடு அறிவித்துள்ளது. இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சற்று நிதானிக்க வைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் உள்நாட்டு கலவரம் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே ஈரான், சிரியா நாடுகளின் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க சிறப்பு தூ

உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்! (ஆச்சரியப் படங்கள் இணைப்பு)

Image
இவர் தான் உலகின் குள்ளமான மனிதராக உள்ளார். 72 வயதான Chandra Bahadur Dangi என்று அழைக்கப்படும் நேபாளி தான் இவர். 56 சென்டிமீட்டர்கள் அல்லது 22 இன்சிகள் தான் இவரின் உயரம். விரைவில் இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகின் குள்ளமான மனிதராக இடம்பிடிக்கப் போகின்றார். அதற்கு முதல் அவரை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். தான் உலகில் புகழ் பெற்ற நபராக வரப் போவதாகவும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று எல்லோருடனும் பேசிப்பழக ஆசையாக உளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த குள்ள மனிதர்.

மு.காவுக்குள் மீண்டும் குழப்பம்! அதாவுல்லா பக்கம் தாவுகின்றார் முக்கிய பிரமுகர்!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அதி உயர்பீட உறுப்பினருமான யூ.எல். உவைஸ் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் யூ.எல்.உவைஸ் இணையவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. அமைச்சர் அதாஉல்லாவுக்கும், யூ.எல். உவைஸுக்குமிடையில் இன்று பேச்சு ஒன்று மிக இரகசியமாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சில் யூ.எல்.உவைஸ் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் அதாஉல்லா ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் உத்தியோகபூர்வ கட்சி மாற்றம் மார்ச் மாதம் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது எனவும் அறியவருகின்றது. அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியமையின் பின்னர், அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக்காத்தவர் யூ.எல்.உவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வெளியேற இருக்கின்றதொரு நிலையில், யூ.எல்.உவ

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரியச் செல்பவர்களுக்கு இலவச மொபிடெல் 'சிம்"!

Image
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் ஒருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மொபிடெல் 'சிம்" அட்டையொன்றைப் பரிசளித்தார். ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ  மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரியச் செல்லும் மற்றும் ஒருவருக்கு இந்த "சிம்" அட்டையை வழங்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களுக்கும்- அங்கு தொழில் புரிந்துவிட்டு தாய்நாடு திரும்புபவர்களுக்கும் மொபிடெல் நிறுவனம் இலவச 'சிம்" அட்டைகளை விநியோகிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியூள்ளமை குறிப்பிடத்தக்கது

சேனைகுடியிருப்பு கமநல வங்கி சேவைஆரம்பித்து வைக்கப்பட்டது

Image
சேனைகுடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல வங்கி வெள்ளிக்கிழமைகமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில்   ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்த நிகழ்வின் பிரதம அதிதி அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.இஸ்மாயிலுக்கு சேமிப்பு புத்தகம் கையளிப்பதையும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் ,மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.பீ.மௌலானா ஆகியோர் முறையே சேமிப்பு புத்தகம் வழங்குவதையும் ,அருகில் கமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் நிற்பதையும் காணலாம் 

மக்களை ஏமாற்றுகிறார்கள்

Image
எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை? TNA - SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை! இவர்களா அரசாங்கத்துடன் பேசி தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள் ? இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழர் தாயகத்தில் அல்லது தமிழ்பேசும் மக்கள் வாழ்வதாகக் கூறும் வடக்கு, கிழக்கு மாகாணங் களில் இப்போது ஒன்றாக வாழ்ந்துவரும், எதிர்காலத்திலும் வாழப்போகும் ஒரே மொழி பேசும் இரு இனச் சகோதரர்களால் தமக்கிடையே ஒரு நிலைப்பாட்டிற்கு வரமுடி யாமலிருப்பது மக்களுக்கு வேதனையளிப்பதுடன் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஐம்பது வ

பட்டப் பகலில் நேற்று கல்முனையில் கொள்ளை

Image
கல்முனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டப் பகலில் நேற்று கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெள்ளிகிழமை காலை பத்து மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியாரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 71000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !

Image
நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம்  - மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது. மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது. ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது. 25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்முனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நற்பிட்டிமுனை மைதானத்தில் கொட்டப்படுவதால் மக்கள் அசௌகரியம்!

Image
கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானத்தில் மாநகர சபை பிரிவில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதால் பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பிரதேச விளையாட்டுக் கழகங்கள் விசனம் தெரிவிக்கின்றன. இதுவரை பூர்த்தி செய்யப்படாதுள்ள இவ்விளையாட்டு மைதானத்தில் இவ்வாறு குப்பை கூழங்கள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் உட்பட கழிவுகள் கொட்டப்படுவதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாது போயுள்ளதுடன் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மிகுந்த சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அக்கழகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை இதிலிருந்து வெளியேறும் தூர்நாற்றத்தினால் அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் மார்கக் கடமைக்காக பள்ளிவாசல் செல்லும் பொதுமக்களும் தமது கல்வியையும் மார்க்க கடமைகளையும் முறையாக மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு முற்றுப்பெறாமல் இன்னும் அரைகுறையாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறு தகாத குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் த

வீதி உடன் திருத்தம் மக்கள் நன்றி தெரிவிப்பு

Image
fy;Kid mypahu; tPjpapy; cs;s my;-kp];gh`; Kd;gs;sp Kd;ghf cs;s tPjp fy;Kid khefu Kjy;tu; fyhepjp vk;.rpwh]; kPuhrh`pgpd; topfhl;lypy; Fwpj;j tPjp fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`; jiyikapy; jw;fhypfkhf nrg;gzplg;gl;Ls;sJ. 

இந்தியாவில் கரை ஒதுங்கிய கல்முனை மீனவர்கள் நாடு திரும்பி உள்ளனர்

Image
  தென் இந்திய மீனவர் சமூகத்தினரால் காப்பற்றப்பட்ட கல்முனையை சேர்ந்த நான்கு மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். இம்  மீனவர்கள் கடந்த  15 நாட்கள் இந்திய கடற் பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோலரில் வந்த இந்திய மீனவர்கள் கைப்பற்றி கன்னியாகுமரி கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மீனவர்களை தமிழ் நாடு பொலிஸார் பாராமரிப்புக்காக அருட் தந்தை ஜே.சேர்ச்சிலிடம் ஒப்படைத்தனர். கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியனால் மீன்பிடி அமைச்சர் ராஜித சேநாயக்க, சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் ஆகியயோரின் உதவியுடனேயே இவர் இலங்கை திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த நான்கு மீனவர்களையும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் வரவேற்றனர். கல்முனை பிரதேசத்தை சேர்நத அப்துல் றஹீம், இஸ்மாயில் இஸ்மாலெப்பை, எம்.பிச்சி நயிஷ் மற்றும