Posts

Showing posts with the label சுதந்திரம்

71 வது சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ். கொட்டும் மழையிலும் நனைந்து நிகழ்வில் பங்கேற்றார்

Image
கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப் மரியாதையும் கலை நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத், ஜயந்த விஜேசேகர அரசியல்  பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இந்றைய நிகழ்வில் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயண்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் சுதந்திர தின விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர்) சாய்ந்தமருது  – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்  சாய்ந்தமருதிலுள்ள தலைமையகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் எம்.எம்.முபாறக் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன , சுதுசிங்க , கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக் , ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட வர்த்தக சங்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் நடைபெற்ற 71வது சுதந்திர தின நிகழ்வு

Image
(அகமட் எஸ். முகைடீன்)          கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, கல்முனை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி. ஹேரத், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநெத்தி, மேஜர் தர்மசேன, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கல்முனை மாநகர சபை செயலாளர் எம். பிர்னாஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்ப

71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில்

Image
71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அதிபர் வை.எல்.பஸீர்  தலைமையில் நேற்று நடை பெற்றது அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சி.எம்.ஹலீம் தேசிய கோடி ஏற்றி மரக்கன்று நடுவதையும் கல்லூரி ஆசிரியர்களையும் காணலாம் 

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதினம்

Image
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதின ஊர்வலமும்   பொதுக் கூட்டமும் இன்று (07) திங்கட் கிழமை கல்முனையில் நடை பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ் லோகநாதன் தலைமையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் ஒன்றிணைந்து நடாத்திய தொழிலாளர் தின நிகழ்வு  கல்முனை செலான் வங்கி கட்டிட IP  மண்டபத்தில் நடை பெற்றது. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுய ஆட்சியை ஏற்படுத்துமாறு அரசை கோரல், விலைவாசி உயர்வு  காரணமாக பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு ரூபாய் 15000 சம்பள உயர்வு  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 16அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி!கல்முனையில் கவனஈர்ப்பு பேரணி!!

Image
(யூ.எம்.இஸ்ஹாக் ) சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைப்பேம் எனும் தொனிப் பொருளில் சித்திரவதைக்கு எதிராக இன்று (30) வியாழக்கிழமை கல்முனையில்  கவனஈர்ப்பு பேரணியொன்று நடைபெற்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  அலுவலகத்தின் ஏற்பாட்டில் அதன் அம்பாறை  மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில்  இந்தப் பேரணி நடைபெற்றது. கடந்த காலங்களில் இடம் பெற்ற சித்திரவதைகள் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இடம் பெறாமல் தடுப்பதுடன் அவர்களை சித்திரவதைகள் வன்முறைகளில் இருந்து பாதுகாக்குமாறு இந்த கவன ஈர்;ப்பு பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேணியில் கலந்து கொண்டோர் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி, இல்லத்து வன்முறையை இல்லா தொழிப்போம், வன்முறைகளில் மனித உயிர்களை பாதுகாப்போம், சித்திரவதைக்குள்ளானவர்களுக்கு என்றும் உதவுவோம், சித்திரவதை ஒவ்வொருவரையும் பாதிக்கும் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.  இப்பேரணியில் கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி AWA .கப்பார்  உட்பட பொலிஸ்  அதிகாரிகள், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன்  உட்பட

கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு

Image
கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல சிறுவர் இல்லத்தில் இடம்  பெற்றது . 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப் பட்டதுடன்  பகல் போசனமும் வழங்கி வைக்கப் பட்டது. நிகழ்வில் போலிஸ் பரிசோதகர்  வாஹிட் ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை  அதிபர் பிரபாகரன்  உட்பட சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர் 

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 68ஆவது சுதந்திர தினம்

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) நாட்டின் 68ஆவது சுதந்திர தினம், நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (04) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மர நடுகளை நிகழ்வுகளும் இடம்பெற்றன.    பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் சுற்றாடல் கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட   இந்நிகழ்வில் பாடசாலையில் பிரதி,உதவி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசி ரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்முனை குர்த்துபா அகடமியில் சுதந்திர தின விழா  நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (04)   கல்முனை குர்த்துபா அகடமியில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு இனிப்புப்பண்டமும் பரிசுகளும் வழங்கப்பட்டது.   அகடமியின் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.றம்ஸான்  தலைமையில்  இடம் பெற்ற இந்நிகழ்வில்  ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள்

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) இலங்கையின் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில்  கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது. தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்  கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.