Posts

Showing posts with the label மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி

Image
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இதுவரையில் 6பேர் உயிரிழப்பு

Image
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இதுவரையில் 6பேர் உயிரிழந்துள்ளனர் இலங்கையில் இடம்பெற்ற 6 ஆவது கொரோனா வைரசு நோயாளியின் மரணம் சற்று முன்னர் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று காலை உறுதி செய்தார். 80 வயதைக்கொண்ட ஆண் நபரான இந்த நோயாளி IDH வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

மர்ஹும் ஜுனூஸின் ஜனாசாவை காண, இன்று காலை குடும்பத்தினர் சிலருக்கு அனுமதி

Image
கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரது மகன் பயாஸ் இத்தகவலை கூறினார். 10 க்கும் மேற்படாதவர்களுடன் இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரும்படி அவரிடம் கோரப்பட்டுள்ளது. இதையடுத்தே ஜனாசா குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை அவரது குடும்பத்தினர் புதன்கிழமை இரவு பொலிஸ் பாதுகாப்புடன் மற்றுமொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பயாஸ் கூறினார்.

உழவு இயந்திரம் பனையில் மோதி 22 வயது வாலிபன் மரணம்

Image
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில்  நேற்று  (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள்

Image
கொரோனா கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமைய நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ நேற்று தெரிவித்திருந்தார்.. மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான இவர் ,இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக் காரணமாக மரணமான முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தகது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

Image
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உய

இலங்கையின் முதலாவது மரணம்

Image
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி

Image
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

Image
கொச்சிக்கடையில் கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற வேளையில் வேனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றினை சோதனையிட பாதுகாப்பு படையினர் முற்பட்ட போது மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.  பின்னர் அப்பகுதியில் இருந்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று திரண்ட அவரை தாக்க முற்பட்டுள்ளனர். 

நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்

Image
நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களை அடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு - 450 பேர் வைத்தியசாலையில்

Image
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  இதனை நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு

Image
மட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.  இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர் என தெரிவிக்கப்படுகின்றது.  மீன் பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்றிருந்தார்.  எனினும் அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதன் காரணமாக நேற்று (21) இச்சம்பவம் குறித்து வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.  இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல் போனவரைப் பற்றிய எதுவித தடயங்களும் கிடைத்திருக்காத நிலையில் இன்று காலை தட்டுமுனை ஆற்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இவர் வலிப்பு நோய்க் குணம் உள்ளவர் என்று

கல்முனை மாநகர சபையில் தர்மகபீருக்கு மாநகர முதல்வரினால் அனுதாபம்

Image
முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.கபீர் அவர்களின் மறைவுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இன்று சபை அமர்வில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் விசேட பொதுச் சபை அமர்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எஸ்.ரி.கபீர் அவர்கள் காலம்சென்ற தகவலை சபைக்கு அறிவிப்பு செய்த முதல்வர், 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை அவர் எமது முன்னைய கல்முனை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் எனத் தெரிவித்தார். அத்துடன் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்கார் சபையிலும் அவர் நீண்ட காலமாக அங்கம் வகித்து, பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன்   அன்னாரது சேவைகளை பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- என்று முதல்வர் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா

Image
வரலாற்றுக்  கட்டுரை  எழுத்தாளரும்  முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய வாழ்வும் பணிகளும் நூல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர் முன்னிலையில்  இந்த நூல் வெளியீட்டு  விழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (12.01.2019) மர்ஹூம் மன்சூர் ஆரம்பக்கல்வி கற்ற பாடசாலையான கல்முனை வெஸ்லி  உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு  விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல்  தேசிய நீர் வழங்கல்  மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும் பற்றிய நூலின் ஆய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர்  எம்.ஏ. நுகுமான் வழங்குவதுடன்  நூலின் அறிமுகவுரையை  தென்கிழக்குப் பல்கலைக்கழக  மொழித்துறை தலைவர்

அங்கொடயில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

Image
அங்கொட சந்தியில் இன்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்த நபர் 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  மோட்டார் சைக்கிளில் வந்த 2 இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி

Image
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.  இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.  இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்‌ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார்.  Dozens of gold miners killed in collapse in Afghanistan ========================================== At least 30 people were killed when a gold mine collapsed in northea

கல்முனையில் சுனாமி பேரழிவு நினைவேந்தல்

Image
தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று புதன் கிழமையுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. கடற்கோளில் சிக்குண்டு மரணித்தோருக்கான பதிநான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்று கல்முனை மாமாங்க வித்தியாலய திடலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கருகில் இடம் பெற்றது.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை  மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும் வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் அந்த காட்சியை நேரில் கண்டவர்களும் நம்மிடையே உள்ளனர்.  14 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் முகமாக மரணித்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குரலுடன் உறவுகளுக்காக தீபமேற்றி பூசை வழிபாடுகளும் இடம் பெற்றன.  உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் கலந்

தங்கல்லயில் துப்பாக்கி பிரயோகம் - நால்வர் பலி

Image
தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  பிந்திய தகவலின்படி  குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்தவர் யார்?

Image
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்துள்ளது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  இன்று (17) முற்பகல் 9.30 மணி அளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த நபர் வந்ததாக தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும் அவரது பாதணியும் பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  பாலத்தில் இருந்து பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் நபரை தேடும் பணிகளில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.