Posts

Showing posts from April, 2018

சண்முகா தேசியப்பாடசாலையின் அபாயா எதிர்ப்புக்கு எதிராய் சம்மாந்துறையில் எஸ்.எல்.ரி.ஜே. யின் கண்டன பேரணி!!!

Image
யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர் திருகோணமலை  சண்முகா தேசியப்பாடசாலையில் பணிபுரியும் முஸ்லிம் ஆசிரிகைகள் அணியும் அபாயாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஸ்ரீலங்காதௌஹீத் ஜமாஅத்த்தின் அம்பாறை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த கண்டன பேரணி 2018-04-27 ஆம் திகதி சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி சுற்றுவட்டத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஒன்றுதிரண்ட முஸ்லிம் ஆண்களும் பெண்களுமாக சண்முகா தேசியப்பாடசாலையின் அபாயா எதிர்ப்புக்கு எதிராய் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாய் சென்றனர். இவர்கள் “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் சண்முகா மகளிர் கல்லூரி அதிபரை கண்டிக்கிறோம்”, “தூண்டாதே தூண்டாதே இனவாதத்தை தூண்டாதே”, “சீர்குலைக்காதே சீர்குலைக்காதே தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்காதே”,”உரிமை காக்க பொங்கியெழுவோம் சட்டம் தந்த உரிமையை தட்டிப்பறிக்க நீ யாரடா?” என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை  புதன் கிழமை (25) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது. கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவூ, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ,கல்முனை தமிழ் பிரிவு  கோட்ட மட்டங்களில் நடை பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அறுநூறு மாணவர்கள் நாளை  நடை பெறம் வலய மட்ட மெய் வல்லுனர் போட்டிகளில் பங்கு    பற்றவு ள்ளதாகவும் நாளையும் (25) நாளை மறுதினமும் (26) இப்போட்டிகள் இடம் பெறும் எனவும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரிய அலோசகர் எம்.ஐ.இப்றாகீம் தெரிவித்தார். நாளை  காலை ஆரம்பமாகும் விளையாட்டுப் போட்டியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைப்பார். வலய மட்ட விளையாட்டுப் போட்டி உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம், ஏ.எல்.எம்.முக்தார், எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா , எஸ்.எல்.ஏ.றகீம் ,பீ.எம்.வை.அரபாத் மற்றும்  கல்முனை  கல்வி வலய  கணக்காளர்  கமறுதீன் றிஸ்வி யஃஸர் ஆக

கல்முனை இலங்கை வங்கி கிளை புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

Image
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கல்முனை இலங்கை வங்கி கிளையில் வங்கி முகாமையாளர் ஐ.எம்.முனவ்வர் தலைமையில் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வு  இடம் பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் “ஐக்கியமே பாக்கியம்” நடை பவனி

Image
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் “ஐக்கியமே பாக்கியம்” நடை பவனி இன்று(14) நடை பெற்றது. கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் அபிருத்திக் குழுவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபவனி கல்லூரியில் இவ்வருடம் நடை பெறவுள்ள ஒலிம்பிக் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல்வர் எம்.எஸ்.முகம்மட் தலைமையில் நடை பெற்ற இந்த நடைபவனியை கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா ஆரம்பித்து வைத்தார். கல்லூரி கீதத்துடன் ஆரம்பமான “ஐக்கியமே பாக்கியம்” நடை பவனி பாடசாலை மைதானத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வழியாக மாளிகைக்காடு சந்தி வரை சென்று மீண்டும் சாய்ந்தமருதூடாக கல்முனை நகரை அடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது. அழைப்பு இல்லாத இந்த நடை பவனியில் கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு

Image
விளம்பி வருட சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு  நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் சிவ ஸ்ரீ மோகானந்தக் குருக்கள் தலைமையில் வழிபாடுகள் நடை பெற்றது .  வழிபாடு நிகழ்வுகளில் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் போராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி

Image
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வாக்களிப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்புகள் இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கபட்ட தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.