கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டி

கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை  புதன் கிழமை (25) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவூ, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ,கல்முனை தமிழ் பிரிவு  கோட்ட மட்டங்களில் நடை பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அறுநூறு மாணவர்கள் நாளை  நடை பெறம் வலய மட்ட மெய் வல்லுனர் போட்டிகளில் பங்கு    பற்றவு ள்ளதாகவும் நாளையும் (25) நாளை மறுதினமும் (26) இப்போட்டிகள்
இடம் பெறும் எனவும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரிய அலோசகர் எம்.ஐ.இப்றாகீம் தெரிவித்தார்.
நாளை  காலை ஆரம்பமாகும் விளையாட்டுப் போட்டியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைப்பார். வலய மட்ட விளையாட்டுப் போட்டி உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம், ஏ.எல்.எம்.முக்தார், எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா , எஸ்.எல்.ஏ.றகீம் ,பீ.எம்.வை.அரபாத் மற்றும்  கல்முனை  கல்வி வலய  கணக்காளர்  கமறுதீன் றிஸ்வி
யஃஸர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.சக்காப், திருமதி.ஜிஹானா ஆலிப் ,திருமதி. ஆர்.திரவியராஜா, ஐ.எல்.ஏ.றகுமான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

-- 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது