Posts

Showing posts with the label விருதுகள்

நற்பிட்டிமுனை தாஹிர் ஜெஸான் !! கல்முனையில் முதல் பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.

Image
அல்-கரீம் பவுண்டேஸன் “சாதனை மங்கை “ பட்டம்  வழங்கி கெளரவிப்பு  நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெஸான் 2017 இல் நடை பெற்ற இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவாகி  அகில இலங்கை ரீதியில் 55வது இடத்தைப் பெற்று நிருவாக சேவை அதிகாரியானார். இவர் நாளை  2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.  1990.01.26ஆம் திகதி நற்பிட்டிமுனை கிராமத்தில்  பிறந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழத்தில் வணிகத்துறை பீடத்தில் கற்று பட்டணமும் நாடும் பல்வகைத் திட்டமிடல் பட்டதாரியாகி நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றினார்  அதன் பின்னர் அப்  பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தைப் பெற்று கல்முனை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை நிருவாக சேவை அ

நற்பிட்டிமுனை நபீஸா ஆசிரியை ஓய்வு !! அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு !!!

Image
35 வருடம் ஆசிரியத் தொழிலை  புனிதமாக  நிறைவேற்றி  ஓய்வு பெற்ற  நற்பிட்டிமுனை ஆசிரியை  திருமதி   எஸ்.என்.எச்.முகம்மட் (Nafeesa Teacher) அவர்களின் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழாவும் ,கல்வி சமூக சேவைக்கான தேசாபிமானி விருது வழங்கும் விழாவும்  ஆசிரியை நபீசாவின்  இல்லத்தில் இடம் பெற்றது . கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அல் -கரீம் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சி.எம். முபீத்தின்  ஏற்பாட்டில் அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவர் சி.எம்.ஹலீம்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் நபீஸா ஆசிரியையின் கணவர் ஹயாத் முகம்மட் அவரது புதல்வர்கள்  அவரது குடும்பத்தினர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பா வாசித்து  வாழ்த்து மடல் வழங்கி  தேசாபிமான பட்டம் சூட்டி ,நினைவு பரிசு வழங்கி வைத்தனர் .

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெறுகின்றார்.

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்  கலாபூஷணம் விருது பெறுகின்றார்.நாளை 29அம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே இவருக்கு இந்த கலாபூஷணம் விருது வழங்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும்,பத்திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார்  தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும். அதே போன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்;திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் இவர்  வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2018ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவை தவிர இ

சென்னை புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலினால் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன், றியாத் ஏ. மஜிட்) சென்னையிலுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவிக்கப்பட்டார்.  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் புலியூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை மாநில துணைத் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.  இதன்போது இராஜாங்க அமைச்சர் உலகளாவிய முஸ்லிம்களின் ஐக்கியம், ஒற்றுமையினை வலியுறுத்தி பேசினார். அத்தோடு குறிப்பாக தமிழ் நாட்டு முஸ்லிம் மக்கள் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  

பாண்டிருப்பு 01சீ மாதர் அபிவிருத்தி சங்கம் அம்பாறை மாவட்டத்தில் முன்னிலையில்

Image
பிரதேச செயலாளர் அதிசயராஜ்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களுக்குள் கல்முனை பாண்டிருப்பு 01சீ மாதர் அபிவிருத்தி சங்கம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. கடந்த பன்னிரண்டு வருடங்களாக சிறந்த கட்டமைப்புடன் செயற்பட்டுவரும் இம்மாதர் சங்கம் எதிர்காலத்திலும்  சிறப்பாக இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை . பிரதேச கல்வியை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த சங்கமானது சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பது பாராட்டுக்குரியது . எதிர்காலத்தில்  இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முடியுமான அத்தனை உதவிகளையும்  வழங்கும் என உதவி பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ் தெரிவித்தார் . கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாண்டிருப் பு 1சீ மாதர் அபிவிருத்தி சங்கத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (03) பாண்டிருப்பு பல் தேவைக்கட்டிடத்தில் சங்கத்தின் செயலாளர் எஸ்.நித்திய கைலேஸ்வரி தலைமையில் நடை பெற்றது.  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உதவி பிரதேச செயலாளர் அங்கு உரையாற்றும் போதே

திமுக தலைவர் ஸ்டாலின் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சந்திப்பு

Image
( அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலினை சந்தித்தார்.  இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் திமுக தலைவர் கேட்டறிந்தார். கலைஞரின் மறைவு இலங்கை மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பு என்பதையும் கலைஞருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலிருந்த உறவு சம்பந்தமாகவும் இராஜாங்க அமைச்சர் ஸ்டாலினிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.  இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஷாகுல் ஹமீத் மற்றும் இராஜாங்க அமைச்சருடன் சென்ற பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள பிரதம முகாமைத்துவ உதவியாளருக்கு பிரியாவிடை பாராட்டு

Image
கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்   பிரதம முகாமைத்துவ உதவியாளர்  சுந்தரம் சிவபாலனுக்கு    நேற்று  பிரியாவிடை வைபவம்   அலுவகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்கள அத்தியட்சகர்  எச்.எம்.எம். ரஷீட் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர் ஊழியர்கள் கலந்து கொண்டு  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர் 

சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவைக்கு கிழக்கு மாகாண வித்தகர் விருது

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவருக்கு வித்தகர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள்  நிகழ்வு கடந்த 2018-10-27ஆம் திகதி மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது இதன் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இவருக்குப் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் கூத்து, கலை இலக்கியம், ஆக்கஇலக்கியம், நாடகம்,பல்துறை, இசைத்துறை, கிராமியக்கலை, சிற்பம், கிராமியப்பாடல், அயூர்வேதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 13 பேருக்கு இந்த வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாஹித்ய மண்டல விருது பெற்ற சோலைக்கிளிக்கு கல்முனையில் பாராட்டு

Image
நமது நாட்டில் தேசிய ரீதியில் இலக்கியப் பணிக்காக வழங்கப்படுகின்ற அதியுயர் இலக்கிய விருதான “சாஹித்திய மண்டல ” விருதினை மூன்றாவது தடவையாகவும் பெற்றுக் கொண்ட கல்முனையைச் சேர்ந்த உலக கவிஞர் சோலைக் கிளி என அழைக்கப்படும் அதீக் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்தப் பாராட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) கல்முனை பிரதேச கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.எச்.ஏ.கனி தலைமையில் நடை பெற்றது.  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட தமிழ் துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ,உலக சிறு கதை எழுத்தாளர் உமாவரதராஜன், தமிழ்த் துறை ஆசிரியர் அஷ்ர ஃ ப்  , சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலிஹ் உள்ளிட்ட இலக்கிய பிரமுகர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சோலைக்கிளிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அகிலா பானு வாழ்த்துரை வழங்க கலாநிதி எஸ்.எல்.ஏ.அஸீஸ்  நிகழ்வுகளை தொகுத்

இரட்டை அரச விருது பெறும் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ காதர்

Image
2018 ஆண்டுக்கான கிழக்கு மாகாண உயர் விருதான வித்தகர் விருது மற்றும் அரச உயர் விருதான கலாபூஷண விருதுகளைப் பெறும் மருதமுனையைச் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனாப் பீர்முகம்மது முகைதீன் அப்துல் காதர் (பி.எம்.எம்.ஏ.காதர்)1957ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27ஆம் திகதி பிறந்தார். இவர் 30 வருடங்களாக ஊடக மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு கவிதை,கட்டுரை,விமர்சனம்,உள்ளீட்ட பல்வேறு படைப்புக்களை சமூக மேம்பாட்டுக்கா எழுதி வெளியிட்டு வருகின்றார். இவர்1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'அன்னை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் எழுத்துலகில் பிரவேசித்தார். அன்று முதல் இன்று வரை இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் பிராந்திய செய்தியாளராக் கடமையாற்றுகின்றார். இவற்றுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக் கடமையாற்றுவதுடன் மருதமுனை ஒண்லையின் இணையத் தளத்தின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிகின்றார். மர்ஹூம் எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட எழுச்சிக்குரல் பத்திரிகையில் செய்தி எழுத ஆரம்பித்து தினம