Posts

Showing posts from June, 2013

சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் இரத்ததான நிகழ்வு

Image
  சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. செஸ்டோ அமைப்பின் தலைவர் பொறியியலாளர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின் வழி நடத்தலில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் செஸ்டோ அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

வீட்டு சண்டை தொடருமா முடியுமா ஹக்கீம்-பஷீர்

Image
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே இவர்கள் இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடையே இந்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானது ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட வேண்டும் என அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாமல் வட மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பஷீர் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடன் இணைந்த நிலையிலேயே கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை

முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலொன்று நேற்று இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் பா.உ ஹஸனலி, ஸ்ரீ.ல.மு.கா உச்ச பீட உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தற்போதய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை சமூகங்கள் அதிகார பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள், 13ம் சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பேச்சுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வழமையாக நடாத்திவருகின்றது அத்தோட

ஐ.தே.க.யின் உத்தேச அரசியல் அமைப்பு நகல் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பு

Image
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகள் அக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், இன்று முற்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.  தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை மாற்று அரசாங்கமாக கருதுவதாகவும், முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியல் அமைப்பு நகலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கு பரிசீலித்து அது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.  இந்தச் சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.

கல்முனை மேயர் சிராஸ், லண்டன் ரெட்பிரிட்ஜ் நகர மேயருடன் சந்திப்பு;

Image
அகமட் எஸ்.முகைடீன்- ஊடகப் பிரிவு) கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) லண்டன் பயணமானார். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் லண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று லண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள், சுனாமியின் பின்னரான கல்முனை, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் சுற்றுச்சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு ரெட்பிரிட்ஜ் நகர சபையின் நடவடிக்கைகள், பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப யுக்திகள், மக்கள் தொடர்பாடல் முறை, நிர்வாக முகாமைத்துவ முறை, முறைப்பாட்டு முகாமைத்துவ முறை மற்றும் மாநகர சபைக்கான நிதியீட்டல் முறைமைகள் தொடர்பாக ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. இவை எதிர்கால கல்முனை மாநகர சபை நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் தெரிவித்தார். அத்துடன் ரெட்பிரிட்ஜ் மாநகர மு

'பரீட்சைக்கு முன்மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை

Image
பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சினாலேயே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் புதிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கல்விப்பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும்.  இந்த சட்டத்தை மீறுகின்ற நிறுவனங்கள் இன்றேல் நபர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ம் திகதி ஆரம்பம்

Image
2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி தொடக்கம் 31 ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி இடம்பெறும் எனவும், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்காக 293,117 பரிட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும், புலமைப் பரிசில் பரிட்சைக்காக 328 ,614 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மேலும் கடந்த பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்த்து இம்முறை பரீட்சையை தக்க முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

மூக்கில் மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை!

Image
எல்லோருக்கும் தலையினுள் தான் மூளை உள்ளது. ஆனால் இந்த அதிசயக்குழந்தைக்கோ மூக்கின் மேலே மூளை .இதனால் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த குழந்தையை இக்குழந்தையின் பெற்றோர் பெருங்கவலையடைந்தனர்.  குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதே  அவதானிக்க முடிந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே இந்தப் பெற்றோர் குழந்தை பிறந்ததும்  மருத்துவர்களின் உதவியை நாடினர் .  பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு   சத்திர சிகிச்சை மூலம் மூக்கில் இருந்த மூளையை ,  குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில்  பொருத்தி விட்டனர் மிகவும் நுணுக்கமாக நடந்த இந்த  சிகிச்சையில் டாக்டர்கள் வெற்றியும் கண்டனர் .இந்தக் குழந்தையும் தற்சமயம் ஆரோக்கியமாக இருக்கிறதாம்..இதனால் இப்போது தான் இக்குழந்தையின் பெற்றோர் நிம்மதியாக மூச்சு விடுகின்றனராம்.  

பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஜூலை 6ஆம் திகதி!

Image
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 6ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அவ்வாறே, உதவி சுங்க அத்தியட்சகர் தரம் 11க்காக வினைதிறன் பரீட்சை மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுக்கான சுங்க பரிசோதகர் தரம் 11க்கு ஆட்களை தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சையும், ஜூலை 7ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் இந்த பரீட்சைகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளலாம். 

அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நாடெங்கும் பயிற்சி பாசறை

Image
லஞ்ச விசாரணை ஆணைக்குழு, மாகாணசபைகள், பிரதேச சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கும் அங்கு பணி புரியும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் வாங்குதல் எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிவுறுத்தும் விரிவுரைகளை நாடெங்கிலும் நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்கின்றது. லஞ்சம் வாங்கும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் எவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை விளக்கக்கூடிய வகையில் இந்த விரிவுரைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதி பதியின் சட்டத்தரணியுமான ஜகத் பாலபட்டபந்தி தெரிவித்துள்ளார். தற்போது பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக இத்தகைய லஞ்ச குற்றச்சாட்டுகள் அதிகமாக ஆணைக்குழுவுக்கு முன் பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பயிற்சி பாசறைகளை நடத்துவது குறித்து லஞ்ச விசாரணை ஆணைக்குழு முன்கூட்டியே மாகாணங்களின் ஆளுநருக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதத்தில் இதன் முதலாவது பயிற்சி பாசறை அனுராதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படும். இது பற்றி முன்கூட்டியே வட மத்திய மாகாண ஆளுநருக்கும் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் க

63.5 கி.கி விதையுடன் அவதிப்பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை!!(PHOTOS)

Image
63.5 கி.கி விதையுடன்அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு வைத்தியர்கள். அறுவை சிகிச்சைமூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் 2008ஆம் ஆண்டு படுக்கையிலிருந்து எழும் போது தவறுதலாக அவரது ஆணுறுப்பு கட்டிலுடன் மோதியுள்ளது. இதன் பின்னர் அவரது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் விதைப்பை பெரிதாக வீங்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அவரால் இயல்பாக நடக்கவோ வாகனம் செலுத்தவோ உடலுறவுகொள்ளவோ முடியாத ஒரு அசாதாரண நிலைக்கு ஆளாகியுள்ளார் வெஸ்லி வரென். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவரது விதைப்பையின் வீக்கம் மிக அதிகமானபோது அதனை 13 மணி நேர அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் வைத்தியர்கள். இது குறித்த தகவல்களை நேற்றைய தினமே அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன. இதேவேளை 13 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை சனல் 4 தொலைக்காட்சி முழுமையாக படம் பிடித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வரென் கூறுகையி

பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Image
கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்தும் சாரதிகள், நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக கல்முனை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளில் தனியாகவும் கூட்டாகவும் பயணிக்கும் இளம் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் அவர்களது தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லைபடுத்துகின்றனர். அது மாத்திரமின்றி எப்படியோ தொலைபேசி இலக்கத்தினை அறிந்து கொள்ளும் சாரதிகள் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து அப் பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் ஆசை வார்த்தைகளையும் கூறி தொல்லைபடுத்துவதாக சிலர் முறைப்பாடுகளையும் தெரிவித்துள்ளனர். எனவே, தனியாக பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி இலக்கமோ அல்லது தொல்லையோ கொடுக்கின்ற நபர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது பொலிஸாரிடமோ தெரிவிக்குமாறு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள

கல்முனை சனிமவுண்ட் கழகம் சம்பியன்

Image
மருதமுனை எஸ். பி. ஜமால்தீன் பவுண்டேசன் அநுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முன்னணிக் கழகங்களுக் கிடையே நடாத்தி வந்த மர்ஹும் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக் கிழமை மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக்கழகம், தன்னை எதிர்கொண்ட மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட் டுக்கழகத்தினை பலத்த சவால்களுக்கு மத்தியில் (04.03) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு ரூபா பத்தாயிரம் பணப் பரிசினையும், சம்பியன் கிண்ணத்தினையும் பரிசாகப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினைப் பெற்ற மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் ரூபா ஐந்தாயிரம் பணப் பரிசினையும், கிண்ணத்தினையும் பெற்றுக் கொண்ட துடன், மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கல்முனை லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகம், நான்காம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட மருதமுனை ஈஸ்ரன் யூத் விளையாட் டுக்கழகம், முறையே ரூபா மூவாயிரம், ரூபா இரண்டாயிரம் பணப் பரிசினையும், பரிசுக் கிண்ணங்களையும் பரிசாகப் பெற்றுக்கொண்ட

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு!

Image
-அமைச்சர் கெஹெலிய தகவல்- முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில அமைப்புகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த உடகவியலாளர் சந்திப்பு இன்று (20) பிற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். முஸ்;லிம் சமுகத்துக்கு எதிரான செயற்பாடுகளில் சில பொளத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் - அவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தும். இது தொடர்பில் உரிய அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் மிரட்டல் கடிதம்

Image
நாட்டிலில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்டு சமாதானம் நிலவும் நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளாருக்கு எதிராக 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் அம்பாரை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கணக்காளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தாங்களும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இவ்வாறான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உங்களுக்கு உரித்தான கடமைகளில் மட்டும் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய கணக்காளர் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வர

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் ஜூலையில் திறப்பு?

Image
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார்.  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஜனாதிபதியின் கவனத்திக்கு கொண்டு வந்தார்.  குறிப்பாக இப்பகுதி ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்த பைசால் காசிம் எம்.பி. ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  இதன்போதே அங்கு சமூகத்திருந்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி குறித்த பணிப

பெட்மின்டன் பயிற்சிக்காக மலேஷியா சென்ற கல்முனை ஸாஹிரா மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு

Image
கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முதலாக வெளிநாடு ஒன்றுக்கு பாடசாலை மாணவர் குழுவொன்று பெட்மின்டன் பயிற்சிக்காகவும் போட்டிக்காகவும் சென்றமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்று கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை பெட்மின்டன் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் உலக பெட்மின்டன் சம்மேளனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பேராசிரியர் ரஞ்சித் டி சில்வா பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஹாஸிம் கெளரவ அதிதியாகவும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனத் தலைவர் எம். எச். எம். மன்சூர், கல்முனை வலய கணக்காளர் ரீ. சாலித்தீன், கல்முனை வலய உடற் கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஏ. சத்தார், கல்முனை எஸ். எம். அன்வர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். எம். அன்வர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர். கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 11 மாணவர்கள், பொறுப்பாசிரியர் அலியார் ஏ. பைஸர் தலைமையில் கடந்த மாதம் மலேசியா கோலாலம்பூர் லூயி பெட்மின்டன் அகடமியில் இ

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!

Image
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான  ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது. 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள்  இந்த அழகு ராணி போட்டியில் கலந்துக் கொண்டனர். இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்..இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார். கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.

கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.

Image
  சுனாமியால் பாதிக்கப்பட்ட, அனர்த்தங்களால் விதவையான, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த வசிப்பிடமற்ற மக்களுக்கு இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இஸ்கந்தர் கே. ஒக்யே, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீமிடம் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம், துருக்கிய தூதுவர் ஒக்யே ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட் கிழமை (17) நீதியமைச்சில் இடம்பெற்ற போது அமைச்சர் ஹக்கீம் இருப்பிட வசதியின்றி அல்லறும் மக்கள் பற்றி பிரஸ்தாபித்த போதே துருக்கியத் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.  இச் சந்திப்பில் துருக்கி - இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் உயர் அதிகாரி அய்டின் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்முனை மாநகரத்தை துருக்கியில் உள்ள ஒரு முக்கிய நகரின் சகோதர நகராக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான தீர்மானமொன்றும் இச் சந்திப்

இலங்கை சாரணர் சங்கத்தின் 101 வருட புர்த்தி

Image
  இலங்கை சாரணர் சங்கத்தின் 101 வருட புர்த்தியை முன்னிட்டு அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாயலத்தில் ஒழுங்கு செய்திருந்த சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்பாடல் வாரத்தினையொட்டிய நிகழ்வில் மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் உரையாற்றுவதனையும் அருகில் கௌரவ ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா அமர்ந்திருப்பதனையும் பாடசாலை சாரண பொறுப்பாசிரியர்களுக்கு ஆணையாளர் சேவை வார அட்டையினை வழங்கி வைப்பதனையும் கலந்து கொண்ட சாரண பொறுப்பாசிரியர்களையும் படங்களில் காணலாம்.

கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான அபிவிருத்தி திட்டங்கள்!

Image
ஒளிரும் கல்முனை’ எனும் தொனிப்பொருளில் கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸின் ஏற்பாட்டில் நடைபெற்றது, இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கல்முனையை துரிதமாக பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்காகவே ‘ஒளிரும் கல்முனை’ என்ற பெயரை இந்த அபிவிருத்தித்திட்டத்திற்கான பெயராக சூட்டியுள்ளோம்.இதில் கல்வி, வீதி அமைப்பு, வடிகான் வசதி, கலாசார மேம்பாடு என 51 வகையான வேலைத்திட்டங்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட வேலை எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் உத்திய

ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு

Image
ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று, தெளிவான வெற்றியை பதிவு செய்துள்ளார். தமது வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரௌஹானி, கடும்போக்குக்கு கொள்கைளை வெற்றிக் கட்டுப்படுத்தும் வகையில் தமது வெற்றி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை தெஹ்ரான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, அமெரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அவரச கூட்டத்துக்கு அழைப்பு

Image
  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையில் அவரச கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.  இந்த கூட்டம் அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நாளை (17) இரவு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்தார்.  நேற்று (15) இரவு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  13 திருத்தச் சட்ட மாற்றங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு சந்திப்பாக இது அமையவுள்ளது.  13 திருத்தச் சட்ட மாற்றங்கள் குறித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் அந்த தெரிவுக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  இந்நிலையில் கட்சி எடுத்துள்ள சில முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்

Image
  கிழக்கின் ஆச்சரியமிக்க நகரமாக கல்முனை நகரினை மாற்றும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸினால் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்தே மேற்படி குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்தனர். இக்குழுவில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டவுள்யூ.ஜே.செனவிரட்ன, கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.முர்சிதா மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதன்போது புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரச காரியாலய மற்றும் வர்த்தக நிலையங்களின் அமைவிடங்களையும் மற்றும் பூங்கா நிர்மாணம், நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டங்;களையும் குழுவினர் பார்வையிட்டதுடன்

இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்

Image
விடுதலைப் புலிகளால் நிர்மாணிகப்பட்ட இரனைமடு வானூர்தி ஓடு தளம் மறுசீரமைக்கப்பட்டு இன்று மீண்டும் ஜனாதிபதியால் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இரணைமடு விமான  ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார் . இந்த ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. விமானப்படையினரின் பொறியியல் நிர்மாண- உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே இரணைமடு விமான ஓடுதளம் மறுசீரமைக்கப்பட் டுள்ளது. சர்வதேச ரீதியில் இந்த விமான ஓடுதளம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விமானப் படையிடம் இருக்கும் மிகப் பெரிய விமானமான சீ-130 விமானத்தை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் குறித்த விமான ஓடுதளம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். மாங்குளம், அம்பகாமம் ஓலுமட ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் சென்று விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இரணைமடு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .

கிளிநொச்சியில் ஜனாதிபதி

Image