Posts

Showing posts from March, 2012

கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Image
கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக கடமையாற்றிய 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று  கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி, மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலித்தீன்,  மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளா, ஏ.எம்.பிர்தௌவ்ஸ், ஏ.ஆர் அமீர் உட்பட மாநகர சபை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, 16 ஊழியர்களுக்கு நிரந்தர  நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை குடியை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர்காலமானார்

Image
சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெதர்லாந்தில் காலமானார்.  கல்முனையை சேர்ந்த இவர், கொழும்பு மார்கா ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும் நெதர்லாந்து துறைசார் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவரும், நெதர்லாந்து பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளருமாக கடமையாற்றியுள்ளார். நெதர்லாந்து - கல்முனை நட்புறவு அமைப்பின் தலைவராகவும் கல்முனை கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தின் சிரேஸ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறையில் பட்டம் பெற்றது முதல் விரிவுரையாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் இத்துறையில் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை நெதர்லாந்தில் நல்லடக்கம் செய்யப்படும் 

கல்முனை மாநகர சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை

Image
கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப்  பரீட்சை நடைபெற்றது .

கல்முனை பள்ளி வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு!

Image
அரசாங்கத்தின் கமநெகும எனும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை பள்ளி வீதியை கொங்கிறீட் பாதையாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி புனரமைக்கப்படுகிறது. ந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.யி.ஜே.பி. நாணயக்கார மற்றும் கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எம்.அஸீஸ் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து

Image
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் கணவன் மனைவி குழந்தை ஆகியோர்  படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.25 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கனரக லொறியொன்றின் பின்னால் மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  குறித்த காரின் சாரதி தூக்கத்திலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.(நன்றி :காத்தான்குடி இன்போ )

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

Image
அமைச்சர் மஹிந்த சமரசிங்க. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சமூகம் சில நாடுகள் விடயத்தில் இரட்டை வேடம் பூணுகிறது. மனித உரிமை பேரவையின் வருடாந்த மீளாய்வு கூட்டம் ஒக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் எமது நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நாமாக தெளிவுபடுத்துவோம். இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் நாம் எமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தை விளக்கியுள்ளோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம். ஒரு சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடு செய்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்த தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகள் குறித்து நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அமைச்சர் ரிசாத் பதியுதீன் . அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை 23 நாடுகள் கொண்டிருந்தன. 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அநேக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இலங

கல்முனை மாநகர சபை வெற்றிடத்துக்கு நாளை நேர்முக பரீட்சை

Image
கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு நாளை நேர்முகப்  பரீட்சை நடை பெறவுள்ளது.  இந்த பதினாறு வெற்றிடதுக்கும் நூற்றி ஏழு விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இதில் காரியாலய கரிய சகாயர்,சந்தை மேற்ப்பார்வையாளர்,சாரதி,தொழிலாளர் பதவி என்பன அடங்குகின்றன . இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த வாரம் மாநகர சபையினால் அறிவித்தல் விடுக்கப் பட்டது.

இலங்கைக்குஅமெரிக்க புதிய தூதுவராகமிஷேல் சிஸன்

Image
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர்- பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தூதுக்குழுவின் உதவித் தலைவராக இதுவரை கடமையாற்றியவர் ஆவார். இலங்கைக்கான தூதுவராக சிஸன் ஈராக்கிற்கான தூதுவராக பிரெட் மக்கேக் ஆகியோரின் நியமனங்களை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா- 'தமது புதிய பதவிகளில் இவர்கள் வழங்கவுள்ள நிபுணத்துவ சேவையினால் எமது நாடு பெரும் நன்மையடையும்' என கூறினார்

மக்கள் பிரதிநிதிகளுக்கு உலமா சபை பாராட்டு

Image
சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாய்ந்தமருது - மாளிகைக்கா உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கல்முனை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஏம்.பசீர், ஏ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்டீன் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்கு உறுப்பினராக மாளிகைகாடு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏ.பாயிஸ் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். 

சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு

Image
சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி ஆண்டு விழா வை ஆரம்பித்து வைத்து முகாமையாளருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைத்தனர் . படங்கள்- கல்முனை செய்தியாளர் யு.எம்.இஸ்ஹாக்

உஸ்ணத்தை தாங்கும் வெள்ளரி

Image
கல்முனை பகுதியில் வெள்ளரிப் பழ விற்பனை அதிகரித்துள்ளது உஷ்ணம் காரணமாக மக்கள் பழங்களில் நாட்டத்தை காட்டுகின்றனர் கூடுதலாக வெள்ளரிப்பழம் விற்பனை செயப்படுகிறது .

கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் கல்முனையில்

Image
mjpNkjF [dhjpgjp k`pe;j uh[gf;\ mtu;fspd; vz;zg;gb 'fkneFk' Ntiyj;jpl;lj;Jld; ,ize;J nghUshjhu mgptpUj;jp mikr;ru; g\py; uh[gf;\ mtu;fspd; topfhl;lypy; fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`;thy; ,d;W Muk;gpf;fg;gl;lJ. ,e;epfo;tpy; fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`; gpujk mjpjpahf fye;Jnfhz;L Ntiyj;jpl;lj;jpid Muk;gpj;J itj;jhu;. ,jpy; Fwpj;j gpuNjrj;J fpuhk Nrtfu;fSk;> rKu;j;jp cj;jpNahfj;ju;fSk; rkaj;jiytu;fs;> Kf;fpa gpuKfu;fs; kw;Wk; gpuNjrthrpfSk; fye;J rpwg;gpj;jdu;.

மாணவர்களுக்கு கோழி முட்டை

Image
பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் காலை உணவில் கோழி முட்டை ஒன்றையும் உள்ளடக்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டையுடனான காலை உணவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பணிப்புரை நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

அதாவது மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும். அந்த வகையில் உலகில் இடம் பெற்ற மெய்சிலிர்க்கும் காட்சிகளை மிகவும் வேகம் குறைவாக(Slow) வெளிப்படுத்தும் காணொளியைக் காணலாம் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமியின் செயற்பாட்டில் இடம்பெறும் அதன் செயல்கள் அனைத்தும் படு வேகமாகவே முடிந்துவிடும்

ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளின் விபரம்

Image
அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் இந்தியா, சிலி, கொஸ்டாரிக்கா, கௌதமாலா, மெக்ஸிகோ, பெரு, உருகுவே, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, கீறீஸ், ஹங்கெரி, போலாந்து, மோல்டோவா, ருமெனியா, பெனின், கெமரூன், லிபியா, மொரிஸியஸ், நைஜீரியா,  அமெரிக்காவின் பிரேணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் கொங்கோ, மொரிட்டானியா, உகன்டா, பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா. அமெரிக்காவின் பிரேணைக்கு வாக்களிப்பில்  பங்குபற்றாத நாடுகள் அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேஷியா.

கல்முனை அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது

Image
ஹரீஸ் எம்.பீ  கல்முனை மாநகரின் வர்த்தக அடையாளம் இந்த நாட்டின் வரலாற்றோடு மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். எமது பிரதேசம் அபிவிருத்தியில் பின் நோக்கி நிற்கின்றது என்று யாரும் குறிப்பிட முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; 'அபிவிருத்தி என்ற போட்டியில் எமது கல்முனை முதலாவது, இரண்டாம் ஸ்தானங்களைப் பெற்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அதனால் தற்போது நாங்கள் அபிவிருத்தியில் 2ம் ஸ்தானத்தில் உள்ளோம் என்ற மனப்பாண்மையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். மறைந்த தலைவர் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் பல திருப்பு முனைகளைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்திருந்தார். அவரது தூர நோக்கு சிந்தனையால் அப்போதே சுகாதாரத்துறை அபிவிருத்தி கண்டது. முழு அம்பாறை மாவட்ட

கல்முனை ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம்

Image
கல்முனை கட்டயடியில்இன்று மதியம்  இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் சாரதி படுகாயம் அடைந்து கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . வடி லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம் பெற்றது  .

கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டுஅமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை

Image
பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டு பிரதேச அபிவிருத்தி நட வடிக்கைகளின் போது கல் முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப் கல்முனை தமி ழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவதாக மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் குற்றம் சாட் டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையில் கட ந்த காலங்களில் பதவி வகித்த மேயர் கள் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவி ருத்தி நடவடிக்கைளில் நியாய மாக நடந்துகொண்டனர். குறிப்பாக முன்னாள் மேயர் மசூர் மெளலானா போன்றவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு செயற்பட்டனர். ஆனால் தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை தமிழ் பிர தேசங்களை அபிவிருத்தி செயற்பாடு களின் போது புறக்கணித்து வருகின் றார். உதாரணமாக, கல்முனை பிரதேசத்தில் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் கல்முனைப் பிரதேசத் தில் மூன்றிலொரு பங்கினராக வசிக்கும் 2 இலட்சம் ரூபா பெறு மதியான தெரு மின் விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 25 ஆயிரம் ரூபா பெறுமதி யான மின் விளக்குகள் க

கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ்விஜயம்

Image
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு  சனிக்கிழமை      விஜயம்   செய்த  சு காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் யு.ஏ.மென்டிஸ் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் வரவேற்கப் படுவதையும்,    வைத்திய அத்தியட்சகர்  பாவனைக்கு  பிக்கப் வாகனம்  கையளிப்பு செய்வதையும் ,மருந்து பொதிகள்  கையளிப்பு செய்வதையும் ஒட்சிசன் சேமிப்பு நிலையம் திறக்கப்படுவதையும் வைத்தியர்கள் மற்றும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுடன் கலந்து உரையாடுவதையும்  காணலாம்.