Posts

Showing posts from December, 2015

கல்முனை புதிய நகரத் திட்டத்திற்கு எத்தடை வரினும் அத்தடைகள் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்.

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மறைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனைநகரம், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில்விக்ரமசிங்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டு மீண்டும்2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவினால் அவ்வாக்குறுதி புதுப்பிக்கப்பட்டு,இன்று அது செயலுருப் பெறுவதற்கானமுன்னெடுப்புக்கள் நடைபெறுகின்ற நிலையில், தமிழ்தரப்பினர் குறிப்பாக ரெலோ அமைப்பு தலைவர்செல்வம் அடைக்கலநாதன், தமிழர் மகா சபைபோன்ற அமைப்புக்கள் இணைந்து இதற்கு எதிராகஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதும் அதனைபாரதுரமாக எதிர்ப்பதும் ஆச்சரியப்பட்க் கூடிய ஒருவிடயமல்ல. வட கிழக்கின் மொத்த முஸ்லிம்சமூதாயம் தொடர்பாக தமிழ் தரப்பினரின்மனோநிலையை எடுத்துக் காட்டுகின்ற மற்றொருநிகழ்வு மட்டுமே இதுவாகும். அன்று மறைந்த தலைவர் இந்த புதிய நகரத்திட்டத்தைக் கொண்டுவந்த பொழுதும் இதனைஎதிர்த்தார்கள். இங்கு அவர்கள் மூன்று பிரதானவிடயங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஒன்றுஉத்தேச புதிய நகரத்திற்காக சுவீகரிக்கப்பட இருக்கும் காணிகளில் கணிசமான அளவு காணிகள் தமிழ

வெளி நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவர் வீடு வந்து சேரவில்லை

Image
இவரைக் கண்டவர்கள் தகவல் வழங்குங்கள்  கடந்த 13 ஆந் திகதி வெளி நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய மட்டக்களப்பு  புது மண்டபத்தடி கன்னங் குடாவை சேர்ந்த  22 வயதுடைய  நவரட்ணம்  குணராஜ் என்ற வாலிபர்   வீடு வந்து சேரவில்லை என  தெரிவித்து  அவரது தந்தை நவரட்ணம்  கட்டுநாயக்க  விமான நிலைய பொலிஸ் நிலையத்திலும் ,வவுணதீவு போலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார் . 1993.06.10 ஆந் திகதி பிறந்த குணராஜ் மேசன் தொழில் புரிந்தவர் . இவர் கடந்த 2015.11.05 ஆந்  திகதி தொழில் வாய்ப்புக்காக மதிய கிழக்கு நாட்டுக்கு சென்றிருந்தார் . அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து  அவர் கடந்த 13.12.2015 அன்று  நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டிருந்தார் . கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கிய  குணராஜ்  இன்னும் வீடு வந்து சேரவில்லை . இவரைக் கண்டவர்கள்  அவரது தந்தைக்கு கீழ் குறிப்பிடும் தொலை பேசி இலக்கங்களுக்கு  தகவல் வளங்குமாறு  கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள் . 0772768735,  0779424185, 0717911324, 0756146306 

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்பு

Image
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக மேற்கு பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வயல் நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களுக்கு சொந்தமானவை எனறு கூறும் ஆர்ப்பாட்டகாரர்கள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகர

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் நாளை!

Image
நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான் இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம்,  அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ், வணிகம், உடற்கல்வி, உள்ளிட்ட 22 பாடநெறிகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடத்திற்கேற்பவும் பாடசாலைகளில் ஆசிரியர் கடமையேற்றதன் முன்னுரிமையின் அடிப்படையிலும் தெரிவுகள் மேற்கொள்ளப்படும.

சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய திருவெம்பாவை

Image
சேனைக்குடியிருப்பு  கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய திருவெம்பாவை தீர்த்தோற்சவம் நேற்று (26) நடைபெற்ற போது, சுவாமி வீதி வலம் வருவதை காணலாம.

கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் உட்பட 12 அதிபர்களுக்கு பாராட்டு

Image
ஓய்வு பெற்ற  கோட்டக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்முனை வலயக் கல்வி அலுவலக முஸ்லிம் கோட்ட பாடசாலைகளில் அதிபர்களாக கடமை புரிந்து ஓய்வு பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு   ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் தலைமையில்  நேற்று முன் தினம் கல்முனை மஹ்மூத் மகளிர்  கல்லூரி மண்டபத்தில் நடை பெற்றது. இவ்விழாவில்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  பிரதம அதிதியாகவும்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும்  விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.அப்துல் ரஹீம் ,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன்  ஆகியோர் கலந்து கொண்டனர்  கல்முனை  முஸ்லில் கோட்டத்தில் உள்ள 12 அதிபர்கள் உட்பட கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் உட்பட அதிபர்களும் கௌரவிக்கப் பட்டனர் . அதிதிகள் மற்றும் வலய அதிபர்கள்  சேவை நலனை பாராட்டி உரையாற்றியதுடன்  நினைவு சின்னம் ,பொன்னாடை ,பரிசு வழங்கி கௌரவித்தனர் . ஆசிரியரும்  பிறை

அழு குரலுடன் தீபம் ஏற்றும் சுனாமி நினைவு கல்முனையில்

Image
யு.எம்.இஸ்ஹாக்  தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 11 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும் அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர்.  இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளுர் நிறுவனங்களும் அமைப்புகளும் பாதிக்கப்படாத மக்களும் குறிப்பாக அரசாங்கமும்  காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரவேண்டும். 11 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது. கல்முனை மாமாங்க வித்தியாலய முற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குர

கல்முனை வலய முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ. ஜஹ்பர் கௌரவிப்பு

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக  பணியாற்றி இன்று 26 ஓய்வு  பெற்ற  நற்பிட்டிமுனை எஸ்.எம்.ஏ. ஜஹ்பர்  கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன் புரி சங்கத்தால்  பாராட்டி கௌரவிக்கப் பட்டார் .  கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்க  தலைவர் யு.எம். இஸ்ஹாக் இன்  நெறிப்படுத்தலில்  வலயக் கல்வி அலுவலக  கணக்காளர் எல்.ரீ .சாலிதீன்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.அப்துல் ரஹீம் ,நிருவாக உத்தியோகத்தர் ஜீ .பரம்சோதி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , நலன்  புரி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியராக ,அதிபராக , கோட்டக்  கல்விப் பணிப்பாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஜஹுபரின்  சேவைகளைப் பாராட்டியும் அவர் பழிவாங்கப் பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும்  அதிதிகளால் உரை நிகழ்த்தப் பட்டதுடன் . நலன் புரிச் சங்கத்தின் அன்பளிப்புக்களும்  அவருக்கு வழங்கி வைக்கப் பட்டன . பிரியாவிடையை  ஏற்றுக் கொண்ட  கோட்டக்  கல்விப் பணிப்பாளர் ஜஹ்

ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு அடி பணியாதீர்கள் மக்களுக்காக பணி செய்யும் அரசியல் வாதிகளை மக்கள் மயப்படுத்துங்கள்.

Image
ரூபவாஹினியின் செய்தி நடப்பு  விவகாரங்களுக்கான பணிப்பாளர்  யூ. எல். யாக்கூப்   தற்போதைய கால கட்டத்தில் ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என ரூபவாஹினியின் செய்தி நடப்பு  விவகாரங்களுக்கான பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ. எல். யாக்கூப் நேற்றைய தினம் (25) நிந்தவூரில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவுக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும்  உரை நிகழ்த்துகையில் ;   கடந்த 10 வருட காலத்தில் ஊடகத்துறை என்பது அரசியல், அதிகாரம், பலம், படைப்பலம் இவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு வாயடைக்கப்பட்ட ஊடகத்துறையாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் அனைவரும் ஊடகத்துறை மீது வைத்திருந்த அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து இலத்திரனியல் மற்றும் சமூக வலைத்தளங்கள் இந்நாட்டில் பாரிய புரட்சியொன்றை ஜனவரி 08ல் செய்திருந்தன.  அதேபோன்றுதான் இவ்வாறான ஊடகங்கள் மூலமாகவும் மேற்கத்திய நாடுகளிலும் பாரிய புரட்சிகள் முன்னெடுக்கப்பட

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொளரவிப்பு நிகழ்வும்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொளரவிப்பு நிகழ்வும் நேற்று  (25) மாலை நிந்தாவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்…