Posts

Showing posts from May, 2011

கல்முனை தமிழ்ப் பிரதேச கிராமங்களின் குறை நிறை பற்றி ஆராய்வு

Image
Print this கல்முனை (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் கே. லுவநாதன் தலைமையில் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாhளுமன்ற உறுப்பினர் பீ. பியசேன , மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேசத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின்போது தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராமங்களில் காணப்படும் குறைபாடுகள், அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

விரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

Image
339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி,  சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக இவற்றில் 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஜுலை மாதமளவில் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேல்தல் தெரிவிக்கப்படுவது போன்று  ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட மாட்டாது எனவும் அறிய முடிகின்றது. எஞ்சிய தேர்தல்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 38 உளளூராச்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக மீண்டும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது

நாவிதன்வெளி விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை வழங்க கோரிக்கை

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு இதுவரை அரசினால் வழங்கப்படும் உரமானியம் வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது. விதைப்பு வேலைகள் முடிவுற்று இரண்டு, மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், களை நாசினி விசிறிய நிலையிலும் இவ்வாறு உரமானியம் வழங்கப்படாதுள்ளதால் வேளாண்மைச் செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாமென விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த முறை ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் இப்பிரதேச விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்தனர். இம்முறை சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் 8500ற்கு மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. உரிய அதிகாரிகள் இப்பிரதேச விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

காதலி இறந்த செய்தி கேட்டு காதலனும் இறந்தான்

Image
காதலி இறந்த செய்தியைக் கேள்வியுற்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று மாலை வேளையில் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் எல். மதன் எனும் 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து காதலி கே. சுமித்தா (வயது-21) என்பவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மத்திய முகாம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இறந்து போன செய்தியைக் கேள்வியுற்றதுமே காதலன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்

Image
 கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் வாகன விபத்துக்கள்  பல இடம் பெற்றுள்ளன. விபத்துகளை சில காட்சிகள்

கல்முனை கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்துள்ளது

Image
கல்முனை மாளிகைக்கா டு கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்து ள்ளது. மீனவர்களால் படகு கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணவருடாந்த விளையாட்டுப்போட்டிகல்முனையில்

Image
கிழக்கு மாகாண சுகாதார ,விளையாட்டு அமைச்சின் ஏட்பாட்டில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று கல்முனையில் இடம்பெற்றது. கபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்கேணி, பற்றிமா மைதானங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இன் நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்களை சேர்ந்த   இளைசர்களும் யுவதிகளும் கலந்து கொண்டனர் .

வீடு கொடுத்தோருக்கு பாராட்டு

Image
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கான வீடமைப்பு உதவிகளை செய்து தந்த எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை கரைவாகுவட்டை எஹெட் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது. எஹெட் வீட்டுத்திட்ட தலைவர் எம்.எஸ்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - கல்முனை கரித்தாஸ் எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான  வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர் பிரதம அதிதியாகவும் வண.பிதா.கிரைட்டன் அவுட்ஸ்கோன் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றம் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் நன்றியுடன் நினைவுச்சினனமும் வழங்கி கௌரவித்ததுடன் வீடுகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மு.கா அரசியல் விவகாரப் பணிப்பாளராக ஹரீஸ் நியமிப்பு

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பணிப்பாளராகவும், அதிஉச்சபீட உறுப்பினராகவும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 23வது பேராளர் மாநாடு வவுனியா நகர சபை மர்ஹீம் நூர்தீன் மசூர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட அலுவலகமும் மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்ட ஆழ் கடல் மீன் பிடி இயந்திர படகு உரிமையாளர்  மீனவர் கூட்டுறவு சங்கத்தின்  மாவட்ட அலுவலகமும்  மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களும்,கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களும் கல்முனை மாநகர முதல்வரும் கலந்து கொண்டனர்.