Posts

Showing posts from August, 2011

நட்பிட்டிமுனையில் மின்னொளி கிறிகட்

Image
நற்பிட்டிமுனை ஒக்ஸ்போர்ட்  விளையாட்டுக் கழகம்  புனித நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 32 பிரபல்யமான கிறிகட்   கழகங்களை   கொண்டு எதிர்வரும் 2011. 09.02 வெள்ளி,சனி,ஞாயிறு ,ஆகிய தினங்களில் நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்கத்தில் ''மெகா நைட்'' மின்னொளி மென்பந்து கிறிகட் சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளது மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள இச்சுற்றுத் தொடரில் முதலிடத்தைப் பெறும் அணிக்கு 15000 ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கேடயமும் வழங்கப்படவுள்ளதோடு  இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 8000 ரூபா  பணப்பரிசிலும்  வெற்றிக்கேடயமும் வழங்கப்படவுள்ளது. இறுதிப்போட்டிக்கு கிழக்குமாகாணசபை  உறுப்பினர் கே.எம்.அப்துல் ராசாக்(ஜவாத்)பிரதம அதிதியாக கலந்துகொள்வதுடன் இன்னும் பல  நிறுவனங்களின் தலைவர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாக கழகத்தலைவர்  வீ.எம்.மக்பூல் தெரிவித்தார்

சர்வதேச அல்குர்ஆன் போட்டி - இலங்கையர் 4 ஆம் இடம்

Image
(வீடியோ இணைப்பு) 1 ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்துகொண்டஎமது நாட்டைச் சேர்ந்த ஹாபிழ் அப்துல் காதர் முஹம்மத் கனி முகம்மத் அஸ்மி அ திர்கம் 65,000  (ரூபா 1,950,000) பரிசை வென்றார்.இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 15வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவில் நடைபெற்று வருகிறது.   இந்தப் போட்டியில் 92  வீதமான புள்ளிகளை பெற்று லிபியா நாட்டை சேர்ந்த போட்டியாளர் காலித் முகம்மத் அல் கர்டோஸ் முதலாமிடத்தை பெற்று திர்கம் 250,000  பரிசை தட்டிச்சென்றார். கத்தார் நாட்டைச்சேர்ந்த அப்துல்லாஹ் ஹாமத் அபூ ஷாரிதா இரண்டாம் இடத்தையும் துருக்கி நாட்டைச்சேர்ந்த அஹமத் ஷரிகையா மூன்றாம் இடத்தையும் பெற்று முறையே திர்கம் 200,000 மற்றும் திர்கம் 150,000 பரிசை வென்றார்கள். 15 வருட அல் குர்ஆன் போட்டி வரலாற்றில் இந்த தடவை இரண்டு போட்டியாளர்கள் பார்வை குறைபாட்டுடன் கலந்துகொண்டார்கள், இதில் விசேடமாக கு

விருப்பு இலக்கம் திங்களன்று

Image
நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி.சுமணசிறி தெரிவித்துள்ளார். திங்களன்று விருப்பு இலக்கம் வழங்கப்பட வேண்டுமானால் அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார். எனினும் இதுவரையில் மூன்று மாவட்டங்களில் இருந்தே வேட்பு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மீதமுள்ள மாவட்ட வேட்பு மனுக்கள் கிடைத்துவிட்டால் விருப்பு இலக்கங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

வன்முறைகளை தூண்டினால் கடும் நடவடிக்கை!

Image
அவசரகால சட்ட நீக்கத்தை சாதகமாக்கிவன்முறைகளை மீண்டும் தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்குமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வன்முறைகளை முறியடிப்பதற்காகவே அவசர காலச்சட்டம் இதுவரைகாலமும் அமுலில்இருந்தது. இன்று நாட்டில் அமைதி திரும்பியிருப்பதனாலேயே அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி முற்றாக நீக்கியூள்ளார். ஆயினும் வன்முறைகளை மீண்டும் “அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி எவரும் வன்முறைகளுக்கு தூபமிட்டால் அரசு பார்த்துக் கொண்டிருக்காது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும்” என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறினார். நாட்டில் சமாதானமும் அமைதியூம் நிலைகொண்டிருக்கின்ற இன்றைய சு+ழ்நிலையில் அவசரகால சட்டத்தின் கடுமையான சட்டவிதிகள் அவசியமில்லை என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் சில காலமாக அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக தளர்த்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~  நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக கடந்த வியாழனன்று பாரா

பட்டதாரிகளுக்குவேலைவாய்ப்புவழங்கப் பட வேண்டும்

Image
 நாடு பூராகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு  அவர்களின் கஸ்ட்ர நிலை அறிந்து வேலைவாய்ப்பு வழங்கப் பட வேண்டும் . இன்றிலிருந்து இருபத்தொரு நாட்களுக்குள்  கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான விண்ணப்பம் கோரப்படாதவிடது  அகிம்சை வழியில்  போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக  அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியும் ,தொழி ரீதியாக  தகுதி வாய்ந்த  இலங்கை  உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா  பட்டதாரிகளின் தொழில் சங்கம்  இணைந்து இன்று நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில்  பிரகடனம் செயப்பட்டுள்ளது. இன்று  சனிக்கிழமை  சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில்  நடைபெற்ற  தொழில்   ரீதியாக  தகுதி வாய்ந்த  இலங்கை  உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா  பட்டதாரிகளின் தொழில் சங்க தலைவர் ஏ.எம்.நசார்  தலைமையி இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அகில இலங்கை பொது ஊழியர் முன்னணி தலைவர் எஸ்.லோகநாதன் ,பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழில்   ரீதியாக  தகுதி வாய்ந்த  இலங்கை  உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா  பட்டதாரிகளின் தொழில் சங்க செயலாளர் எம்.எச்.முபாரக் இருபத்தொரு கோரிக்கை

எமது மாற்றமே சமுகத்தின் எழுச்சி இப்தார் நிகழ்வு

Image
சீரோ ஸ்ரீ  லங்கா  அமைப்பான சமூக முன்னேற்ற  ஆய்வு அமையம்  முஸ்லிம் எயிட்  அனுசரணையுடன்  ஏற்பாடு செய்த  எமது மாற்றமே சமுகத்தின் எழுச்சி  எனும் கருப் பொருளை கொண்டதான  இப்தார்  நிகழ்வு  சாய்ந்தமருது  சி பிரீஸ் ஹோட்டலில் நடை பெற்றது. இப்தார்  நிகழ்வில் கலந்து கொண்ட மூவினத்தவர்களையும் ,இந்து,பௌத்த  மத தலைவர்கள் உரையாற்றுவதையும் காணலாம்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Image
 அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாபாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரத்ன, அதாவுட செனவரத்ன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசீம், சிறியாணி விஜேவிக்கிரம, பி.பியசேன, கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, ரீ.நவரெட்னராஜா, அம்பாரை அரசாங்க அதிபர் சுனில்கன்னங்கரா, உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், த

பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம்.

Image
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் செயற்பாட்டு ரீதியாகவும்,வளங்கள் அடிப்படையிலும், அபிவிருத்தியடைந்து வரும் இவ்வேளையில் இப்பாடசாலைகளில் நீண்டககாலமாக நிரப்பப்படாமல் உள்ள பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரும்,வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்,வீடமைப்பும் நிர்மானமும்,கிராமிய மின்சாரம்,மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். இதேவேளை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடாக 2008ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 100 கல்வி அலுவலக,காரியாலய ஊழியர்களுக்கான அமைய நியமனம் வழங்குவதற்கும் இவ்வமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 930 முன்பள்ளி ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவுகளின்றி நீண்ட காலமாக கடமையாற்றிவருகின்றார்கள். இவர்களால் வழங்கப்படும் சேவையை ஊக்குவிப்பதற்காகவும்,பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தும் இ

அரச ஊழியர் இடமாற்றத்துக்கு புதிய திட்டம்!

Image
அரசாங்க ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதிய திட்டமொன்றை அமுல்படுத்த அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் 1589/30 செயற்றிட்டத்தின்படி சகல அரசாங்க ஊழியர்களும் இடமாற்றத் திட்டத்துக்கு உட்பட்டவர்களேயாவர். அரசாங்க நிருவாக சேவை ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் தற்பொழுது திட்டமொன்று அமுலில் உள்ளது. முறையான  இடமாற்றத் திட்டங்கள் இல்லாத அரசாங்க சேவைகளில் புதிய திட்டமொன்றை வகுத்துச் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிசாம் காரியப்பர் கல்முனை மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக நியமனம்

Image
சிரேஸ்ட சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளருமான நிசாம் காரியப்பர் கல்முனை மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை மாநாகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கட்சியின் சிரேஸ்ட பிரதிதித் தலைவரும் முன்னாள்  வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  ஏ.எம். அப்துல் மஜீட், கல்முனை மாநகர சபையின் முன்னாள்  பிரதி முதல்வர் ஏ. பசீர்  கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், நிசார், தௌபீக், நிசார்டீன் ஆகியோரோடு புதிய முகம்களாக தொழிலதிபரும் கலாநிதியுமான எம் சிராஜ், இளைஞசர்களான அசாம் மௌலவி, பரக்கத் மற்றும் சட்டத்தரணி ரோசன்  அக்தார் உள்ளிட்ட பலர் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவும் செய்யும் கூட்டம் நேற்று கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ் ஸலாமில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மாலை 5மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை வியாழக்கிழமை 1

முக்கிய கட்சிகள் இன்று தாக்கல்; 124 சுயேச்சைகள் கட்டுப்பணம்

Image
வேட்புமனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி : 23 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் பூர்த்தியடைகிறது. ஐ. ம. சு. மு, ஐ. தே. க. ஆகிய பிரதான கட்சிகள் நேற்று சில உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. எஞ்சிய சபைகளுக்கு இன்று தாக்கல் செய்யப்படுமென கட்சி வட்டாரங்கள் கூறின. நேற்று நண்பகல் வரை 143 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவென நேற்று புதன்கிழமை (24) மூன்று அரசியற் கட்சிகளும், மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. இதுதவிர 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம். எம். எஸ். கே. பண்டாரமாப்பா தெரிவித்தார். குஞ்சித் தம்பி ஏகாம்பரம் தலைமை வேட்பாளராக கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியும், காத்தமுத்து கணேஷ் தலைமை வேட்பாளராகக் கொண்ட ஈழவர் ஜனநாயக முன்னணியும், எஸ். பிரேம ராணியை தலைமை வேட்பாளராகக் கொண்ட ஜனசெத்த பெரமுனவும் தங்களது வேட்பு மனுக

கல்முனை மாநகர சபைக்குவிலங்கு அறு மனை ,வாகன தரிப்பிடம் ,சிறுவர் பூங்கா தொழில் நுட்ப வேலைகள் பூர்த்தி

Image
கல்முனை மாநகர சபைக்கு  நீண்டகாலமாக தேவையாக இருந்து வரும்  விலங்கு அறு மனை ,வாகன தரிப்பிடம் ,சிறுவர் பூங்கா  என்பவற்றினை அமைப்பதற்காக  ஆசிய நிறுவனத்தின்  உள்ளூர் பொருளாதார  ஆட்சி நிகச்சி திட்டத்தின் கீழ்  இதற்க்கான வரைபடம் ,தொழில் நுட்ப  வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளன . இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் தலைமையில்  மாநகர சபா மண்டபத்தில்  நடை பெற்றது. கல்முனை மாநகர சபை விசேட ஆணையாளர் எம்.எம்.நௌபல் ,கணக்காளர் எஸ்.டி.சாலிதீன்,பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌசி,,மாநகர பிரதம மிருக வைத்திய அதிகாரி, டாக்டர்.சுல்பிகார் உட்பட  ஆசிய மன்றத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர்  எம்.ஐ.வலீத்  மற்றும்  அதிகாரிகளும்.வர்த்தக சங்க பிரமுகர்களும் கலந்து இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

கல்முனை மாநகர சபை தேர்தல் விளம்பரம்

Image
பொது அறிவு   கல்முனை மாநகர சபை  தேர்தல் விளம்பரம் கல்முனை நிவ்ஸ் இணைய தளமூடாக  விளம்பரம் செயப்படவுள்ளது   விபரங்களுக்கு - farhathmi@yahoo.com  மின்னஞ்சல்  ஊடாக தொடர்பு கொளவும்.  அல்லது  kalmunai media1965 என்ற skype  மூலம் தொடர்பை ஏற்படுத்தலாம்

சட்டத்தை எவரும் கையிலெடுக்க அனுமதிக்க போவதில்லை முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில்: கோட்டாபய 0

Image
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் தற்போது மர்ம மனிதன் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கண்டி, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான மஸ்ஜித்களின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்தித்தித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரின் ஏற்பாட்டில் விசேட விமாங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மாநட்டில் பங்கு கொண்டுள்ளனர். அங்கு உரையாற்றியுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் புலிகளை அழித்த படையினருக்கு முகாம்களை சுற்று வளைக்கும்  முஸ்லிம் வாலிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சிரமமான விடயமல்ல. சிலர் வதந்திகளை பரப்பி அமைதியை குழைக்க முயற்சிகின்றனர். அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது அதனை சீர் குழைக்க எந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அவசரகால சட்டத்தை நீடிக்க செய்ய இவ் வாறான வேலைகளை செய்ய அரசாங்கத்துக்கு எந்த அவசியமும் இல்லை. ஜனாதிபதி நினைத்தால் அவசர கால சட்டத்தை
Image
Eid Mubarac

கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

Image
  கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு கல்லுரி மண்டபத்தில் அதன் தலைவர் எம்.எம். மீராசாகிபு ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

இரவு நேரங்களில் சகல பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு!

Image
பாதுகாப்பு செயலாளர் உத்தரவு ரமழான் மாத இரவு நேரங்களில் நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் இந்த உத்தரவை வழங்கினார். புனித ரமழான் மாத இரவுகளில் நோன்பு பிடிப்பதிலும் பள்ளிவாசலுக்குச் சென்று தராவீஹ் தொழுகையை நிறைவேற்றுவதிலும் நாட்டில் உள்ள சகல முஸ்லிம்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கல்முனை மாநகரவிசேட ஆணையாளர் நௌபல்

Image

பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் இன்று விசேட கூட்டம்

Image
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் மர்ம மனிதன் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அமைதியான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெறும் விசேட கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பாதுகாப்புக்கு பொலிசாரே பொறுப்பு , இராணுவத்தை அகற்ற முடிவு

Image
 பிரதி பொலிஸ்மா அதிபர்  கிறீஸ் மனிதன், மர்ம மனிதன் தொடர்பாக கல்முனை மாநகர சபை பிரிவின் கல்முனை (தமிழ் பிரிவு), சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம் பிரிவு), ஆகிய பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள விழிப்புணர்வு குழு அங்கத்தவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இன்று கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் ரி.நவரெட்ணராஜா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா, கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு புலனாய்வு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத், அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயல

கல்முனையில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரீட்சை

Image
     பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டபடி இன்று  ஞாயிற்றுக்கிழமை  ஐந்தாம் தர புலமை பரீட்சை  இடையூறு எதுவுமின்றி  நடைபெற்று முடிந்தது இப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 427 மாணவர்கள்  தோற்றி இருந்தனர். சிங்கள மொழிமூலம் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 610 பேரும்- தமிழ்மொழி மூலம் 79 ஆயிரத்து 817 மாணவர்களும் தோற்றி இருந்தனர். இதற்கென 3721 பரீட்சை நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்  பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. கல்முனை பிர தேசத்தில் நிலவும் மர்ம மனிதன் பீதி காரணமாக  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை  பெற்றோர்கள் நேரத்துக்கு முன்னதாக  பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வந்திருந்ததை அவதானிக்கக்  கூடியதாக இருந்ததுடன் .பெற்றோர்கள் பரீட்சை முடியும் வரை பாடசாலை சுற்றுவட்டத்தில் காத்திருந்தனர். கல்முனை கர்மேல் பத்திமா  மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதையும் காண முடிந்தது.

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்ன?

Image
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே உசிதம் ! முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் கருத்துத் தெரிவிப்பு முப்பது வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தமிழ் பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழருக்கான தீர்வில் தமது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பிரதான முஸ்லிம் தலைவர்களிடம் வார மஞ்சரி வினவிய போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அப்படியே தருகிறோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகள் முடங்கிப் போயுள
Image

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்”

Image
  - ஐதேக - நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கும் அரசு 'மர்ம மனிதன்' நாடகத்தை நடத்தி வருவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: "கிழக்கில் மாத்திரமன்றி, இப்போது தெற்கு மற்றும் கொழும்பிலும் மர்ம மனிதர்களைக் கைதுசெய்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள், இந்த புனித ரமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபவர்கள். ஆனால், இந்தப் பிரச்சினையால் பெண்களை வீடுகளில் தனியேவிட்டு ஆண்களால் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாதுள்ளது. இதனால், ரமழான் மாதத்தின் சிறப்பு மழுங்கடிக்கப்படுகின்றது.