கல்முனை மாநகர சபைக்குவிலங்கு அறு மனை ,வாகன தரிப்பிடம் ,சிறுவர் பூங்கா தொழில் நுட்ப வேலைகள் பூர்த்தி

கல்முனை மாநகர சபைக்கு  நீண்டகாலமாக தேவையாக இருந்து வரும்  விலங்கு அறு மனை ,வாகன தரிப்பிடம் ,சிறுவர் பூங்கா  என்பவற்றினை அமைப்பதற்காக  ஆசிய நிறுவனத்தின்  உள்ளூர் பொருளாதார  ஆட்சி நிகச்சி திட்டத்தின் கீழ்  இதற்க்கான வரைபடம் ,தொழில் நுட்ப  வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளன .

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் தலைமையில்  மாநகர சபா மண்டபத்தில்  நடை பெற்றது.


கல்முனை மாநகர சபை விசேட ஆணையாளர் எம்.எம்.நௌபல் ,கணக்காளர் எஸ்.டி.சாலிதீன்,பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌசி,,மாநகர பிரதம மிருக வைத்திய அதிகாரி, டாக்டர்.சுல்பிகார் உட்பட  ஆசிய மன்றத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர்  எம்.ஐ.வலீத்  மற்றும்  அதிகாரிகளும்.வர்த்தக சங்க பிரமுகர்களும் கலந்து இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்