Posts

Showing posts from February, 2018

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

Image
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து (24) தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதனால் பெரும்போக நெல் அறுவடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருவதனால் மாவட்டத்தின் நெல் அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் பெரும்போக  அறுவடையில் பெருந்தடங்கல்  ஏற்பட்டுள்ளதோடு மழை தொடரின் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பாலமுனை நிந்நவூர் சம்மாந்துறை இறக்காமம்,  சடயந்தலாவ சவளக்கடை நற்பிட்டிமுனை  பிரதேச விவசாயிகள் மழைத்தாக்கத்தால் அறுவடைத்தாமதத்தையும்.நஷ்டத்தையும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போகம் மாத்திரமல்ல கடந்தாண்டுகளில் கூட  அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு  தொடர்ந்தும் இந்நிலை ஏற்பட்டு வருவதை நாம் காணுகிறோம். பல கண்டங்களில் அறுவடையும் குறைந்து நெல்லின்விலையும் குறைந்துள்ள நிலையில் மழையும் பாதிப்பை ஏற்படுத்தின் நெற

சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு

Image
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றது. இதற்கமைவாக புதிதாக 6 அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்கள் மூன்று பேரும், பிரதியமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதமர்; ரணில் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமர் இந்த பதவிப் பொறுப்பை குறுகிய காலத்திற்காக மாத்திரமே பொறுப்பேற்றுள்ளார். ஹரீன் பெர்னாண்டோ - அடிப்படை வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கபீர் ஹாஷிம் - உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். சாகல ரத்னாயக்க - இளைஞர் அலுவல்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில்துறை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ரவீந்திர சமரவீர - வனவிலங்கு, நிலைபேறான அபிவிருத்தி அமைச்சராக

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் றோஸ் இல்லம் சம்பியனானது

Image
  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  இல்ல விளையாட்டுப் போட்டியில் இவ்வருட சம்பியனாக 304 புள்ளிகளைப் பெற்று  சிவப்பு நிற றோஸ் இல்லம் சம்பியனாக தெரிவாகியுள்ளது. வித்தியாலய  அதிபர் வை.எல் .ஏ.பஸீர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நற்பிட்டிமுனை தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்  பொது விளையாட்டு மைதானத்தில் லாபீர் வித்தியாலய  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின்  இறுதி நாள் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது. நடை பெற்ற மைதான சுவட்டு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிவப்பு நிற றோஸ் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று  முதலாவது இடத்தையும் ,பச்சைநிற ஜெஸ்மின் இல்லம் 282 புள்ளிகளைப்  பெற்று இரண்டாம் இடத்தையும் , நீல நிற லோட்டஸ் இல்லம் 260 புள்ளிகளைப்  பெற்று  மூன்றாம் இடத்தையும் பெற்று  முதலாம் இடத்தைப் பெற்ற  றோஸ் இல்லம் இவ்வருட சம்பியன்  கிண்ணத்தை வென்றது. நடை பெற்று முடிந்த இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாகவும் ,கெளரவ அதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எ

கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் 196 வது கொடியேற்ற விழா

Image
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை மாநகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து காணப்படும் வங்கக் கடலோரம் அமந்துள்ள கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் 196 வது கொடியேற்ற விழா நேற்று (16) ஆரம்பமானது.  சங்கை மிகு சாஹூல் ஹமீத் ஒலியுல்ளா அவர்களின் நினைவாக ஏழு தட்டு மினராவில் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மௌலீது மஜ்லிஸ் பக்கீர் ஜமாஅத்தாரின் றாதிபு என்பன இடம் பெற்று இறுதி நாளான அடுத்த மாதம் 28ஆம் திகதியன்று மாபெரும் அன்னதானம் கந்தூரி வழங்கும் நிகழ்வும்  அங்கு நடை பெறவுள்ளது.  வருடாவருடம் ஜமாஅதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழாவானது கல்முனைகுடி முகையதீன் ஜும்மாப்பள்ளி பள்ளிவாசலில் இருந்து உலமாக்கள், கல்விமான்கள் புடைசூழ பக்கீர் ஜமாஅத்தாரின் பைத் ஓசை முழங்க ஊர்வலமாக கொடி எடுத்துவரப்பட்டு நேற்று மாலை மினராவில் ஏற்றி வைக்கப்பட்டது.  இவ்விழாவானது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களும் இன மத பேதமின்றி கலந்து கொள்ளும் ஒரு புனித நிகழ்வாக கருதப்படுகின்றது.  நேற்று இடம் பெற்ற இந்தக் கொடியேற்ற நிகழ்வை

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்

Image
அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் , பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறுகளை வெளியிடுவார். அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து தேர்தல் முடிவுகளும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடமுடியும்

Image
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் மத்தியில் அவர் உரையாற்றினார் . ஒட்டுமொத்தமாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பு சுமார் 60சதவீதமாக காணப்பட்டதாகவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தலின்போது பொதுமக்களும் அனைத்து கட்சிகளும் அமைதியை பாதுகாத்தமைக்காக ஆணைக்குழுவின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அமைதியான முறையில் வன்முறையற்று தேர்தல் நடைபெற்றதையிட்டு தான் பெருமைப்படுவதாகவும் அவர்; கூறினார். வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த அவர் மொத்த வாக்குப்பதிவு வீதம் மேலும் அதிகரிக்ககூடும் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் வாக்குகள் எண்ணும் பணியும் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்.

Image
சனிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள்  என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார். இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.    இவர்கள்   நாளை  கடமைகளை தொடங்குவார்கள் என திரு.குணசேகர கூறினார்.    முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.    அவர் நேற்றுசூ  கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்  ஊள்ளுராட்சி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும். வேட்பாளர்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்க முடியாது. தமது அலுவலகங்களில் கட்சி சின்னங்களையோஇ கொடிகளையோ காட்சிப்படுத்த முடியாது என்று

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கான புதிய உவேந்தரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோராமல் உபவேந்தர்; எம்.எம்.எம்.நாஜிம் காலத்தைக் கடத்துகின்றார்.

Image
  தெ .கி.ப.கழக ஆசிரியர் சங்கத்தலைவர் எம்.ஏ.அப்துல் ஜப்பார்; குற்றச்சாட்டு  (பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு. எம்.ஜெஸில்) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான புதிய உவேந்தரை நியமிப்பதற்கு பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோராமல் தான் மீண்டும் உபவேந்தராக நியமனம் பெற்று அதன் நன்மைகளை தொடர்சியாக அனுபவிபதற்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் திட்டமிட்டுள்ளார் என தென்கிழக்குப் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தின் தலைவரும்,முன்ளாள் பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.அப்துல் ஜப்பார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(06-02-2018) தென்கிழக்குப் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இந்த குற்றச் சாட்டைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் தெரிவித்தாவது:-பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 14ஃ2016 சுற்று நிருபத்திற்கிணங்க தென்கிழக்கு பல்கலைக்கழகம் உபவேந்தர் பதவினை பத்திரிகைகள் வாயிலாக அழைத்திருக்க வேண்டும். மேலும் தேடுதல் குழுவையும் மதிப்பீட்டு குழுவையும் பல்கலைக்கழக மூதவை நியமித்திருக்க வேண்டும

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் சுதந்திர தின விழா

Image
70வது சுதந்திர தினத்தை அபிமானத்துடன் கொண்டாடும் வகையில் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் நிறுவனம் ஏற்பாடு செய்த சுதந்திர தின விழா அல்-கரீம் பவுண்டேஸன் தையல் பயிற்சி நிலையத்தில் இன்று நடை பெற்றது. அல்-கரீம் பவுண்டேஸன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சமாதான புறாவும் அங்கு பறக்கவிடப்பட்டது. 70வது சுதந்திர தின நினைவாக மரக்கன்றுகளும் நட்டுவைக்கப்பட்டதுடன் தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்ச்சியை நிறைவு செய்த 40 யுவதிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி ஏ.முனாஸீர் பிரதம அதிதியாக கலந்து கொன்டு சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தினார். அவர் அங்கு உரையாற்றுகையில் சுதந்திர தினத்திலே நாங்கள் அனைவரும் நாட்டுப்பற்றுமிக்கவர்களாக இருக்க வேண்டும். எமது தேசியக் கீதம் இசைக்கப்படுகின்ற போது தேச உணர்வு கொண்டவர்களாக பெற்றோர்கள் இருக்கின்ற போதுதான் எதிர்கால சந்ததியினர் எங்களைத் தொடர்ந்து வருகின்ற எமது பிள்ளைகளை நாட்டுப்பற்றுமிக்க பிள்ளைகளாக உருவா