Posts

Showing posts from August, 2018

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் - முஸ்லிம் உறவை சிதைக்க சதி!

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்  முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-  ‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன.  குறித்த செய்தியில் விபத்துக்குள்ளான  பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல.  குறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்குச் சொந்தமானது என்று அனுமானித்து

நற்பிட்டிமுனை மண்ணை கெளரவித்த கிழக்கு மாகாண ஆளுநரை மண்ணின் மைந்தர்கள்முபீத் ,ஹலீம் கெளரவித்தார்கள். மண்ணுக்குப் பெருமை

Image

நற்பிட்டிமுனை கல்வி சாதனையாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் கெளரவிப்பு

Image
நற்பிட்டிமுனை கிராமத்தில்  கடந்த ஆண்டு (2017) கல்வித் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு நேற்று   செவ்வாய்க்கிழமை (28) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றது. நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் நடை பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவித்தார் . நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவரும் வணிக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் கல்வி கற்ற  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த 14 மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப் பட்டனர் . இந்த  கெளரவிப்பு நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜீ.கே.முத்துபண்டா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் , உட்பட பாராட்டுப் பெற்ற  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பித்தனர் .

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக உமர் மௌலானா

Image
​ கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் ​எஸ்.எம்.எம்.எஸ்.  உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக  சேவை  அதிகாரியான இவர் கடந்த காலங்களில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அதிபராகவும் ,சம்மாந்துறை வலயக்கல்வி  அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்  பணிப்பாளராகவும்  நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் பெற்ற   இலங்கை கல்வி நிருவாக  சேவையில்  தரம் 11 ஐ சேர்ந்த  அதிகாரியாவார் . முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமை புரிந்த இவர் அத்துடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் 

கலப்பு தேர்தல் முறையை மாற்ற முயற்சிப்போர் ஜனநாயக துரோகிகள்

Image
தொகுதிவாரி முறையையும் உள்ளடக்கிய கலப்பு முறையான தேர்தல் முறையை மாற்ற முயற்சிப்பவர்கள் ஜனநாயக துரோகிகளாவார்கள் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றஞ்சாட்டினார். தேர்தல் முறையை இனவாதக் கோணத்தில் பார்க்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மாகாணசபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார். கலப்பு முறையினால் இனத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்காது என சில கட்சிகள் கூறினாலும், கட்சிக்கான பங்கு கிடைக்கவில்லையென்பதே அவர்களின் முக்கிய கவலையாகும். இவ்வாறான கட்சிகள் தேசிய கட்சிகளைப் பிடித்துத் தொங்குவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். விருப்புவாக்குமுறை மோசடி நிறைந்த முறை என்பதாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட தொகுதிவாரி முறையையும் உள்ளடக்கிய கலப்புமுறையை கொண்டுவந்தோம். சில கட்சிகள் இனவாதக் கோணத்தில் இதனைப் பார்க்கின்றன. நாடு ஏற்கனவே பாரிய இன முரண்பாட்டுக்கு முகங்கொடுத்திருப்பதால் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுக

கல்முனையில் யுவதின் வயிற்றுக்குள் "ஒன்றரைக் கிலோ தலை முடி" சத்திர சிகிச்சை மூலம் வெளியேற்றம் .

Image
கல்முனை அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட  பெண் நோயாளி ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து ஒன்றரைக் கிலோ எடையுடைய தலை முடி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்   இடம் பெற்றுள்ளது பெற்றுள்ளது. 17வயதுடைய யுவதி  ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்முனை அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட போது வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபிள் .யு. சமீம் நோயாளியை சோதனைக்குட்படுத்திய போது  அவரது வயிற்றில் உட்பகுதியில் கட்டி  போன்று தென்பட்டுள்ளது. நோயாளியின் இரைப்பை  பகுதியை எண்டஸ்கோபி  கமரா மூலம் சோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்  சமீம் நோயாளியின் உணவுக்கால்வாயில் தலை முடி இருப்பதை உறுதி செய்ததன் பின்னர் அவசரமாக நோயாளியை சத்திர சிகிச்சைக்குட்படுத்துயுள்ளார் . இதன் போதே நோயாளியின் வயிற்றில் இருந்து ஒன்றரைக் கிலோ எடை கொண்ட முடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் தனக்கு முதல் அனுபவம் என்றும் இலங்கையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம் பெற்றி

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் காலமானார்

Image
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியல் விஞ்ஞானத் துறை பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் (67) காலாமானார். அவர் இன்று (25) யாழ். பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். 1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த அவர்,  ஒரு ஆண் மற்றும் இரு பெண்குழந்தைகளின் தந்தையாவார். சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ்,  சமூக ரீதியான செயற்பாடுகள், இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிக அக்கறையுள்ள சமூக ஆர்வலராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாக பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி (MA, Ph.D.) பட்டங்களையும் பெற்றார். முசலி தெற்கு மீள்குடியேற்றம்  மற்றும் வில்பத்து சர்ச்சை தொடர்பிலான " Denying the Right to Return"  (மீள்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு) எனும் நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்நடை பெற்ற வரலெட்சுமி வழிபாடு

Image
இந்துப் பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது. எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவூம்இ வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவூம் அதிகம் மேற்கொள்வர்.  அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடை பெற்றது. கல்முனை பிரதேசத்தில் பிரதான வழிபாடுகள் பஞ்ச பாண்டவர்களின் பதியாக விளங்கும் பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலயத்தில்  ஆலய குரு சிவஸ்ரீ ரத்தின சபா சசிசர்மா குருக்கள் தலைமையில்  இடம் பெற்றன .

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

Image
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அறிக்கைக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிராக 139 பேர் வாக்களித்தனர். இதன்போது மக்கள் விடுதலை முன்னணி, அறிக்கைக்கு ஆதரவாக சபையில் கருத்துகளை தெரிவித்தபோதும், வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். குறித்த அறிக்கை தொடர்பில் இன்று (24) காலை 11.50 முதல் இடம்பெற்ற விவாதத்தை அடுத்து, விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கு சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரம் உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீலுக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு

Image
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் -1 க்கு உயர்வு பெற்ற  கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களைப்  பாராட்டும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை  கல்முனை அல்தாப்  ஹோட்டலில்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ .எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்றது . மதிய விருந்துபசாரத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் . இந்த நிகழ்வில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Dr எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா (கல்வி முகாமைத்துவம்), எஸ்.எல்.ஏ.ரஹீம் (கல்வி அபிவிருத்தி),பீ.எம்.வை.அரபாத் மொஹிதீன் (திட்டமிடல் ),கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் உட்பட  அல் -கரீம் பவுண்டேஷன் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் ,ஊடகவியலாளரும் ,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்