Posts

Showing posts from November, 2013

மரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி

Image
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் 200 க்கும் மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள், மற்றும் சட்ட வைத்தியர்களுக்கான  மரண விசாரணைகள் மற்றும் சட்டநுனுக்கங்கள்  மருத்துவ அறிக்கை பற்றிய டிப்ளோமா பயிற்சி நெறி ஒன்று இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு நீதி அமைச்சா; ரவுப் ஹக்கிமும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹிரிம்புருகம மற்றும் மருத்துவ பீட பேராசிரியர் ரவீந்திர பெணான்டோ ஆகியோர் தலைமையில் இன்று (30) சனிக்கிழமை  பொரலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பயிற்ச்சி நெறிஒரு வருட தொலைக்கல்வி டிப்ளோமா பாடநெறியாக பயிற்றுவிக்கப்படுகின்றது. மரண விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் மரணங்களில் ஏற்படும் சட்டங்கள், வைத்திய பரிசோதனை அறிக்கைகள் இராசயண பகுப்பாய்வுகள் பற்றிய அறிவுகளை மேம்படுத்துவதே  இப் பயிற்சி நெறியின் நோக்கமாகும். அமைச்சர் ரவுப் ஹக்கீம் இங்கு உரையாற்றுகையில் – இப் பயிற்ச்சி நெறியை அடுத்த வரும் காலங்களில்  இலவசமாக பயில்வதற்காக அடுத்து வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திரைசேரி அதிகாரிகளுடன் பேசி நிதி ஒதுக்கித்

முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

Image
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. ஏனைய மாகாணங்கள் முறையே மேல்மாகாணம், சப்பிரகமுவ, வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், வடமாகாணம் ஆகியன அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டன. கடந்த வாரம் நாவலப்பிட்டி வெலியத்த மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமைத்தாங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற இந்த  இவ்விளையாட்டு விழாவில், 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் குழுக்கள் பங்கு பற்றின. இவ்விளையாட்டு விழா இறுதி நிகழ்வில், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர், ஊவா மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாவலப்பிட்டி நகர சபை முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விளையாட்டு விழாவில், தடகள மெய்வல்லுனர், கிரிக்கட், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், உதை பந்தாட்

கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல்

Image
கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு  வெள்ளிக்கிழமை மாலை இந்திய  தூதுவராலயத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் துணை உயர்ஸ்தானிகர் கல்முனை நூலக அபிவிருத்தி, சுமார் 250மில்லியன் பெருமைதியான திண்மக்கழிவு அகற்றல் முகமைத்துவ வேலைத்திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரினால் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணை உயர்ஸ்தானிகரால் இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவத்தின்ஊடாக ( KILA )  கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும்மான  ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மா

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்மாணவர்களை கல்வியில் விழிப்பூட்டும் வாகன பவனி

Image
யு.எம்.இஸ்ஹாக்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்  ஐந்தாம் தர புலமை பரிசு  சித்தியடைந்த மாணவர்கள்  கௌரவிப்பு விழாவும்  வாகன பவனி ஊர்வலமும் இன்று நடை பெற்றது. அதிபர் எம்.எல்.ஏ.கையூம்  தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  பிரதி அதிபர் வீ .எம்,.சம்சம் ,பகுதி தலைவர் வை.ஏ.கே.தாசீம்  உட்பட ஆசிரியர்களும்  கல்முனை மாநகர  சபை நற்பிட்டிமுனை உறுப்பினர்களான  ஏ.எச்.ஏ.நபார்,சி.எம்.முபீத்  உட்பட  பெற்றோர்கள் நலன் விரும்பிகள்  என் பலர் கலந்து கொண்டனர். பாடசாலையில் இருந்து மேளதாளங்களுடன்  ஆரம்பமான  வாகன பவனி  சித்தியடைந்த மாணவர்களை  அலங்கரித்த வண்ணம்  கிராமத்தின் ஒவ்வொரு வீதியாக வலம் வந்தது. இந்த  ஊர்வலம்  கௌரவிப்பு என்பதை விட மற்ற மாணவர்களை  கல்வியில்  விழிப்பூட்டும் அமைப்பாகவே  இந்த நிகழ்வு இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Image
நிந்தவூர் பிரதேச சபை இன்று காலை 10.15 மணியளவில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்தார். இதன் போது வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.  உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி கருத்துத் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு நான் ஆதரவுமில்லை. எதிர்ப்புமில்லை. எனத் தெரிவித்தார். தான் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து வரவு-செலவு திட்டம் ஏனைய உறுப்பினர்களின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.  இன்றைய சபை அமர்வுக்கு உதவித் தவிசாளர் எம்.எம்.அன்ஸார் சமூகமளிக்கவில்லை.

இந்திய உதவி தூதுவர் திரு. குமரன்அவர்களைகல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் சந்திக்க ஏற்பாடு

Image
கல்முனை மாநகர சபை முதல்வர் எம்.நிசாம் காரியப்பர்   தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ,  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் ,  ஏ.ஏ.பஷீர் ,  ஏ.எல்.எம். முஸ்தபா , எம்.எல்.சாலிதீன் ,  ஏ.எம்.ரியாஸ் ,  ஏ. அமிர்தலிங்கம் மற்றும் ஆணையாளர் ஜே ,  லியாக்கத் அலி ஆகியோர் கள்  இந்திய உதவி  தூதுவர்  திரு. குமரன் அவர்களை இந்திய தூதுவர் காரியாலயத்தில் நாளை  29.11.2013 வெள்ளிக்கிழமை மாலை  4.30  மணிக்கு  மாநகர சபை அபிவிருத்தி விடயமாகவும் கல்முனை மாநகர சபையையும் சென்னை மாநகராட்சி சபையையும் இணைத்து நிருவாக கட்டமைப்பு விடயமாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாலருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.  

2014ஓய்வூதியம் பெறும் திகதிகள் அறிவிப்பு

Image
2014ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு ஓய்வூதிய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி – 10, பெப்ரவரி – 10, மார்ச் - 10, ஏப்ரல் - 08, மே – 09, ஜுன் - 10, ஜுலை – 10, ஓகஸ்ட் - 08, செப்டெம்பர் -10, ஒக்டோபர் - 07, நவம்பர் 10, மற்றும் டிசெம்பர் - 10 ஆகிய தினங்களில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. 

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

Image
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் - காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பிரதான வீதி நாவட்குடாவில் வைத்து மாடுகள் வீதியைக் குறுக்கறுத்ததன் காரணமாக விபத்துக்குள்ளானார். காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர சிகிட்சை பெற்ற அவர் மேலதிக சிகிட்சைக்காக தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோள்பட்டையில் இரண்டு இடங்களில் எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கும் அதேவேளை முகம் உள்ளிட்ட உடம்பின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் முன்பகுதி பற்களும் உடைந்து சேதமடைந்துள்ளது. சகோதரர் நூர்தீன் விபத்துக்குள்ளான செய்து கேட்டு ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்ததை காணமுடிந்தது அவர் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எமது இணையச் சமூகம் பிரார்த்திக்கின்றது.

கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபருக்கு கௌரவிப்பு

Image
நற்பிட்டிமுனை லாபீர்  வித்தியாலயத்தின் அதிபராகவிருந்து  கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்விப்  பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபருக்கு லாபீர்  வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  புதன் கிழமை (27) பாடசாலையில்  கௌரவிப்பு விழா நடை பெற்றது .அதிபர்  உட்பட ஆசிரியர்கள்  கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு  மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி ,வாழ்த்து மடல் ,நினைவு சின்னம்  வழங்கி     கௌரவித்தனர் .     

கல்முனை வலயத்தில் ஆசிரியர் மத்திய நிலையம் திறந்து வைப்பு

Image
  கல்முனை வலயத்தில் மிக  நீண்ட நாளாக ஆசிரியர் மத்திய நிலையமொன்றுக்கான நிரந்தரக் கட்டிடம் இல்லாதிருந்துள்ளது. அந்தக் குறைபாடு இன்றுடன் முடிவுக்கு வரும் வகையில் இன்று சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் மத்திய நிலைய இன்று திறந்து வைக்கப்பட்டது.  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம்  விசேட அதிதியாகவும்  இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். கல்முனை வலய பணிமனையின் பிரதி கல்விப்பணிப்பாளர்கள், கணக்காளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலைய உத்தியோஸ்தர்கள் மற்றும் பலர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

உலகின் நிறை கூடிய பெண்ணின் எடை 400 ஆக குறைப்பு!

Image
தனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது  1000  இறாத்தல் நிறையை  5  வருடங்களில்  600  இறாத்தலால் குறைத்துள்ளார். அமெரி்க்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் ( 32 வயது) என்ற மேற்படி பெண் தனது  2  வயது பெறா மகனை எலிஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார். 1000  இறாத்தல் நிறையைக் கொண்ட மேரா தவறுதலாக பாலகன் மீது உருண்டு விழுந்துள்ளார். இந்நிலையில் பாலகன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். ஆரம்பத்தில் மேரா திட்டமிட்டு படுகொலை செய்ததாக கருதப்பட்டது. எனினும் , 2008 ஆம் ஆண்டு மேரா படுகொலை செய்யவில்லை ,  சிறுவனின் மரணத்துக்கு அவரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும் , அதனால் மேரா குற்றவாளியல்ல எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் ,  தனது பெறா மகனின் மரணத்துக்கு காரணமான தனது நிறையை குறைக்க தீவிரமாகப் போராடிய மேரா ,  தனது நிறையை  600  இறாத்தலால் குறைத்துள்ளார். தற்போது அவரது நிறை  400 இறாத்தலாகும்.   அளவோடு இருந்தால் நலமோடு வாழலாம் அல்லவா ?  உடல் பருமமும் தான்

முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான சட்டமுதுமாணி  மாண்புமிகு ரஊப் ஹக்கீம் ,கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், பிரதேச சபை தவிசாளர்களும், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிந்தவூரில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை

Image
நிந்தவூரில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களில் பிணையில் விடுதலை செய்யப்படாமல் இருந்த 14 பேரும்  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.கருணாகரனினால் விடுவிக்கப்பட்டார்கள். கடந்த 17ஆம் திகதி இரவு முதல் நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நிந்தவூர் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 19.11.2013 அன்று பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களை சம்மாந்துறைப் பொலிஸார் 20.11.2013 அன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 18வயதிற்கு குறைந்த 06பேரையும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரையும் நீதிபதி தலா 50ஆயிரம் சரிரப் பிணையில் விடுவித்தார். ஏனைய 14 பேரையும் 22.11.2013 ( வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ரீ.கருணாகரன் உத்தரவிட்டார். இன்று கோர்ட்டில் பொலிஸாரினால் ஆஜர்படுத்திய 14 பேரையும், தலா ரூபா 50ஆயிரம் சரீரப் பிணையில் செல்லுவதற்கு நீதிபதி ரீ.கருணாகரன் உத்தரவிட்டார். மேற்படி 14 பேரும், இனிமேல் இது போன்ற

சம்மாந்துறை பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றுவேன்

Image
  சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.ஜலீல் இன்று வெள்ளிக் கிழமை (22) மாலை 4.05 மணிக்கு தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.ஏ.ஜலீல் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் உரையாற்றுகையில், நான் எந்தவொரு எதிர்பார்புக்களும் அற்றவனாக இந்தப் பிரதேச மாணவர்களின் கல்விக்கு பணியாற்றும் நோக்குடன் இற்றைக்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்கு ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என்மீது ஒரு பாரிய பணி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பணியினை நான் ஒரு அமானிதமாக பொறுப்பேற்றுக் கொள்வதுடன் இந்தப் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உயர்ச்சிக்கும் என்னால் இயன்ற வரையில் பணியாற்றவுள்ளேன். நான் இந்தப் பிரதேசத்தையும்

2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை

Image
2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாளை  வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டிற்கான செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை இடம்பெறவுள்ளது. குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 2 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு அன்று மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதால் பாராளுமன்றத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நிந்தவூரில் 21 பேர் கைது; வாகனங்கள் பல பொலிஸார் வசம்!

Image
நிந்தவூரில் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அரச சொத்துகளுக்கு சேதமேற்படுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது 22 சைக்கிள்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் ஹர்த்தால் உக்கிரம்; பொலிஸார்- பொது மக்கள் மோதல்; கண்ணீர்ப்புகையும் அடிப்பு!

Image
24 மணி நேரத்துக்கும் மேலாக நிந்தவூர், அம்பாறை – கல்முனை வீதியில் போடப்பட்டுள்ள வீதித் தடையை அகற்றுவதற்கு கலகமடக்கும் பொலிஸார் சற்றுமுன்னர் முயற்சித்ததை அடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் நடத்தி அவர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். இதனால், பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்ட பொதுமக்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து நேற்றைய தினம் நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இதேவேளை போக்குவரத்துப் பாதைகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்கு