நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்மாணவர்களை கல்வியில் விழிப்பூட்டும் வாகன பவனி

யு.எம்.இஸ்ஹாக் 
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்  ஐந்தாம் தர புலமை பரிசு  சித்தியடைந்த மாணவர்கள்  கௌரவிப்பு விழாவும்  வாகன பவனி ஊர்வலமும் இன்று நடை பெற்றது.

அதிபர் எம்.எல்.ஏ.கையூம்  தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  பிரதி அதிபர் வீ .எம்,.சம்சம் ,பகுதி தலைவர் வை.ஏ.கே.தாசீம்  உட்பட ஆசிரியர்களும்  கல்முனை மாநகர  சபை நற்பிட்டிமுனை உறுப்பினர்களான  ஏ.எச்.ஏ.நபார்,சி.எம்.முபீத்  உட்பட  பெற்றோர்கள் நலன் விரும்பிகள்  என் பலர் கலந்து கொண்டனர்.










பாடசாலையில் இருந்து மேளதாளங்களுடன்  ஆரம்பமான  வாகன பவனி  சித்தியடைந்த மாணவர்களை  அலங்கரித்த வண்ணம்  கிராமத்தின் ஒவ்வொரு வீதியாக வலம் வந்தது. இந்த  ஊர்வலம்  கௌரவிப்பு என்பதை விட மற்ற மாணவர்களை  கல்வியில்  விழிப்பூட்டும் அமைப்பாகவே  இந்த நிகழ்வு இடம் பெற்றது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்