Posts

Showing posts from March, 2019

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான தேர் திரு விழா இன்று

Image
கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர்  தேவஸ்தான வருடாந்த தேர் திரு விழா இன்று வியாழக்கிழமை (21)  பக்த அடியவர்கள் புடைசூழ விமர்சையாக இடம் பெற்றது. . சிவனடியார்களால் வியந்து பாடப்பெற்றதும் சித்தர்களால் சிவா பூமி என போற்றப்பட்டதும்  ரிஷிகளின் பாதம் பட்ட புண்ணிய பூமியாம்  கிழக்கின் கல்முனை  மாநகரில் அடியவர்கள் இன்னல்கள் களைந்து  அருள் மழை பொழிய கோயில் கொண்டு எழுந்தருளி நவரத்தின கசிந்த சொர்ண சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்  கௌரி அம்பிகை  உடனுறை  சந்தான ஈஸ்வரப்பெருமான் தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு விநாயகர் வெளிப்பாட்டோடு ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு சந்தான ஈஸ்வரப்பெருமான் தேரில் ஆரோக்கரித்து வீதி உலா இடம் பெற்றது. கடந்த திங்கட் கிழமை (11) கொடியேற்றத்துடன் ஆரம்பமான கிரியைகளை தொடர்ந்து மூன்று நாட்கள் திரு விழாக்கள் நடை பெற்று  ஐந்தாம் நாள் சடங்கான மாம்பழத்திருவிழா  திரு விளக்கு பூஜை  பக்தி முக்தி திரு விழாக்கள் நடை பெற்று   திங்கட் கிழமை (18)  வேட்டைத்திரு விழாவும்  நடை பெற்றது.  செவ்வாய்க்கிழமை (19) திருக்கல்யா

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடமையை பொறுப்பேற்றார்

Image
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை வெள்ளிக்கிழமை நாரஹேன்பிட்டிலுள்ள அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில்  முன்னாள் கல்முனை மாநகர  முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கடமையை பொறுப்பேற்றார்.இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்  அமீர் அலி, பிரதி அமைச்சர்  மஃறூப் ,பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்  இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

Image
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் மாகாணத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குற்பட்ட 66பேருக்கே இந் நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை தாஹிர் ஜெஸான் !! கல்முனையில் முதல் பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.

Image
அல்-கரீம் பவுண்டேஸன் “சாதனை மங்கை “ பட்டம்  வழங்கி கெளரவிப்பு  நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெஸான் 2017 இல் நடை பெற்ற இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவாகி  அகில இலங்கை ரீதியில் 55வது இடத்தைப் பெற்று நிருவாக சேவை அதிகாரியானார். இவர் நாளை  2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.  1990.01.26ஆம் திகதி நற்பிட்டிமுனை கிராமத்தில்  பிறந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழத்தில் வணிகத்துறை பீடத்தில் கற்று பட்டணமும் நாடும் பல்வகைத் திட்டமிடல் பட்டதாரியாகி நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றினார்  அதன் பின்னர் அப்  பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தைப் பெற்று கல்முனை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை நிருவாக சேவை அ