Posts

Showing posts with the label கொள்ளை

மட்டக்களப்பில் இன்று அதிகாலை வழிப்பறி கொள்ளை - பொலிஸார் தீவிர விசாரணை

Image
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (08) அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்று அதிகாலையில் வீதியினால் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், தொழிலுக்கு சென்றவர்கள் என பலரிடம் இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவரின் வீட்டில் கொள்ளை

Image
பட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து லட்சம் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் இன்று (11) பட்டப்பகலில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரி காலை 8.30 மணியளவில் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்புவது வழமை. வழமை போன்று நேற்றுக் காலையும் வீட்டை பூட்டி விட்டுச் சென்று மாலை வீட்டிற்கு வரும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.  வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 43 அங்குல ரீ.வி இரண்டும், ஸ்மாட் தொலைபேசிகள் இரண்டும், 5 ஆயிரம் ரூபா காசும் திருடப்பட்டுள்ளது.  இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் அந்த அதிகாரி முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.  அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

கல்முனையில் பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி அறுத்த கொள்ளையர் கைது!! நகையும் மீட்பு !!!

Image
நேற்று   (14) கல்முனை  பொலிஸ்  பிரிவில் இடம் பெற்ற கொள்ளை சம்பவமான பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்களில்  வந்து அபகரித்து சென்றவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளார் .  கைது செய்யப் பட்டவர் பயன் படுத்திய மோட்டார் சைகளும்  தங்க சங்கிலியும்  கைப்பற்றப் பட்டுள்ளது.  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் வழி   காட்டலில் பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பீ.நிமால் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப் பட்ட மோட்டார் சைகளையும் ,தங்க சங்கிலியையும்  பொலிஸ் குழுவையும் காணலாம் 

வங்கிக்கொள்ளை முறியடிப்பு: இருவர் பலி

Image
கெக்கிராவ தனியார் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு சென்றவருக்கும் கொள்ளைச்சம்பவத்தை தடுப்பதற்கு முயன்ற வங்கி பாதுகாப்பு ஊழியருக்கும் இடம்பெற்ற மோதலில் இருவர்உயிரிழந்துள்ளனர். கொள்ளையர், தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்கவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் கொள்ளையர் பலியாகியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு ஊழியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

களவாடிய கள்வன் கடித்தும் அவனை மடக்கிப் பிடித்து கட்டிவைத்த தைரியப் பெண்

Image
களவாட வந்த கள்வன் ஒருவனை  வீட்டுக்குள் வைத்து  பிடித்து அவனுடன் சண்டை செய்து அவனிடமிருந்து கடியும் வாங்கி  அவனை  கட்டிவைத்து  பொலிசாரிடம் ஒரு பெண் ஒப்படைத்துள்ளார் . இந்த சம்பவம் இன்று புதன் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு  கல்முனைக் குடி கடற்கரைப் பள்ளி  வீதியில்  வீடொன்றில் இடம் பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பாக வீட்டுரிமயாளரான  குறித்த பெண் விபரிக்கயில்  நான் தூங்கிக் கொண்டிருக்கும் சமயம்  ஒரு சத்தம்  கேட்டது  அப்போது கண்விழித்தேன்  என் முன்னால்  ஒருவர் நடமாடுவது தெரிந்தது . அவர்  அங்கும் இங்கும்  நடமாடி  ஏதோ தேடிக் கொண்டிருந்தார் . நான்  நினைத்தேன்  தனது பிள்ளைகள் நித்திரையில் இருந்து எழும்பி ஏதும் தேடுகின்றார்கள்  என்று. பின்னர் எனக்கு  இவர் கள்வர்தான் என்பதை  உணர முடிந்தது . எனக்கு சத்தம் போடவும் பயமாக இருந்தது . ஏதாவது  நடந்து விடும் என்ற பயத்தினால் நடுங்கிய வண்ணம்  பார்த்துக் கொண்டே தூங்குவது போன்று பாசாங்கு செய்தேன் .  இவர் தேடுவதைப் பார்த்தல் இவருக்கு  பணம்தான் தேவையாக இருந்திருக்கும்  என்று  மனதுக்குள் நினைத்தேன் . அந்த நேரம் மேசையின் மேலே  இருந்த 300 ரூபா பணத்தை எடுத்துக்

கல்முனைப் பிரதேசத்தில் பால்மா கொள்ளை! பால்மா பெட்டிகள் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 05 பேரும் கைது!!

Image
நீண்ட காலமாக   கல்முனைப் பிரதேசத்தில்  பால்மா வகைகளை  கொள்ளையிட்டு விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று கல்முனை பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர் . அம்பாறை  மாவட்ட  பால்மா  விநியோகஸ்தரான  கல்முனைக்குடியை சேர்ந்த  ஆமிட் லெப்பை  முகம்மட்  பளீல் என்பவரது  நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த  பால்மா பெட்டிகள்  நிரப்பப் பட்டிருந்த லொறி உடைக்கப் பட்டு  கடந்த  செவ்வாய்க் கிழமை (14) ஒரு இலட்சம்  ரூபாவுக்கும்  அதிகமான  பால் மாப் பெட்டிகள்  களவாடப் பட்ட நிலையில்  இது தொடர்பாக  கல்முனை போலீசில் முறைப்பாடு  செய்யப் பட்டதன் பிரகாரம்  களவாடப் பட்ட பெருந்தொகை  பால்மா பெட்டிகள்  கைப்பற்றப் பட்டுள்ளதுடன்  சந்தேகத்தின் பேரில்  கல்முனைகுடியை சேர்ந்த 05 பேரும்  கைது செய்யப் பட்டுள்ளனர் .  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழி  காட்டலின் கீழ்  பொலிஸ்  நிலையப் பெருங்குற்றதடுப்பு  பொறுப்பதிகாரி  இந்துநில் உட்பட பொலிஸ்  சாஜன்  ஏ.முஸ்தபா  ஆகியோரால்  குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டதன்  அடிப்படையில்  குறித்த விடயம் அம்பலத்துக்கு வந்ததை அடுத்து கைது

கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட நடுகட்டு உத்தியோகத்தர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட நடுகட்டு உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபையில்  மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நடுக்கட்டு  உத்தியோகத்தர்களின் (வரி அறவீடடாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் சோலை வரிகளை செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொது மக்களைக் கேட்டுள்ளார். கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலை வரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு 25 பேர் தற்காலிக அடிப்படையில் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அவர்களுடைய சேவை 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளுக்கு வந்து சோலைவரிக் கட்டணங்களை யாராவது கோரினால், அவர்களிடம் அதனைச் செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். அதேவேளை சோலை வரி செலுத்த வேண்டிய பொது மக்கள், கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக வருகை தந்து- உரிய அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி- பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்

திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் கைது

Image
  (யு.எம்.இஸ்ஹாக்) ஒருமாதத்துக்கு முன்னர் சாய்ந்தமருதில் திருட்டுத்தனமாக களவாடி செல்லப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று போலி இலக்கத்தகட்டுடன் கல்முனை பொலிசாரினால் இங்கினியாகல  சியம்பலாந்துவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டு இன்று 06.01.2014 கல்முனை நீதிவான் நீதிமன்றில் வாகனமும் அதனை ஓட்டிவந்த சாரதியும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கல்முனை பொலிசார் தகவல் தருகையில் கடந்த 2013.12.16 ஆந்  திகதி கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த   EP-LH-8525 இலக்க  டிப்பர் ரக கனரக வாகனம் களவு போயுள்ளதாக அதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயில் அப்துல் ரஹீம் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்தார் .   குறித்த களவு சம்பந்தமாக கல்முனை பொலிஸ்  தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தலைமையில் பெருங்குற்ற தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் நடாத்திய விசாரணையின் பலனாக குறித்த வாகனம் LH-8034 போலி இலக்கத்துடன் நேற்று 05.01.2014  வாகனமும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டு இன்று  நீதிமன்றி ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் . போலி இக்கத

கல்முனையில் கடல் கொள்ளை

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மீனவர்களின் வலை,மற்றும் மீன்கள்  நடுக்கடலில்  களவெடுக்கப் படுவதாக கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . கடற்படையினரின் உதவியுடன்  இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக  மீனவர்களுக்கு கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் . இச்சம்பவம்  தொடர்பாக தெரிய வருவதாவது  கல்முனை ,சாய்ந்தமருது பிரதேசத்தை  சேர்ந்த  ஆழ் கடல் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன் பிடிக்க வலையை கடலில் போட்டுவிட்டு  கண்விழித்துக் காத்திருக்கும்  சமயத்தில்   தங்கள் வலையில் பிடிபட்டு கிடக்கின்ற  மீன்களை களவில் எடுத்து செல்வதாகவும்  சில வேளை  வலையை வெட்டி செல்வதாகவும்  மீனவர்கள் தெரிவிக்கின்றனர் . மட்டக்களப்பு  மாவட்டத்தின்  களுவாஞ்சிகுடி  பிரதேசத்தை சேர்ந்தவர்களும் ,அம்பாறை மாவட்டத்தின்  காரைதீவை சேர்ந்தவர்களுமே தங்கள் மீனையும் ,வலையையும் களவெடுப்பதாக  பொலிசில் மீனவர் சங்கங்களினால்  முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது.  இந்த விடயம் தொடர்பாக  பொலீசாருக்கும் ,மீன்பிடி திணைக்களத்துக்கும்  அறிவித்தும்  நடவடிக்கை எடுக்கப் படாமையால்  இதன

சாய்ந்தமருது கொள்ளை பொருட்களும் மீட்பு கொள்ளையரும் கைது

Image
கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இயங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கொள்ளை இடப்பட்ட கணணி இயந்திரங்கள் வீடொன்றில் இருந்து கல்முனை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது . சாய்ந்தமருது -16 அஹமட் வீதியில்  இயங்கி வந்த முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி  செயல் முன்னணி  அரச சார்பற்ற நிறுவனத்தில்  கடந்த 2012.12.11 ஆந்திகதி  இரவு  அலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணணிகள்  உட்பட  உபகரணங்கள் பல  கொள்ளையிடப்பட்ட நிலையில் நிறுவனத்தினரால் கல்முனைபொ லீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . கொள்ளை இடப்பட்ட பொருட்களின் பெறுமதி இரண்டு இலட்சத்தி ஐம்பத்தாறாயிரம் ரூபா என் போலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேற்று புலன் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்பொ ருட்களை மறைத்து வைத்திருந்த சாய்ந்தமருதை சேர்ந்த  அப்துமஜீத் அப்துல் நஸ்பீன்  கல்முனை பொலிசாரினால் இன்று கைது செய்து விசாரிக்கப் பட்ட போது  கொள்ளையிடப்பட்ட பொருட்களுக்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன .  இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்த க

ஜா-எலயில் 70 இலட்சம் கொள்ளை!

Image
தனியார் தொழிற்சாலை ஒன்றில் சம்பளம் கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 இலட்சம் ரூபா பணம் ஜா-எல- ஏக்கல பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதhக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜா எல பகுதியூடாக பணம் எடுத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பிற்பகல் 1 மணியளவில் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் அதனைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டப் பகலில் நேற்று கல்முனையில் கொள்ளை

Image
கல்முனை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டப் பகலில் நேற்று கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. வெள்ளிகிழமை காலை பத்து மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியாரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 71000 ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கல்முனை விதாதா வளப் பயிற்சி நிலையத்தில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

Image
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்கான விதாதா வள மத்திய பயிற்சி நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த வள நிலையத்தில் இளைஞர்,யுவுதிகளுக்கான கணினிப் பயிற்சி,தையல் பயிற்சி,அலங்கார வேலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன. அண்மையில் கணினிப் பயிற்சியை முடித்த 40 இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த வள நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவுவேளை உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினிகள் மற்றும் கணினிகளுக்கு பயன்படுத்தும் உதிரிப்பாகங்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வள நிலையத்துக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டார் நித்திரை; கள்ளன் கபடமின்றி கொள்ளை

Image
கல்முனை நீலாவனை சுனாமி மாடி வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீட்டொன்றில் ரூபா 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். .சதாத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வீட்டு நபர்கள் உறங்கிய பின்னர் ஜன்னலை உடைத்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.