ஜா-எலயில் 70 இலட்சம் கொள்ளை!

தனியார் தொழிற்சாலை ஒன்றில் சம்பளம் கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 இலட்சம் ரூபா பணம் ஜா-எல- ஏக்கல பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதhக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜா எல பகுதியூடாக பணம் எடுத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பிற்பகல் 1 மணியளவில் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் அதனைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது