Posts

Showing posts with the label சட்டம்

20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு

Image
கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 20ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட வேண்டும் . எனினும்  அக்கரைப்பற்று  பொலிஸ்  பிரிவில்  ஊரடங்கு உத்தரவு  நீக்கப்படமாட்டாது

கொவிட்–19 அபாயம் நீங்கும்வரை தேர்தல் அறவிப்பை விடுக்கவேண்டாம்

Image
இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களுக்கு நேற்று (16) அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; 21.03.2020 திகதியிடப்பட்ட 2167/12 இலக்க விசேட வர்த்தமானியில், கொவிட்–19 தொற்று காரணமாக 2020 ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என தெரிவித்துள்ளீர்கள். பாராளுமன்ற சட்டத்தின் 24(3) என்று உறுப்புரைக்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த தீர்ம

றியாஜ் , இஜாஸ் ஆகியோரின் கைதுகள் சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டியது !

Image
அரசியல் பழி தீர்க்க வேண்டாம் !! - முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் − சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் திடீர் கைதுகளை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டிய விடயமாகும். இதனை வைத்து யாரும் அரசியல் பழி தீர்க்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் சிறந்த சட்டத்தரணியாகும். இவரின் கைதினை சமூகம் கவலையுடன் பார்க்கின்றது. மேலும் றியாஜ் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்லாகவும் இருக்கலாம். இக்கைது நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்யும் தருணமில்லை என்பதை புரிந்து சகலரும் சமூக கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அரசின் தீர்மானத்தி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, CID யினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர், காலிங்க இந்ததிஸ்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில் தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், அவர் ஒரு சட்டத்தரணி எனும் வகையில் கலந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கைது இடம்பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம். தற்போது சட்ட ரீதியாகவும், இயல்பாகவும் இடம்பெறும் நிலுவையிலுள்ள விசாரணைகள் தொடர்பில் தலையிடும் நோக்கம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இல்லை. ஆயினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவரின் தொழில்சார் உரிமை தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அவரது கைதுக்கான காரணம் மற்றும் அதற்கான அட

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

Image
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அமல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

Image
வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது. சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

14ஆம் திகதி நீக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டம் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிப்பு

Image
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாவட்டங்களில்  ஊரடங்குச் சட்டம் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம்

Image
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் என்று தெரிவித்துள்ள அவர், தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு மதிப்பளிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேNளை, அனர்த்த மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Image
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து விசே

அரிசிக்கான விலை நிர்ணயம் விலை கூட்டி விற்கமுடியாது

Image
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிப்பு

Image
நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

அனைத்து அரிசி ஆலைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

Image
அத்தியாவசிய உணவு வழங்கல் , நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அத்தியாவசியமான அனைத்து அரிசி ஆலைகளையும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து நெல் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேசத்தில் அரிசி உற்பத்தி தன்னிடமுள்ள நெல் தொகையினை அரிசியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாவட்டங்களில் இருந்து வெளியேறும் நபர்களுக்கான அறிவித்தல்

Image
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாவட்ட எல்லையை கடக்கும் நபர்கள் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பாடுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Image
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

Image
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

Image
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு ,  கம்பஹா ,  களுத்துறை ,  புத்தளம் ,  கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்  இன்று காலை  6.00  மணிக்கு தளர்த்தப்பட் ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல்  02.00  மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்ப ட்டது . இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்ப ட்ட  ஊரடங்கு சட்டம்  ஏப்ரல் 09 வியாழன்  காலை  6.00  மணிக்கு தளர்த்தப்பட் டு அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும். இன்று  ஏப்ரல்  06  ஆம் திகதி திங்கள் முதல்  10  ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர

ஏப்ரல் 9ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு ஊரடங்கு

Image
இன்று  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி  காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு  மாலை 4.00  ஊரடங்கு சட்டம்  தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

Image
நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்;. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக் காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்

Image
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நற்பிட்டிமுனை விவசாயிகளின் விடயத்தில் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் அசமந்தப்போக்கு

Image
நற்பிட்டிமுனை கிராம விவசாயிகளுக்கு தங்களின் வயல் வேலைகளுக்கு செல்ல தடை போடப் படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் நற்பிட்டிமுனை விவசாயிகளுக்கு  அது சாத்தியமற்று போகின்றது நற்பிட்டிமுனை கிராமமும் விவசாயிகளும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் காணப்படுகின்றது அவர்களது நெற்செய்கை காணி சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குள் அமையப் பெற்றுள்ளது. சவளக்கடை பொலிஸாரின் அனுமதியை பெற வேண்டுமெனில் அங்குள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் கல்முனை பிரிவுக்குட்பட்டவருக்கு  நாவிதன் வெளி கிராம சேவகர் அனுமதி வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாட்ட நிலையில் உள்ளனர் இந்த நிலை நீடித்தால் விதைப்பு காலம் நீடிக்கலாமெனவும் சில வேளை நெற்செய்கை கைவிடப்படும் நிலை உருவாகும் எனவும் விவயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கல்முனையையும் நாவிதன்வெளியையும் பிரிக்கும் கிடங்கி பாலத்துக்கப்பால் செய்வதற்கு பாதுகாப்பு படையினரின் அனுமதி பெறவேண்டியுள்ளது . இந்த அனுமதியை சவளக்கடை  கமநலகேந்