Posts

Showing posts from March, 2017

மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு

Image
மார்ச் 12 இயக்கம் நாடளாவிய ரீதியில் நடாத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் வாக்காளர் சந்திப்பு கல்முனை பஸ் நிலையம் முன்பாக நாளைமாரு தினம் (25)இடம் பெறவுள்ளது இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு செயற்படும் மார்ச் 12 இயக்கம் எதிர்வரும் உள்@ரதிகார சபைத்தேர்தலில் “புதிய உள்@ரதிகார சபைத்தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்.”என்ற தொனிப்பொருளில் நாட்டிலுள்ள சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வண்ணம் நாடளாவிய விழிப்புணர்வு  வேலைத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மார்ச் 13 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகும் மக்களை  விழிப்புணர்வு  செய்யும்  வேலைத் திட்டம் ஊடாக ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்கள் விழிப்புணர்வு  செய்யப் படுவதோடு அந்தந்த  மாவட்டத்திலுள்ள அரசியல் அதிகார பீடத்தினுடனும் உரையாடல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டதிலுமுள்ள சமயத் தலைவர்கள் உட்பட அரச பணியாளர்கள் , தொழிற்சங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அத்துடன் பி

இராஜ கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு

Image
கல்முனை மாநகர் ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர்  ஆலய புனராவர்த்தன இராஜ  கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு  நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை (17) இடம் பெறும் . பஞ்சமி திதியும் விஷாக நட்சதிரமும்  இடப லக்கினமும் கூடிய  நேரம் காலை 9.19 முதல் 10.49மணி  வரையான  சுப முகூர்த்தத்தில்  ஆலய இராஜ கோபுரம் திறந்து வைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடை பெறும் . வியாழக்  கிழமை மாலை நாளை (16) விநாயகர் வழிபாடு, புண்ணியவாசனம் சாந்திக்கு கிரியைகள் என்பன நடை பெற்று  இன்று வெள்ளிக்கு கிழமை காலை 7.30 மணிக்கு விநாயகர் வழிபாடு  புண்ணியவாசனம் , யாக மண்டப பூசை ,விசேட தீபாராதனை ,வேத தோத்திர,நாத கீத  மங்களங்கள் முழங்க  குறித்த நேரத்தில் இராஜ கோபுர  கும்பாபிஷேகம்  நடைபெற்று  பிரசாதம் வழங்கப் படும் . புனராவர்த்தன  இராஜ கோபுர  கும்பாபிஷேக கிரியைகள்  ஈசான சிவாச்சாரியார்  சிவா ஸ்ரீ மோஹானந்தக்  குருக்கள் தலைமையில் நடை பெறும் 

கல்முனை அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா

Image
அம்பாறை மாவட்டத்தில் மிகப் பழமைவாய்ந்த இந்து ஆலயங்களில் ஒன்றான  கல்முனை அருள்மிகு  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர்  ஆலய  வருடாந்த  மகோற்சவ திருவிழாவின் 10ஆம் நாள் சடங்கான சப்பற திருவிழா  வெள்ளிக் கிழமை பெருந் திரளான பக்த அடியார்கள் புடை சூழ மிக சிறப்பாக  நடை பெற்றது கடந்த மாதம் திங்கட் கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திரு விழா தொடராக பூஜை வழிபாடுகள்    இடம் பெற்று    சனிக் கிழமை  (11) தீர்த்தோற்சவதுடன்  நிறைவு  பெற்றன . உற்சவ காலத்தின் போது  பஞ்சமுக அர்ச்சனை தீபத் திருவிழா இபக்தி முக்தி பாவநோற்சவம்இ வேட்டைத்திருவிழாஇபுஸ்பாஞ்சலி திருவிழா இகற்பூர சட்டி திருவிழா  என்பன இடம் பெற்று  நேற்று வெள்ளிக் கிழமை மக்கள் புடை சூழ  சப்பறத்திருவிழா இடம் பெற்றது.  இதன் போது விநாயகப் பெருமான் எழுந்தருளி அரோகரா சத்தம் முழங்க யானை மீது அமர்ந்து ஊர்வலமாக கல்முனை மாநகர் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஆலயத்தின் பிரதம குரு  வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ கமலதேவதா~க் குருக்கள் தலைமையில்  உற்சவ கால கிரியைகள் மஹோற்சவ பிரதம குரு  சங்கானை வேதகாம கலா வித்தகர் பிரம்மஸ்ரீ நித்திய சிவாநந்தா குருக்

அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதியமைச்சர் நடவடிக்கை

Image
அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப் பட்டுள்ள வேலைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு   கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கி வைத்தார் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்