Posts

Showing posts from November, 2010

கல்முனை குழந்தை இயசு பாலர் பாட சாலை மாணவர்களின் விடுகை விழா

Image
கல்முனை குழந்தை இயசு பாலர் பாட சாலை  மாணவர்களின் விடுகை விழா  இன்று நடை பெற்றது. அதிபர் அருட்சகோதரி எம்.சுஜானி  தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அதிபர் ஆசிரியைகளால் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன்  பெற்றோர்கள் நினைவு சின்னங்களும் வழங்கி வைத்தனர்

சேனைக் குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு விழா

Image
கிழக்கு மாகாணத்தில் பல சமுக சேவை  அபிவிருத்தி பணிகளை செய்து  கொண்டிருக்கும் சேனைக் குடியிருப்பு  சேவோ நிறுவனத்தின்  10 ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கந்தையா சத்திய நாதன் தலைமையில் கல்முனை திரு இருதய நாதர்  மண்டபத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் ,கௌரவ அதிதியாக  சிரேஷ்ட தொழில் பயிற்சி  நிபுணர் ராமலிங்கம் சிவபிரகாசமும் கலந்து கொண்டனர். வைபவத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல்துறை சார்ந்த எட்டுப் பேர் சேவோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், நாவிதன் வெளி பிரதேச செயலாளர் கலாநிதி .எம்.கோபாலரத்தினம், திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரத்தினம் , ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லாவநாதன் , கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை அதிபர்  அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு ,சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடக வியலாளருமான வீ.ரீ.

துறைமுக அதிகார சபை ஊழியர் முச்சக்கர வண்டி விபத்தில் பலி

கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த துறைமுக அதிகார சபை ஊழியர்  முச்சக்கர வண்டி விபத்தில் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இவர் கல்முனைகுடியை  சேர்ந்த 36 வயதுடைய முகம்மது ஜாபீர் என்பவராவார். தனது குடும்பத்தவருடன்  கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு ஊரணி எனும் இடத்தில இன்று காலை 4.00 மணிக்கு மரத்துடன் முச்சக்கர வண்டி மோதுண்டு இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் மரணித்தவரின் மனைவி இரண்டு பிள்ளைகளும் படு காயம் அடைந்துள்ளனர்.மரணித்தவரின் ஜனாசா  இன்று இரவு கல்முனை கடற்கரை பள்ளி மைய வாடியில் அடக்கம் செய்யப் பட்டது.

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Image
அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று பிற்பகல் 3.30 அளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு வழமைபோல் மீன்பிடிப்பதற்காகச் சென்ற காரைதீவு நடராஜானந்தா வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய எஸ்.கனகரெத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சா; ஹக்கீம் - ஈரான் தூதுவா; சந்திப்பு!

Image
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மஹ்மூத் ரஹீமி கோர்ஜி - நீதியமைச்சரும்இ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். அமைச்சா; ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் ஈரான் பிரதித் தூதுவர் அலி அக்பர் பாபாவூம் கலந்து கொண்டார் .

எழுத்தாளர் சாராவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை :பொலிஸார் தகவல்

Image
    விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சாரா மாலினி பெரேராவுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பௌத்தராக இருந்து இஸ்லாம் மதத்தை தழுவிய எழுத்தாளர் சாரா மாலினி பெரோரா, ‘இருளிலிருந்து வெளிச்சத்திற்கு’ (From Darkness to Light ) என்ற நூலை எழுதியமைக்காகவும் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி இலங்கை வந்திருந்தபோது அரசுக்கு எதிராக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பஹ்ரெய்னில் வாழ்ந்து வந

வீட்டார் நித்திரை; கள்ளன் கபடமின்றி கொள்ளை

Image
கல்முனை நீலாவனை சுனாமி மாடி வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீட்டொன்றில் ரூபா 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். .சதாத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வீட்டு நபர்கள் உறங்கிய பின்னர் ஜன்னலை உடைத்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

திருகோணமலையில் மாணவர்களிடம் போலி நாணயத்தாள் கண்டு பிடிப்பு

Image
      திருகோணமலை மாவட்ட கின்னியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் 16 ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் 11 நூறு ரூபா நோட்டுக்களும் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபா நோட்டுக்களும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவர்கள் போலி நாணயத்தாள்களை மாற்ற முட்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இம் மாணவர்களுக்கு போலி நாணயத் தாள்களை வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைப் பொலிஸார் தேடிவருகின்றனர். ___

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை.

Image
கிழக்கு மாகாணத்திற்கான 2011ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது முதல்வர் சந்திரகாந்தன் ஆற்றிய உரை கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, மற்றும் மாகாணசபை அமைச்சுக்களின் செயலாளர்களே, ஊடகவியலாளர்களே. கௌரவம் மிக்க இம் மக்களவையில் கிழக்கு மாகாணத்தின் 2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கிழக்கு மாகாணமானது வன்முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படுகின்ற மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் இதுவாகும். கிழக்கு மாகாணமானது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டபின் இம்மாகாணத்தின் நிருவாகமானது எனது தலைமையிலான மாகாண அமைச்சரவையினால் பொறுப்பேற்கப்பட்டபோது இருந்த நெருக்கமான நிலைமையினை சற்றுத் திரும்பிப்பார்க்கிறேன். வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்த

புதிய அமைச்சரவை

Image
பிரதமர் : டி.எம். ஜயரத்ன. சிரேஷ்ட அமைச்சர்கள்: டி.எம். ஜயரத்ன - புத்தசாசன சமய விவகாரம் ரத்னசிறி விக்கிரமநாயக்க - சிறந்த நிருவாகம் மற்றும் அடிப்படை வசதிகள். டியூ குணசேகர - மனித வளங்கள் அதாவூத செனவிரத்ன - கிராம அலுவல்கள் பீ.தயாரத்ன - உணவூ மற்றும் போஷாக்கு ஏ.எச.எம்.பௌசி - நகர அலுவல்கள் எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்பரி பியசேன கமகே - தேசிய வளங்கள் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன - விஞ்ஙான அலுவல்கள் கலாநிதி சரத் அமுனுகம - சர்வதேச நிதி ஒத்துழைப்பு அமைச்சரவை அமைச்சர்கள்: நிமல் சிறிபால டி சில்வா --> நீர்ப்பாசனம் நீர் வளங்கள் முகாமைத்துவம் மைத்திரிபால சிறிசேன --> சுகாதாரம் சுசில் பிரேமஜயந்த --> பெற்றெளலியம் ஆறுமுகம் தொண்டமான் --> கால்நடை வளங்கள் கிராமிய சமூக அபிவிருத்தி தினேஷ் குணவர்தன --> நீர் வழங்கல் வடிகாலமைப்பு டக்ளஸ் தேவானந்தா --> பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி ஏ.எல்.எம்.அதாவூல்லா --> உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ரிசாட் பதியூதீன்

நாமல், ரங்கா ஆகியோருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்படாது

Image
: லலித் வீரதுங்க   நாமல் ராஜபக்ஷ, ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையடுத்து இன்று  10 மணியவில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளது. இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீரங்கா மற்றும் உபேஷ்கா, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்பு வழங்

ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?

Image
முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்? 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளார். இவ்வாணைக்குழு நாட்டின் பல பாகங்களுக்கும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாணைக் குழுவின் விசாரணைக்காக விதிக்கப்பட்டுள்ள கால எல்லையினை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியை வெளியிட்டதுடன் அதன் முன் சாட்சியமளிப்பதுமில்லை எனவும் அறிவித்தது விரிவாக பார்க்க இதேவேளை மற்றைய முஸ்லிம் கட்சிகள் இவ்வாணைக்குழு பற்றி எந்தவொரு சாதக பாதகக் கருத்துக்களையும் வெளியிடவில்லை. 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் என்ற கால எல்லை இலங்கையின் அரசியல் பிணக்குகளின் வரலாற்றில் மிகக் குறுகியதொன்றாகும். அதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிருப்தியானது நியாயமானதாகும். 19

கார்த்திகை தீபம்

Image
நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும், விழாக்களிலும் பெரும் பங்கு கொள்கிறது தீபம். முற்காலத்தில் ஒருநாளில் விளக்கிடு நாள் என்னும் பெயரால் எல்லாக் கோயில்களிலும் தீபம் ஏற்றும் திருநாள் கொண்டாடப்பட்டது. விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக திரு என்னும் சொல்லுடன் திருவிளக்கு என்று சிறப்பாகப் கூறப்படுகிறது.

புனருதாபனம் செயப்பட்ட நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலின் தோற்றம்

Image
நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி வாசல்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில்!

Image
அடுத்த மாதத்தின் முதலாம் வாரம் அளவில் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின்றன. பரீட்சைகள் திணைக்களம் இத்தகவலை வழங்கி உள்ளது. பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை இடம்பெற்று இருந்தது. 270,000 பரீட்சார்த்திகள் எழுதி இருந்தனர். இவர்களில் 54,000 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்.

நவம்பர் 18 ஆம் திகதி பிறந்தால் மஹிந்த பரிசு

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பிறந்த தினமான நவம்பர் 18 ஆம் திகதி பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது சன்மானமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வருடம் பிறந்த குழந்தைகளுக்கும் மிகிமெத் சுவதரு திலின பிரதானய என்ற நிகழ்சித் திட்டத்தின் இந்த பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது பரிசுத்தொகையாக 7,500 குறையாத தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய சீருடை

Image
முன்னாள்  அமைச்சர் மன்சூரின் புதல்வரும் கல்முனை தொகுதி  ஐ.தே.க அமைப்பாளருமான  ரகுமத் மன்சூர் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய  சீருடை வழங்கி வைத்தார். இன்று கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.எல்.ஏ.கையூமிடம்  அமைப்பாளர் சீருடை பொதிகளை  வழங்கி வைத்தார் . இவரது தந்தை  ஏ.ஆர்.மன்சூர்  இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு

Image
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்ப்பு  வைபவதினதன்று  (19)கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது .பொலிசார்,பொதுமக்கள் ,ஊடகவிய்லாளர்கள்  இரத்த தானம் வழங்குவதை காணலாம் ,அருகில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகள் நிற்பதை காணலாம். வயதான தாய் ஒருவர்  ஊடகவியலாளர்    பொலிஸ் பரிசோதகர் 

லண்டன் தீவிபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பைசுல் இஹ்ஸான் வபாத்

Image
லண்டனில் கடந்த 12 ஆம் திகதி  வீட்டு தொகுதி ஒன்றில்  இடம்பெற்ற தீவிபத்தில் சிக்குண்டு  சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞரொருவர் வபாதத்கியுள்ளார்  இவர் சாய்ந்தமருது ஜீ.எம்.வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஃபைசுல் இஹ்ஸான் என்று தெரியவருகின்றது. கடந்தவெள்ளிகிழமை  லண்டனில் மேற்படி இளைஞன் தங்கியிருந்த வீட்டு தொகுதி ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக 2ஆம் மாடியில் உறங்கிக் கொண்டிருக்கும் மேற்படி இளைஞர் மூச்சுத் திணரலுக்குள்ளாகி வபாதத்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, உயிரிழந்தவரின் சகோதரியும் குடும்பத்தாரும் குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் குடியிருந்த நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   i

சாய்ந்தமருதில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

Image
சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் சங்கமும் ,அல் இஸ்லாஹ் ஜும் ஆப் பள்ளி வாசலும் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை முற்றவெளியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் இ;ஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொணடிருப்பதனை படங்களில் காணலாம்.

புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை!

Image
  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) உலக இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகிறார்கள். ஹஜ்ஜூப் பெருநாளானது தியாகத் திருநாளாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஹஜ்ஜூப் பெருநாட்களில் ஏழைகள் முதல் அனைவருக்கும் உணவளிப்பது சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் காலையில் நீராடி புத்தாடைகள் அணிந்து நறுமணம் பூசி பள்ளிவாசலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கமாகும். Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image!

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் உழ்ஹியா மாடுகள் பலவந்தமாக எடுத்து செல்லப்பட்டது

Image
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா  வத்தளை ஹுனுபிடிய அக்பர்  டவுன் பிரதேசத்தில்  அமைத்திருக்கும் ஜும்மாஹ் மஸ்ஜித் ஒன்றினுள் நேற்று மாலை கிரிபத் கொட போலீஸ் OIC உடன்  அங்கு உழ்ஹியா கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட 30  மாடுகளை பலவந்தமாக லாரி ஒன்றினுள் ஏற்றி எடுத்து சென்றுள்ளார் இதை தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. இந்த விடயம் தொடர்பில் அந்த பிரதேச முஸ்லிம்கள் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான மற்றும் ஆசாத் சாலி போன்றோருடன் தொடர்பு கொண்டனர் இதை தொடர்ந்து விடையம் ஜனாதிபதிக்கு அறிவிக்கபட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பலவந்தமாக பிடித்து செல்லப்பட்ட மாடுகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்  என்று அறிய முடிகின்றது மேற்படி மாடுகள் அனைத்தும் நாட்டின் சட்ட முறைகளுக்கு அமைவாக   உழ்ஹியா கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டவை என்று அந்த பிரதேச முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்

சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை..!

Image
  நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 8 இலட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக நீதியமைச்சர் அதாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதால் மனுதாரர்களும் பிரதிவாதிகளும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். ஒத்திவைக்கப்படும் வழக்குகள் தொடர்பில் ஆராயவும் நீதிமன்றங்களில் விசேட நடவடிக்கையினை பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலுவை வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்காக மேலதிக நீதிமன்றங்களை இரு வருடங்களுக்கு முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் தியாகங்களை எம் மனதில் பதிக்கும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள்

Image
kalmunai news   இணையதள வாழ்த்துக்கள்

தேசத்துக்கு நிழல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

Image
 வாழ்த்துக்கள்   கல்முனை  பிர தேசத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்