லண்டன் தீவிபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பைசுல் இஹ்ஸான் வபாத்



லண்டனில் கடந்த 12 ஆம் திகதி  வீட்டு தொகுதி ஒன்றில்  இடம்பெற்ற தீவிபத்தில் சிக்குண்டு  சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞரொருவர் வபாதத்கியுள்ளார்  இவர் சாய்ந்தமருது ஜீ.எம்.வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஃபைசுல் இஹ்ஸான் என்று தெரியவருகின்றது.
கடந்தவெள்ளிகிழமை  லண்டனில் மேற்படி இளைஞன் தங்கியிருந்த வீட்டு தொகுதி ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக 2ஆம் மாடியில் உறங்கிக் கொண்டிருக்கும் மேற்படி இளைஞர் மூச்சுத் திணரலுக்குள்ளாகி வபாதத்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயிரிழந்தவரின் சகோதரியும் குடும்பத்தாரும் குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் குடியிருந்த நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




 
i

Comments