Posts

Showing posts from January, 2014

காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ள பாரிய மூங்கில் படகு

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் இன்று (31) வெள்ளிக்கிழமை காலை சுமார் 30 அடிக்கு மேல் நீளமான பாரிய மூங்கில் படகொன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இம்மூங்கில் படகை கரையில் எடுப்பதற்கான நடவடிக்கையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை மற்றும் மீனவர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாரிய மூங்கில் படகு விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கரையொதுங்கிய இப்படகில் மனிதர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் இப்படகு கடற்றொழில் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் இப்படகு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பாரப்படுத்தப்பட்டு பின்னர் காத்தான்குடி நகர சபை அதனை எங்களுக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில்"ஊர்வலம்"

Image
தரம் 01 இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை  அறிந்து கொள்வோம் எனும் செயற் பாடுகளில்  13வது செயற் பாடான "ஊர்வலம்" என்னும்  தலைப்பில்  மாணவர்களின்  ஆர்வத்துக்கு ஏற்ற  முறையிலும்  தனித்துவம் பேணக் கூடிய முறையிலும்  கலாச்சார  சமய விழுமியங்களுக்கு ஏற்பவும்  ஏற்பாடு  செய்யப்பட்ட நிகழ்வு  இன்று 31.01.2014 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்றது . வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் ஆசிரியை திருமதி எஸ்.ரவீன் வழி கட்டலுடன் நடை பெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலாச்சார  சமய விழுமியங்களுக்கு ஏற்ப உடையணிந்து  ஒவ்வொரு வகுப்பறைக்கும்  ஊர்வலமாக சென்று ஏனைய  மாணவர்களுக்கும் இந்த 13வது செயற் பாட்டை தெளிவு படுத்தினர்

கல்முனையில் மனித நேயமற்ற அரசியல் நடக்கிறது

Image
அப்து கபூர்  கல்முனை கரவாகு மேற்கு பழைய பொது நூலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவூக்கல்  புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பொது நூலகத்தில் பொறித்து வைக்கப்படாதது மனித நேயமற்றஇ அரசியல் நாகரிகமற்ற செயல்பாடாகும். இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கரவாகு மேற்கு உப அலுவலக முன்னாள் அதிகாரமளிக்கப்பட் அதிகாரியூமான  ஏ.அப்துல் கபூர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் கல்முனை மாநகர மேயர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் இது விடயமாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  கல்முனைத் தொகுதி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு காலத்தால் அழியாத சேவைகளைச் செய்த  மறக்க முடியாத அரசியல் வாதியாக  அன்றும் இன்றும்  இருப்பவர் முன்னாள் அமைச்சர் மன்சூர் ஆவார். அவர் தனது அரசியல் வாழ்வில்  கல்முனைத் தொகுதி தமிழ் முஸ்லிம் மக்களுக்காக செய்ய வேண்டும் என்று கண்ட கனவூகளில் ஒன்றுதான்  பொது மக்களின் அறிவூப் பசிக்கும்  மாணவர்களின் உயர் கல்விக்கும்  கல்முனை பிரதேசங்கள் தோறும்  பொது நூலகங்களை அமைக்க வேண்ட

மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் விழிப்பூட்டல் நிகழ்வூம்

Image
  “மதுவற்ற கிராம வாழ்க்கை” எனும் கருப் பொருளைக் கொண்டதான மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் விழிப்பூட்டல் நிகழ்வூம் இன்று 25.01.2014 நற்பி;ட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயம்இ அல்-அக்ஸா மகா வித்தியாலயம் மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இணைந்து  மது ஒழிப்பு தொடர்பான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நற்பிட்டிமுனை சந்தியில் இருந்து ஊர்வலமாக மண்டபத்தை சென்றடைந்தனர்.   இந்த விழிப்புணர்வூ ஊர்வலத்தில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் உட்பட கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஸ்வரன்இஉதவிக் கல்விப் பணிப்பளர் கே.வரதராஜன்இ அல்-அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் உட்பட ஆசிரயர்கள்.பெற்றௌர் பொலிஸார் என பல தரப்பட்டோர கலந்து கொண்டனர்.   ஊர்வலத்தில் மாணவர்களால் ஏந்திச் செல்லப்பட் மது ஒழிப்பு சிறந்த மூன்று  வாசகங்கள் அடங்கிய  பதாகைக்கு ப

'திதுலன கல்முனை' அபிவிருத்தி வேலைத்திட்டம் 2014ம் ஆண்டு முதல் 'திதுலன திகாமடுல்ல' என விஸ்தரிக்கப்படும்

Image
ஹரீஸ் எம்.பி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் .ஹரீஸினால் கல்முனைத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'திதுலன கல்முனை' ஒளிரும் கல்முனை அபிவிருத்தி வேலைத் திட்டம் 2014ம் ஆண்டு முதல் 'திதுலன திகாமடுல்ல' ஒளிரும் திகாமடுல்ல என விஸ்தரிக்கப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும், ஒளிரும் திகாமடுல்ல பெயர் நாமத்தை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யும் நிகழ்வும் ஒலுவில் கிறீன்விலா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,   2012ம் ஆண்டு முதல் என்னால் முடிந்தளவு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருக்pன்றேன். கடந்த வருடம் திதுலன கல்முனை எனும் திட்டத்தின் கீழ் கல்முனைத் தொகுதியில் விளையாட்டு மைதானம் புனரமைப்பு, குப்பைகள், கழிவுப் பொருட்கள் மீழ் சுழற்சி தொழிற்சாலை அமைத்தல். சேதனப்பசளை உற்பத்தி, பாதை அமைப்பு, பள்ளிவாசல் நிர்மாண வேலைகள், வைத்தியசாலை அபிவிருத்தி, வீச் பாக்

கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலய வித்தியாரம்ப விழா 2014

Image
கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலய வித்தியாரம்ப விழா சமீபத்தில் கல்லூரி அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர்  ஏ.ஜுனைதீன்  கலந்து கொண்டு சிறப்பித்தார் (படங்கள் இணைப்பு)

செய்தி தவறானதாகும் .

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு, முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிற செய்தி தவறானதாகும் . கல்முனை மாநகர சபையின் முதல்வராக இருந்த  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்   எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களது காலத்தில்  முதல் தடவையாக மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு டாக்டர் ஹபீபுல் இலாஹி  நியமிக்கப் பட்டமை யாவரும் அறிந்த விடயம்  இது இவ்வாறிருக்க முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிற செய்தி தவறானதாகும் . இந்த செய்தியை பிரசுரிக்கும் முன்னர் செய்தியாளர் கல்முனை மாநகர சபையின்  ஆணையாளர் அல்லது நிருவாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு உறுதிப் படுத்தி இருக்க வேண்டும்
Image
"ஆள் பாதை ஆடை பாதி" என்று சொல்வோம். இங்கே" பாம்பு பாதி - சிறுமி பாதி" என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியைப்பற்றிய அபூர்வ தகவல் இது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும் , கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி   பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும் , தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக , மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள் , இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி , ´ செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ் ' அல்லது ´ ஜிங் ஜிங் நோய் ' என்று குறிப்பிடுகின்றனர். இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடம்

Image
யு.எம்.இஸ்ஹாக் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர்  கடமைகளை  தற்காலிகமாக கவனிக்கும் பொருட்டு  கல்முனை வலயத்தில் கடமையாற்றும்  இலங்கை அதிபர் சேவை தரம்  01ஐ சேர்ந்தவர்களிடமிருந்து  விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண  கல்வி, பண்பாட்டலுவல்கள் ,காணி ,காணி அபிவிருத்தி  போக்குவரத்து  அமைச்சின் செயலாளரினால்  விடுக்கப் பட்டிருக்கும் அறிவுறுத்தலுக்கமைய  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீலினால்  இந்த அறிவித்தல் வழங்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பொருத்தமான அதிபர்கள் தங்களது விண்ணப்பத்தை 2014.02.05 ஆந்  திகதிக்கு  முன்னர்  பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால்  கேட்கப் பட்டுள்ளது.

கல்முனை அமானா வங்கி தீப்பற்றியது

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை அமானா வங்கி மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர் . இலங்கை இராணுவத்தினரும் ,கல்முனை பொலிசாரும்,கல்முனை மாநகர சபை  தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து  மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது  வங்கி  முன் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருப்பதால்  போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு பொலிசாரின் விசாரணை இடம்பெறுகிறது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை

Image
யு.எம்.இஸ்ஹாக் கல்முனை பொலிஸ்  நிலையத்தின்  வருடாந்த பரிசோதனை இன்று 18.01.20123 நடை பெற்றது. பொலிஸ்  தலைமை காரியாலய பொறுப்பதிகாரி  ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலுடன்  கல்முனை உதவி போலிஸ் அத்தியட்சகர்  காமினி தென்னகோன் தலைமையில்  இடம்பெற்ற வருடாந்த நிலைய பரிசோதனையில்  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் மகா கெதர பிரதம அதிகாரியாக கலந்து  பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டதுடன்  களப் பரிசோதனையும் செய்தார்.