Posts

Showing posts from October, 2018

நற்பிட்டிமுனை கிராமத்தில் பூரண கடையடைப்புடன் போதையொழிப்பு விழிப்பு ஊர்வலம்

Image
மது போதைக்கு எதிர்ப்பு தெரிவித்து "கிராமத்தைப் பாதுகாப்போம்"  எனும் தொனிப் பொருளில்  நற்பிட்டிமுனை கிராமத்தில் பூரண கடையடைப்புடன்  போதையொழிப்பு விழிப்பு ஊர்வலமும் ,மாநாடும்  நற்பிட்டிமுனை ஜும்மாபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஏற்பாட்டில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனமும் ,உலமா சபையினரதும் பங்களிப்புடன்  நடை பெற்றது . நேற்று செவ்வாய்க்கிழமை (30) காலை  நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய கிராம பாடசாலை மாணவர்களும் , ஊர் மக்களும்  அங்கிருந்து கிராமம் முழுவதுமாக  பதாதைகளை ஏந்தியவாறு  கோஷங்களுடன் ஊர்வலமாக சென்றனர் . மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு வீதி நாடகங்களும் இடம் பெற்றன . இதற்கு  ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை கிராமத்தில் வர்த்தக நிலையங்கள் ,பொது சந்தை முற்றாக மூடப் பட்டு பொது  மக்களும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் 

கல்முனை சைவமகா சபையின் பொன் விழா

Image
ஆன்மீக அமைப்புக்களில் மிக தொன்மை வாய்ந்ததொரு அமைப்பாக அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்முனை சைவமகா சபையின் பொன் விழா மலர் வெளியீடும் 50ஆண்டு நிறைவு  விழாவும் கல்முனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தில் (28) ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சைவமகா சபைத் தலைவரும் ஓய்வு  நிலை இலங்கை வங்கி  உயரதிகாரியுமான  வித்தகர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சைவ மகா சபை  முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்களினால் கல்முனை சைவ மகா சபை பொன் விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரின் முதல் பிரதியை ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் நடன ஆசிரியை கலா வித்தகர் நுண்கலைமானி  திரு

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் விபரம் பின்வருமாறு,  ஹேமசிறி பெர்ணான்டோ - பாதுகாப்பு அமைச்சு  டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு  ஆர்.பி. ஆரியசிங்க - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  எல்.பி. ஜயம்பதி - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு  கே.டி.எஸ். ருவன் சந்திர - விவசாயத்துறை அமைச்சு  பேராசிரியர் பி.எம்.எஸ். பட்டகொட - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு  பத்மசிறி ஜயமான்ன - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு  எச்.டி. கமல் பத்மசிறி - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு  வி. சிவஞானசோதி - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சு  கே. மாயாதுன்ன - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு  எஸ்.எம். மொஹமட் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு  எஸ்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதமர் மஹிந்தவை சந்தித்தார்

Image
எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இன்று (30) காலை கொழும்பு, விஜேராமையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை சீர் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சர்கள் நியமனம்

Image
இன்று (29) பிற்பகல் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 2. நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் 3. கலாநிதி சரத் அமுனுகம - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 4. மஹிந்த சமரசிங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர் 5. மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர் 6. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் 7. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் 8. விஜித் விஜயமுனி சொய்ஸா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் 9. ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள்,  உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் 10. டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்பு

Image
புதிய பிரதமராக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வைபவத்தின் போது அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22 ஆவது பிரதமராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊடகங்களுக்கு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image
அதற்கமைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு (Rupavahini) சட்டத்தரணி சரத் கோன்கஹகே, சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு (SLBC) பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க மற்றும் லேக் ஹவுஸ் (Lake House) நிறுவனத்திற்கு வசந்த ப்ரிய ராமநாயக்க ஆகியோர் பதில் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமருக்கான பாதுகாப்பு நீக்கம்; ரணிலுக்கு 10 பேர் பாதுகாப்பு

Image
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பை நீக்குமாறு, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமசிங்கவிற்கு குறித்த உத்தரவை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதற்கமைய முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிகமான விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நீக்குமாறு அவர் அவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பிரதமரின் பாதுகாப்புக்காக 10 பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் நாயகமாக நாலக்க கலுவெவ

Image
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட நாலக்க கலுவெவ (வலது), ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவிடம் (இடது) இருந்து அதற்கான நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டபோது) அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக, ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கல்முனையில் அலையும் இப்பெண்ணுக்கு அபயக்கரம் நீடுவார்களா?

Image
மனநலம் என்பது, ஒருவர் தன்னைத் தன்னோடும் சுற்றியுள்ள பிறரோடும் இணைத்துக்கொள்ளக்கூடிய திறனை, வாழ்க்கையின் சவால்களைக் கையாளக்கூடிய திறனைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மனநலம் என்பது, வெறுமனே மனநலப் பிரச்னை இல்லாத நிலை அல்ல. மனநலத்தை நேர்விதமாக வரையறுக்கும் நோக்கத்துடன், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆரோக்கியம் என்பதை இவ்வாறு வரையறுக்கிறது: 'முழுமையான உடல், மன மற்றும் சமூக நலன் உள்ள நிலை, வெறுமனே நோய் அல்லது பலவீனம் இல்லாத நிலை அல்ல'. WHO இன்னொரு விஷயமும் சொல்கிறது, ஒருவருடைய நலன் என்பது, அவர்கள் தங்களுடைய திறன்களை உணர்வதில், வாழ்க்கையின் வழக்கமான அழுத்தங்களைக் கையாள்வதில், பணியிடத்தில் செயல்திறனோடு செயல்படுவதில், தங்கள் சமூகத்துக்குப் பங்களிப்பதில் இருக்கிறது. மனிதர்கள் எல்லாருக்கும் சிரமங்கள் வரும், அதனால் தாற்காலிக அழுத்தம் வரும், தனிப்பட்ட, தொழில்சார்ந்த மாற்றங்கள் வரும், அதனால், மனச்சோர்வு வரும், பதற்றம் வரும். இது இயல்புதான். ஆனால், இவற்றினால் ஒருவருடைய இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அவருக்கு ஒரு மனநலப் பிரச்னை இருக்கலாம். இந்தியாவில் உடல்நலம்பற்றிய வ

கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் விசர் நோய் தடுப்பு வாரம் அனுஷ்டிப்பு

Image
(யு.எம்.இஸ்ஹாக்) "மிருக விசர் நோய் தடுப்பு மூலம் மனிதனை விசர் நோய் மிருகக் கடியிலிருந்து பாதுகாக்கலாம் " என்ற தொனிப் பொருளில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் விசர் நோய் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எதிர் வரும் விசர் நோய் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் உள்ள நாய் மற்றும் பூனை போன்ற மிருகங்களுக்கான விசர் நோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டமொன்று இம்மாதம் 29ஆம் திகதி (திங்கட் கிழமை) தொடக்கம் நவம்பர் 02 ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 20 கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிராந்திய அலுவலகங்களில் நடாத்த தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.நதீர் தெரிவித்தார். கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த காலங்களில் 21ஆயிரத்து ஐநூறு டோஸ் மருந்தளவு விசர் நோய் தடுப்புக்களுக்கும் , 50 விசர் நோய் மிருக கருத்தடையும் செயப்பட்டுள்ளதோடு மேலும் நா

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்று முன் ஜனாதிபதி மைத்திரி முன்னிலையில் சத்யப்பிரமாணம்!

Image

சிறுநீரக(கிட்ணி)மாற்றுச் சிகிச்சைக்கு உதவுங்கள்

Image
வடமத்திய மாகாண அனுராதபுரம் மாவட்ட கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரிபாவை கிராமத்தில் வசித்துவரும் நிஸ்வர் என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக சிறுநீரகங்களை மாற்ற வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் ரிஸ்வி சரீப் ஆலோனை வழங்கியுள்ளார். இந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு 35 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டிருக்கும் சாதாரண கூலித்தொழிலாளியான நிஸ்வரால் இந்தத் தொகையை ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் உள்ளார். ஜனாதிபதி நிதியின் மூலமாக நான்கு இலட்சம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எஞ்சிய தொகையை தனவந்தர்கள்,நன் கொடையாளர்கள் மற்றும்,அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக பெற எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே பாதிக்கப்பட்டிருக்கும்  நிஸ்வரின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு பெரும் மனங்கொண்டு உதவுமாறு அவர் பணிவான வேண்டுகோள் விடுக்கின்றார். உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு நன்கொடைகளை அனுப்ப முடியும். தாவூத் நிஸ்வர் கணக்கு இலக்கம் 83350927 இலங்கை வங்கிக் கிளை கஹட்டகஸ்திகிலிய.

பைந்தமிழ்க்குமரனின் அக்கினி யாத்திரை நாடகம் ஒரு பார்வை

Image
( யூ.எம்.இஸ்ஹாக்)   கல்முனை பாண்டிருப்பில் வாழ்ந்து கொண்டு கல்விப்பணியுடன் கலைப்பணியும் ஆற்றி வரும் பைந்தமிழ்க்குமரன் டேவிட் அதிபர்  அவர்கள் படைத்த அக்கினி யாத்திரை நாடகத்தை கடந்த 30.09.2018 ஞாயிறு திருஇருதயநாதர்  அரங்கிலே சுவைக்கக் கிடைத்தது. கிறீஸ்த்தவ விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட நாடுதழுவிய நாடகப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்த நாடகம் இது. அண்மையில் தலைநகர்  கொழும்பு டவர்  அரங்கில் அதற்கான பரிசளிப்பு நிகழ்வு  சுற்றலாத்தறை அபிவிருத்தி மற்றும் கிறீஸ்த்தவ மத அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசிய ரீதியில் முதலாம் இடத்தை இந்த நாடகம் பெற்றதுடன் சிறந்த நாடகப்பிரதி, சிறந்த நெறியாள்கை, சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் சிறப்பு  விருதுகளையூம் தட்டிக் nடிகாண்டது. அத்துடன் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் அடிகளாருக்கு சிறந்த இணைப்பாளர் வழிகாட்டிக்கான  சிறப்பு விருதும் கிடைத்தது.      அக்கினி யாத்திரை நாடகத்தை எழுதி பயிற்றுவித்து நெறியாள்கை ஒப்பனை அரங்க முகாமைத்துவம் செய்து மேடையளிக்கை செய்தவர்  இலங்கையின் பெயர் பெற

சாஹித்ய மண்டல விருது பெற்ற சோலைக்கிளிக்கு கல்முனையில் பாராட்டு

Image
நமது நாட்டில் தேசிய ரீதியில் இலக்கியப் பணிக்காக வழங்கப்படுகின்ற அதியுயர் இலக்கிய விருதான “சாஹித்திய மண்டல ” விருதினை மூன்றாவது தடவையாகவும் பெற்றுக் கொண்ட கல்முனையைச் சேர்ந்த உலக கவிஞர் சோலைக் கிளி என அழைக்கப்படும் அதீக் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்தப் பாராட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) கல்முனை பிரதேச கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச கலாச்சாரப் பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.எச்.ஏ.கனி தலைமையில் நடை பெற்றது.  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட தமிழ் துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ,உலக சிறு கதை எழுத்தாளர் உமாவரதராஜன், தமிழ்த் துறை ஆசிரியர் அஷ்ர ஃ ப்  , சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலிஹ் உள்ளிட்ட இலக்கிய பிரமுகர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சோலைக்கிளிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அகிலா பானு வாழ்த்துரை வழங்க கலாநிதி எஸ்.எல்.ஏ.அஸீஸ்  நிகழ்வுகளை தொகுத்

இரட்டை அரச விருது பெறும் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ காதர்

Image
2018 ஆண்டுக்கான கிழக்கு மாகாண உயர் விருதான வித்தகர் விருது மற்றும் அரச உயர் விருதான கலாபூஷண விருதுகளைப் பெறும் மருதமுனையைச் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனாப் பீர்முகம்மது முகைதீன் அப்துல் காதர் (பி.எம்.எம்.ஏ.காதர்)1957ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27ஆம் திகதி பிறந்தார். இவர் 30 வருடங்களாக ஊடக மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு கவிதை,கட்டுரை,விமர்சனம்,உள்ளீட்ட பல்வேறு படைப்புக்களை சமூக மேம்பாட்டுக்கா எழுதி வெளியிட்டு வருகின்றார். இவர்1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'அன்னை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் எழுத்துலகில் பிரவேசித்தார். அன்று முதல் இன்று வரை இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் பிராந்திய செய்தியாளராக் கடமையாற்றுகின்றார். இவற்றுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக் கடமையாற்றுவதுடன் மருதமுனை ஒண்லையின் இணையத் தளத்தின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிகின்றார். மர்ஹூம் எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட எழுச்சிக்குரல் பத்திரிகையில் செய்தி எழுத ஆரம்பித்து தினம