Posts

Showing posts with the label பூகம்பம்

கல்முனையில் சுனாமி பேரழிவு நினைவேந்தல்

Image
தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று புதன் கிழமையுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. கடற்கோளில் சிக்குண்டு மரணித்தோருக்கான பதிநான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்று கல்முனை மாமாங்க வித்தியாலய திடலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கருகில் இடம் பெற்றது.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை  மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும் வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் அந்த காட்சியை நேரில் கண்டவர்களும் நம்மிடையே உள்ளனர்.  14 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் முகமாக மரணித்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குரலுடன் உறவுகளுக்காக தீபமேற்றி பூசை வழிபாடுகளும் இடம் பெற்றன.  உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் கலந்

வடக்கு,கிழக்கில் 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று கனத்த மழை

Image
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம் நகர்வு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நகர்ந்ததையடுத்து நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் எனவும் கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பும் 90 முதல் 100 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இவற்றினூடான அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். இதுவரை இலங்கையில் சுனாமி ஏற்படுமென்ற சாத்தியக்கூறுகள் பெருமளவில் கிடையாது என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்: வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கைக்கு கிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலேயே தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது படிப்படியாக பலம் ப

மருதமுனை அக்பர் கிராமத்தில்அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)  தேசிய சுனாமி அனர்த்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை, பெரியநீலாவணை,அக்பர் கிராம பிரதேச மக்களுக்கான அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு  நேற்று (05-11-2017)அக்பர் கிராம முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கருகில் 2.00 மணி தொடக்கம் 3.15மணிவரை நடைபெற்றது. இங்கு முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.இதில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும்வி,ஷேட அதிரடிப்படையினரும்கடற்படையினரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை வீடொன்றில் அதிர்வு தரை ஓடுகள் வெடித்து சிதறியுள்ளன

Image
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியை ஒருவரின் வீட்டில்  நில  அதிர்வு  உணரப்  பட்டுள்ளது. இதனால்  ஆசிரியையின்  வீட்டு  தளத்தில்  வெடிப்பு ஏற்பட்டு  தளத்தில்  பதிக்கப் பட்டிருந்த தரை ஓடுகள் (Tiles)   உடைந்து சிதறியுள்ளதுடன் , வீட்டின் முன்னால்  உள்ள சுற்றுமதிலின்  ஒரு பகுதியிலும் சிறிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  சம்பவம்  கல்முனை -03 ஆனை  கோயில்  வீதியில்  விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்  முன்பாக உள்ள  வீட்டிலேயே  இடம் பெற்றுள்ளது. இன்று இரவு 8.45 மணிக்கு  இடம் பெற்றதாக  வீட்டு உரிமையாளரான  ஆசிரியை தெரிவித்தார் . சம்பவம் தொடர்பாக  ஆசிரியை  பெற்றிக்  உஷா  என்பவர் கூறுகையில்  எனது பிள்ளைகள்  படித்துக் கொண்டிருந்தார்கள் .நான்  பாடசாலை வேலை  செய்து கொண்டிருந்தேன் அந்த வேளை  வீட்டுக்குள் பட பட வென்ற சத்தம்  கேட்டது  அந்த வேளை   வீட்டுக்குள் சற்று நடுக்கம் போன்று  உணர்வு ஏற்பட்டது .  அதே கணம் வீட்டுக்குள் தரைக்குப்  பாதிக்கப் பட்டிருந்த  தரை ஓடுகள் அரை அடி  உயரத்துக்கு  மேலே கிளம்பி உடைய தொடங்கின . சம்பவத்தை பார்த்த நான்  அச்சம் காரணாமாக  எனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு  வீட

நிவாரணப் பணிகளில் ஈடு படுவோர் பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணங்களை அறவிடவும்

Image
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் வேண்டுகோள்  அனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள வெளி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளவர்கள் குழுக்கள் ரீதியாக செயற்படாமல் ஒன்று  பட்டு செயல் படுமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார்  தெரிவித்துள்ளார் . கல்முனை பிரதேசத்தில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக நிவாரணம் திரட்டும் பணிகளில் பலர்  குழுக்களாக செயல் படுகின்றனர்  இதனை தவிர்த்து பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணப் பொருட்களை திரட்டி உரியவர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும். குழுக்கள் ரீதியாக செயல் படுவதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன . இதனால் குழுக்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்படுகின்றது . எனவே  உதவும் நோக்கத்தில்  செயல் பட விரும்புபவர்கள் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராம சேவை உத்தியோகத்தர்களை பயன் படுத்தி நிவாரணங்களை திரட்டுமாறு பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் அனைவரிடமும் கேட்டுள்ளார் . 

7.9 நில அதிர்வு; சுமத்திராவில் சுனாமி எச்சரிக்கை!

Image
பதிப்பு 02 மேற்கு சுமத்திரா, வட சுமத்திரா மற்றும் ஏசே (Aceh) பகுதியில் இந்தோனேஷிய அரசினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இதேவேளை குறித்த அனர்த்தம் தொடர்பில் கொக்கோஸ் தீவுகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அவுஸ்திரேலியா சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, பேர்த் உள்ளிட்ட மேற்கு அவுஸ்திரேலிய கரையோர பிரதேசத்திலுள்ளோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.   படங் (Padang) எனும் பகுதியில் குறித்த அதிர்வு அதிகளவில் உணரப்பட்டுள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.   இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில், கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி பதிவான 8.9 ரிச்டர் அளவிலான நிலஅதிர்வு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 200,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   பதிப்பு 01 நில தட்டு எல்லைப் பகுதியான இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு பகுதியில் 7.9 ரிச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.   தென்மேற்கு சுமத்திரா பகுதியில் இடம்பெற்றுள்ள இந்நில அதிர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரம் இது வரை தெரிய வராத நிலையில், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதே

அழு குரலுடன் தீபம் ஏற்றும் சுனாமி நினைவு கல்முனையில்

Image
யு.எம்.இஸ்ஹாக்  தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 11 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. சிலருக்கு தங்கச் சுனாமி என வர்ணிக்கப்பட்டாலும் அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை, மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும், வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவுகளை அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் நம்மிடையே உள்ளனர்.  இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி உள்ளுர் நிறுவனங்களும் அமைப்புகளும் பாதிக்கப்படாத மக்களும் குறிப்பாக அரசாங்கமும்  காட்டிய காருண்யமான சேவைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரவேண்டும். 11 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது. கல்முனை மாமாங்க வித்தியாலய முற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குர

மூன்று மாதங்களுக்குள் பாரிய மூன்று பூகம்பங்கள்!

Image
அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் மேலும் மூன்று பூகம்பங்கள் நேபாளத்தில் ஏற்படலாம் என புவியிலளாளர் லலித் விஜேயரடண தெரிவித்துள்ளார். அதே நேரம் இவ்வருடத்தின் பிற்பகுதியில் இலங்கையிலும் இரண்டு நில அதிர்வுகள் ஏற்படும் எனவும் அவர் கூறினார். நான் நில அதிர்வுகள் தொடர்பாக நீண்ட காலமாக  ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். அந்தடிப்படையில் பேதுருதாலகால மலைப்பகுதியிலும் இமாலய மலைப்பகுதியிலும் பெறப்பட்ட மண் மாதிரிகளை பரீட்சித்ததன் அடிப்படையிலேயே இவ்வாறு பூகம்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் இலங்கை , இந்தியா , இந்தோனேஷியா , ஆகிய மூன்று நாடுகளும் ஒரே புவித்தட்டுக்குள் வந்துள்ளன. அது மிக விரைவில் பூகம்பங்கள் ஏற்படக்கூடிய புவித்தட்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்

Image
அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வூ குறித்து ஆராய தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் விசேட குழுவொன்று நாளை அம்பாறை செல்கிறது. நான்கு விஞ்ஞானிகள் இக்குழுவில் அடங்குவதாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார். இவர்களில் புவியியல் வல்லுநர்கள் இருவரும் இயற்பியல்துறை வல்லுநர்கள் இருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இக்குழு குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் தமது ஆய்வூகளை முன்னெடுக்கவூள்ளது. அம்பாறை மாவட்டத்தின் வட்டினாகல, தேவாலஹித்த, கிவூலேகம, தமண உள்ளிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நில அதிர்வூ உணரப்பட்டது. வெடிமருந்து பயன்படுத்தி சிலர் கல் உடைப்பதே அதிர்வூக்கு காரணம் என பரவலாக கூறப்பட்ட போதும் நில அதிர்வூக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நாளை!

Image
நாட்டில் கரையோர மாவட்டங்கள் சிலவற்றில் நாளை  மலை 3 மணியளவில்  சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்திகையின் போது சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சத்தம் எழுப்பப்படும் எனவும் அதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது

பத்து எச்சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லை ;

Image
  விசாரணை ஆரம்பம்   சுமாத்ரா தீவுக் கருகில் ஏற்பட்ட நில நடுகத்தையடுத்து இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக் கப்பட்ட போதும் 10 சுனாமி முன்னெச் சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லையென விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியது. இவற்றைத் திருத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷியா வின் சுமாத்ரா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள், ஊடகங்கள், பொலிஸார் ஊடாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன்போது 90 வீதமான கோபுரங்கள் இயங்கியதோடு நீர்கொழும்பு, மாத்தறை, கம்பஹா, சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கலான பல இடங்களில் அவை செயற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை கோபுரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சு பணித்திருந்தது. நாடு பூராவும் உள்ள 74 கோபுரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 10 கோபுரங்கள் இயங்காதது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்ப

சுனாமி எச்சரிக்கை வாபஸ்; மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம்

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 18:34 இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பூகம்பங்களையடுத்து இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் வீடுகளுக்குத்  திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரையோர வைத்தியசாலை மருத்துவ உத்தியோகஸ்தர்களின் விடுமுறை ரத்து

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 16:50 கரையோர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரநிலைமைகளுக்கு முகம்கொடுக்க தயாராக இருப்பதற்காக மருத்துவ ஊழியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இதேவேளை உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோர பிரதேசங்களிலுள்ள குறிப்பாகஇ தெற்கு, கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா திணைக்களம் கோரியுள்ளது. 

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கையிலும் அதிர்வு உணரப்பட்டது

Image
புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012 14:52 இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்திற்கு அருகில் சற்றுமுன் 8.9 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் இந்துசமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இப்பூகம்பத்தினால் இலங்கையின் கிழக்கு. மேற்கு, தெற்கு பிரதேசங்களிலும் கட்டிடங்களின் நடுக்கத்தை உணர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலின் அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.