Posts

Showing posts from December, 2016

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

Image
( அஸீம் கிலாப்தீன்) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெற்றது  இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அ லி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டனர் . இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் எகமுது கம்மான வாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

Image
தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இலங்கையில் மனித குலத்திற்கெதிரான பாரிய யுத்தம் முடிவுக்கு வந்த விட்டது. இருந்தாலும் புகை நின்ற பாடில்லை. அது மீண்டுமொரு காட்டுத்தீயினை உருவாக்குமா? என்ற அச்சம் எம்மை விட்டபாடுமில்லை. அதுபோலத்தான் இந்த நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தமான சுனாமி தாக்கமும் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இழப்பிற்கு தக்க நிவாரணம் கிடைத்ததா? என்பது ஒரு புறமிருக்க சிலருக்கு அது தங்கச் சுனாமியாகவே அன்று இருந்தது. மக்களின் உயிரிலும் இரத்தத்திலும் காட்டுமிராண்டி அரசியல் செய்தவர்களே இன்றும் அதிகாரத்தில் இருப்பது இந்த நாட்டுக்கு கிடைத்த பெரும் துரதிஸ்டமாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்  அட்டாளைச்சேனையை மையமாக கொண்டியங்கும் மனித எழுச்சி நிறுவனமும் காணி உரிமைக்கான அம்பாரை மாவட்ட செயலணியும்  சேர்ந்து  மேற்கொண்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையினை அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்ட

இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை அரசு தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது!

Image
நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்  இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம்  இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.  முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் இஸ்லாம், அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ் தொடர்பாக  மிகவும் கீழ்த்தரமான – கேவலமான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இனவாதம் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மு

சுமனரத்ன, ஞானசார தேரர்களை உடனடியாக கைது செய்க! விஜயதாஸ - ஹிஸ்புல்லாஹ் இடையே சபையில் கடும் வாதம்

Image
நாட்டின் சமாதானம் - அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.  இதற்கு மறுப்பளித்து உரையாற்றி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.  தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை நாங்கள் வரவேற்கின்றோம். நீங்கள் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையி

சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை “சைல்ட் பெஸ்ட்”ஆங்கிலக் கல்லூரியினால் கௌரவிப்பு

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் ஊடக சேவையைப் பாராட்டி மருதமுனை “சைல்ட் பெஸ்ட”ஆங்கிலக் கல்லூரி ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை(02-12-2016)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதி மன்ற நீதிபதி சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் பொன்னாடை போர்த்த கல்லூரியின் தலைவரும்.தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான்,சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்தீக் ஜெமீல்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைதீன். ஹபீப் வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன்,அதிபர் ஏ.ஆர் நிஃமத்துல்லா ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசிய மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய தேரரின் நடவடிக்கை ஊடகவியலாளர்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

Image
“கடந்த 03.12.2016 அன்று மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிப்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீனுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் தமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. ஊடகவியலாளர்களின் பணி மகத்தானதாகும். ஊடகவியலாளர்கள் யுத்த காலத்திலும், கடந்த ஆட்சியிலும் தமது உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்த காலம் போன்றே இந்த நல்லாட்சியிலும் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை தேரரின் நடவடிக்கை காட்டுகின்றது. பத்திரிகையாளர்கள் சமூக நலனுக்காக நடுநிலைமையாக இருந்து செயற்படுபவர்கள். தமது ஊடக பணியை பக்கம் சாராது, பத்திரிகை தர்மம் பேணி பல்வேறு சிரமங்களுடன் பணிபரிபவர்கள். இனவாதங்களை பேசி மக்களிடையே இனக்குரோதத்தையும் குழப்பங்களையும் அமைதியாக வாழும் மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் யாராக இ

மாவனல்லை ஸாஹிராவுக்கு பஸ் அன்பளிப்பு!

Image
புதிய மூன்று மாடிக்கட்டடத்துக்கும்  அமைச்சர் கபீர் அடிக்கல் நட்டிவைப்பு (நஸீஹா ஹஸன்) நாட்டின் முன்னணி முஸ்லிம் தேசிய பாடசாலையான மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் "ஸாஹிரா 2020| திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாடசாலையின் நீண்டநாள் தேவையாக இருந்த பஸ் கொள்வனவு மற்றும் நவீன வசதிகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி என்பன தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  கல்லூரிக்குத் தேவையான பஸ்ஸை மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.  4.2 மில்லியன் ரூபா பொறுமதியான குறித்த பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதன்போது பஸ்ஸ{க்கான சாவி கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ஜவாட் (நளீமி)யிடம்  கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில், ஐ.தே.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷீம், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கல்லூரி பழைய மாணவர் சங்கம், கல்லூரி அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள்