Posts

Showing posts from November, 2014

கல்முனை கின்டர்பெக் புழு பெரி முன் பள்ளி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை

Image
கல்முனை கின்டர்பெக்  புழு பெரி  முன் பள்ளி பாடசாலை மாணவர்களின்  சிறுவர் சந்தை நேற்று நடை பெற்றது . கல்லூரி அதிபர்  திருமதி குமாரசிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிறுவர் சந்தையை ஆரம்பித்து வைத்தார் . நிகழ்வில் ஆசிரியைகளும்  பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர் .

5ம் தர புலமைப் பரிசில் வெற்றி பெற்ற மருதமுனைப் பிரதேச மாணவர்கள் 76 பேர் கௌரவிப்பு!

Image
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.ஐ.முகம்மட் பிராஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்; கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் றாஸிக் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்சக்காப் ஆகியோரும், அதிதிகளாக அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஏ.ஆர்.நிஃமத்துல்லா, ஏ.முகம்மட் ஜிப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படுவதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் செயலாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் விழாவை நெறிப்படுத்தினார் .

சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு  நேற்று  சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. பைதுஸ் ஸக்காத் நிதியத் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹாலிஅல  மாபாஹிருள் உலூம் அரபுக் கலாசாலையின் அதிபர் மௌலவி  ஹசன் பரீட்  பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, செயலாளர் அப்துல் மஜீத், பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் பணிப்பாளர் எம்.எம்.இப்ராஹிம், செயலாளர் யூ.எல்.எம்.ஜவ்பர், உப தலைவர் எம்.மஹ்ரூப், பொருளாளர் எம்.எம்.நபாயிஸ், உப பொருளாளர் ஏ.சி.ஜமால்தீன் உட்பட மரைக்காயர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது 43 குடும்பத்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் 118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தலைமையிலான குழுவுக்கும், ஜனாதிபதி தலைமையிலான அரச குழுவுக்குமிடையில் நேற்று  (29) இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை என ஹரீஸ் MP தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கல்முனை நியூஸ் இணையத் தளத்துக்கு தகவல் தருகையில் ,  தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்த வேளை நாளை  (29) இரவு 7.30 மணிக்கு எனது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே மேற்படி ஜனாதிபதியுடனான சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தலைவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் அரசின் முக்கியஸ்தர்களுடன் எமது சமூகத்தின் கோரிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினேன். அதில் குறிப்பாக கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுவது போல் மேலதிக அரசாங்க அதிபரை நியமித்து விட்டு முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தலைவரிடம் எடுத்துக் கூறினேன்.  இவ்வாறான சூழ்நிலையில்

ஜனாதிபதியுடன் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று 29-11-2014 மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் பசில்  ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன்  மீண்டும் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரதான நிபந்தனைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்;.பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர். ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர். அண்மையில் அமைச்சர் பசில்  ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன் சந்திப்பு இடம்பெற்று  சில தினங்களின் பின்னர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மௌனமாக இருக்கப் போவதாக தீர்மானி

அம்பாறை மாவட்ட முன்பள்ளிப் பிள்ளைகளின் விடுகை விழா

Image
அம்பாறை மாவட்டம் ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் அம்மன் முன்பள்ளியும், அகத்திக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள லோட்டஸ் முன்பள்ளியும் இணைந்து 2013/2014 காலப்பகுதியில் முன்பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்து அடுத்த வருடம் தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளைகளுக்கு   சான்றிதழ்கள், பரிசில்கள், வழங்கி கௌரவித்து வழியனுப்பும் விடுகை விழா  நிகழ்வு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் நிதி அனுசரணையில் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் 28.11.2014ம் திகதி அம்மன் இல்லக் கட்டிடத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அம்மைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் திரு அலன் போல் அவர்களும் அவரது குழுவினரும், திருக்கோவில் வலயக் கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திரு. எஸ். தர்மபாலன், முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.உஜேந்தன், சொலிடாரி பவுண்டேசன் அமைப்பின் திட்ட பணிப்ப்பளரும், கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பளருமான வே. வாமதேவன், திட்ட ஆலோசகரான திரு. மு. மொனாஸ், அம்மன் இல்ல முகாமையாளர் திருமதி தி.கோகிலா, அம்மன் முன்பள்ளி ஆசிரியர்க

அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு

Image
ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அயராது உழைக்கப் போவதாக இம்மாவட்டத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற எம்.பி க்கள் மற்றும் மாநகர, நகர சபை பிரதேச சபை முதல்வர்கள், தலைவர்கள்  உறுப்பினர்கள் என பலதரப் பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமான செய்தியாளர் மாநாடு நேற்று  காலை (சனி-10.00க்கு) அம்பாறை ஆரியபவன் ஹோட்டலில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் உணவுப் போஷாக்கு மற்றும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, தொழில் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ,எம்.பி க்களான ஸ்ரீயானி விஜய விக்ரம, பி.எச்.பியசேன முன்னாள் மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ன ராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினரும், கல்முனைத் தொகுதி ஸ்ரீ லங்கா சு.கட்சி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.றியாஸ் (பெஸ்டர்), தேர்தலுக்கான மாவட்ட இணைப்பாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் செய்தியாளர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள மேற்படி முக்கியஸ்தர்களிடம் பலதரப்

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுப்பதவி

Image
முன்னாள்   அமைச்சர்   அமீர்   அலிக்கு பிரதியமைச்சுப்பதவி   வழங்கப்பட்டதாக   பரவி   வரும் செய்தி   தொடர்பாக   கிழக்கு   மாகாண   பிரதித்தவிசாளா் எம் . எஸ்சுபைா்   அவா்களிடம்   தொலைபேசி   மூலமாக வினவிய   போது   அவா்   இவ்வாறு   தெரிவித்தார் . 2012 ஆம் ஆண்டு   நடைபெற்ற   மாகாண   சபைத்தேர்தலில் முன்னாள்   அமைச்சர்   எம் . எஸ் . எஸ் . அமீர்   அலி அவர்களை   போட்டியிடச்   செய்து   முதலமைச்சர்   பதவி வழங்குவதாக   அரச   தரப்பு   உறுதியாகக்   கூறியிருந்தது . ஆனால் ,  அரசு   எதிர்பார்த்த   பெரும்பான்மை ஆசனங்களைப்பெற   முடியாமற்   போனது .  இதனால் முஸ்லிம்   காங்கிரசினையும்   இனணத்து   ஆட்சியமைக்க வேண்டிய   நிலை   அரசுக்கு   ஏற்பட்டது . இதனால் ,  அமீர்   அலியின்   முதலமைச்சர்   பயணம் தடைப்பட்டது .  அதனையடுத்து .  கிழக்கு   மாகாணத்தில் ஒரு   பொம்மை   முதலமைச்சரை   அரசாங்கம்   நியமித்தது . இதன்   மூலம்   மாகாணத்தின்   முஸ்லிம்களது அபிலாஷைகளையும்   அவர்களது   நியாயமான கோரிக்கைகளையும்   நிறைவேற்றிக்   கொடுக்க முடியாமல்   மாகாண   முஸ்லிம்களுக்கு   பாரிய அநீதியிழக்கப்பட்டது .  இதனையடுத்து ,  கல்கு

கல்முனை இஸ்லாமாபாத் சிறுவனின் இறப்பு அந்த குடும்பத்தால் ஈடு செய்ய முடியாதது- ஹரீஸ் எம்.பி கவலை

Image
கல்முனை மாநகரசபை உரிய பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்படுத்தாமை சிறுவன் மரணமடைந்தமைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம் .எம் ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்படி குற்றசாட்டை முன்வைத்துள்ளார் , அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு , இன்று கல்முனை இஸ்லாமபாத் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது நுஹைல் எனும் 13 வயது மாணவன் அகால மரணமடைந்தமைக்கு அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம் .எம் ஹரீஸ் நேற்று (27) மாலை சுமார் 4 மணியளவில், இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில், கல்முனை மாநகரசபையால் மல, சல கூட கழிவகற்றலுக்காக நிர்மாணிக்கப் பட்டுவரும் குளிக்காக தோண்டப்பட்டிருந்த பாரிய கிடங்கில் மழை நீர் தேங்கியிருந்த சமயம், இச் சிறுவன் அதனுள் வீழ்ந்தமையால் உயிரிழந்துள்ளார். இதற்கு கல்முனை மாநகரசபை, இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது உரிய பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்படுத்தாமை அல்லது உரிய முறையில் கண்காணிக்கப்படாமையே காரணம் என அறியப்படுகிறது. மாநகர சபையின் இப் பொறுப்பற்ற தன்மையயை கண்டித்து இன்று

கட்டைபறிச்சான் கிளிவெட்டி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தில்

Image
கட்டைபறிச்சான் கிளிவெட்டி போன்ற இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தில் தத்தளிக்கின்ற பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரமாக பெய்துவரும் அடைமழையின் காரணத்தினால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் யுத்த காலத்தில் நடைபெற்றுவந்த இடைத்தங்கல்களில் கட்டைபறிச்சான் கிளிவெட்டி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தின் போது பெரிதும் கஸ்டத்தில் வாழ்கின்றதாகவும் பாடசாலை செல்லும் மாணவர்கள் அன்றாட தொழில் செல்பவர்கள் மற்றுமு; அன்றாட வாழ்க்கை படிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு அங்கு வாழ்கின்ற பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் இரண்டு வருட செயற்திட்டத்தின் நிறைவுநிகழ்வு

Image
(சுரேஸ்) செயற்திட்டங்களின் மூலம் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் ஓர் தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம் என ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கிழக்குமாகாணத்திற்குப் பொறுப்பான முகாமையாளர் ஈ.தர்சன் கருத்துத் தெரிவித்தார். ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வவுணதீவு இலுப்படிச்சேனை பிரதேசத்தின் இரண்டுவருட செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்துத்தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...... எமது செயற்திட்டமானது வவுணதீவு பிரதேச செயலாக பிரிவில் இலுப்படிச்சேனை, வாழைக்காலை, சின்னகாலபட்டமடு, நாவற்தோட்டம் ஆகிய கிராமங்களில் 350ற்கு மேற்பட்ட குடுப்பங்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார முயற்சியிலான பயிற்சிகள் வழங்கல், சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற செயற்திட்டத்தின் உள்வாங்கப்பட்டு தலைமைத்துவம், தொழில் அபிவிருத்திபயிற்சிகள் பெண்கள் சமத்துவம் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது அதிலும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பனையோலையிலான கைப்பணிப் பொருட்கள்

கல்முனை நீதிவான் நீதிபதியின் கட்டளைக்கு அமைய இஸ்லாமாபாத் சிறுவனின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்

Image
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டப் பகுதியில் சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த கல்முனை மாநகர சபை நிருவாகத்தை கண்டித்து இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் . கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப் படும்  இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திற்கான மலசல கழிவகற்றல் தொகுதி அமைப்புக்காக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த குழி நிர்மாணப் பணியில் கல்முனை மாநகர சபை  பாதுகாப்பு வேலி  அமைக்காது  பொடு போக்குடன் செயல் பட்டதனாலே சிறுவனின் உயிர் பறிக்கப் பட்டதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து அம்மக்கள் மேற் கொண்ட எதிர்ப்பு ஊர்வலம் இஸ்லாமாபாத் கிராமத்திலிருந்து கல்முனை மாநகர சபை வரை சென்றது . ஆர்ப்பாட்டத்தில் சென்றவர்கள் கல்முனை மாநகர சபை நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்ட காரர்கள்  சிறுவனின் உயிர் பறிப்புக்கு காரணமான கல்முனை மாநகர சபை முதல்வரை கைது செய்,ஒப்பந்த காறரை கைது செய் என

சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதியில் இரண்டு வீடுகள் மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி எரிகின்றது

Image
சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதியில் இரண்டு வீடுகள் மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி எரிகின்றது .......... (தகவல் ,படங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும்)  பிந்திய தகவல்   சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (27) சற்றுமுன் இரவு 8.15 மணியளவில் மின் கசிவினால்  எம். லாபீர் என்பவரது வீடு முற்றாக சேதமாகியுள்ளது. இத்தீயினை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனளிக்காமல் இத்தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியினால் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.  திடீர் என தீ பரவியதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளனர் .  இத்தீ விபத்து  தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.