Posts

Showing posts from May, 2016

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின நிகழ்வு

Image
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை  முன்னிட்டு கல்முனை பிரதேச  திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட  புகைத்தல்,போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு விழிப்பூட்டல்  ஊர்வல  நிகழ்வும், சென்ற வருடம் புகைத்தல்,போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு வேலைத்திட்ட  நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று கல்முனை பிரதேச செயலக  மண்டபத்தில்  இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இருந்து  ஆரம்பமான  இவ் விழிப்பூட்டல்  ஊர்வலம் பிரதான வீதியின் ஊடாக கல்முனை பஸ் நிலையம் வரை சென்று பொலிஸ் நிலைய வீதி ஊடக  கல்முனை பிரதேச செயலகத்தை  வந்தடைந்தது. திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர்    எ.ஆர் .எம். சாலிஹ்,  தலைமையில்  இடம்பெற்ற  இந்நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலாளர்   எம்.எச். முகம்மட் கனி,  திட்ட  முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா, திவிநெகும வங்கி-வலய முகமையாளர்களான எஸ்.எஸ்.சதீஸ், எம்.எம்.எம்.முபீன்,  திவிநெகு சமுக அபிவிருத்தி  உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத், மகாசங்க உதவி முகாமையாளர் எம்.எ.எம்.மன்சூர்  உட்பட  திவி நெகு  அதிக

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வளைய மட்ட விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சுவட்டு மைதான விளையாட்டுப் போட்டி இன்று ( 31 ) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கணக்காளர் , கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர்கள் , உதவி கல்விப் பணிப்பாளர்கள் , கோட்ட கல்விப் பணிப்பாளர்கள் , பாடசாலை அதிபர்கள் , உடற்கல்வித்துறை உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீவு , சாய்ந்தமருது , கல்முனை முஸ்லிம் கோட்டம் , கல்முனை தமிழ்க் கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த 800 இற்கும் அதிகமான  மாணவ மாணவிகள் இப் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றனர்  வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  போட்டிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் .

பத்திரிகையாளர் மருதமுனை காதருக்கு பாராட்டு விழாவும்,தீரா-மை மலர் வெளியீடும்

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் 28வருட ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில் மருதமுனை புதுப்புனைவு  இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த பாராட்டு விழா சனிக்கிழமை (28-05-2016)மருதமுனை பொது நூலகக் கட்டடத்தில் அமைந்துள்ள சமூக வள நிலையத்தில் நடைபெற்றது  ஓய்வு  பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் விடி வெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டார் இங்கு பள்ளிவாசல்களின் தலைவர்கள்,சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் பற்றிய “தீரா-மை”என்ற பெயரில் நினைவு  மலர் ஒன்றும் வெள்ளிடப்பட்டதுடன், பல அமைப்புக்களால் இருபதுக்கும் மேற்பட்ட பொன்னாடைகள் போர்த்தி ஐந்து நினைவுச் சின்னங்களும் பல நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுன் அவரது மனைவிக்கும் விஷேட பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   கவிஞர் ஏ.எம்.குர்சித் நன்றியுரை வழங்கியதுடன்   ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ்