Posts

Showing posts from February, 2016

நற்பிட்டிமுனை கரீம் முகம்மது ஹலீமுக்கு சத்தியஜோதி விருது

Image
நம்நாடு நற்பணி பேரவையின் ஹிந்தி கீத்ராத் நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்தன  மண்டபத்தில் நடை பெற்றது.  சாம ஸ்ரீ அல் -ஹாஜ்  ரபீக் தலைமையில்  இடம் பெற்ற  நிகழ்வில் நற்பிட்டிமுனை   ஹலீமுக்கு சத்தியஜோதி   விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது. நற்பிட்டிமுனை அல் -கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான நற்பிட்டிமுனை   கரீம் முகம்மது  ஹலீம்  இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார் . கௌரவிக்கப் பட்ட 15 பேருள்  வயது குறைந்தவர் ஹலீமாவார் . கௌரவிப்பு  விழாவில் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, புரவலர் ஹாசிம் உமர் ,நற்பணி மன்றத்தின்  தலைவர்  தேசமானி ரபீக் ஆகியோரால்  ஹலீம் பொன்னாடை போர்த்தி சத்திய ஜோதி விருது வழங்கி கௌரவித்தனர் 

நகம் மாட்டிக் கொடுத்த கல்முனை கொலையாளி

Image
கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. அப்துல் கபார் தெரிவித்தார். வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளரும் உடன்பிறவாச் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்கள். முன்னாள் முகாமையாளரின் நிதி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் மிகவும் சனசந்தடிமிக்க வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. அதனால், செய்தி அ றிந்ததும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ்விடத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்தனர். நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பொத்துவில் அஸ்ரபுக்கு கல்முனையில் மகத்தான வரவேற்பு

Image
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 4×100M ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 100M ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று  தாய் நாட்டிற்கும்  கிழக்கு மாகாணத்திற்கும்  பெருமை தேடித் தந்த பொத்துவிலைச் சேர்ந்த செல்வன் எம்.அஸ்ரபை   பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது.  கல்முனை சனி மௌண்ட் விளையாட்டுக் கழகமும்  கல்முனை பொது மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த வரவேற்பு  பாராட்டு விழா வைபவம் நேற்று கல்முனை நகரில் இடம் பெற்றது. கழகத்தின் தலைவர் எம்.ஏ.கரீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கழகத்தின் பொது செயலாளர் அப்துல் மனாப்  ,  விளையாட்டு வீரரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். றியாஸ்(பெஸ்டர் ) உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் பலர் இணைந்து  பொன்னாடை அணிவித்து  மலர் மாலைகள் சூடி  நகரின் மத்தியில் வரவேற்றனர்.

சர்வதேச ஆய்வு மாநாட்டில் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன்; ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு

Image
(பீ.எம்.எம்.ஏ.காதர்) இந்தியாவின்“ஏ”தரத்திலான பொறியியல்துறை,தொழில் நுட் பத்துறையின் முன்னோடி பல்கலைக் கழகமான சென்னை பீ.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டில் இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதியும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதுடன் ஒரு அமர்வுக்கு தலைமையும் தாங்குகின்றார். இந்த ஆய்வு மாநாடு 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக் கழகப் பேராசிரியர் வீ.எம்.பெரிய சாமி தலைமையில் பல்கலைக் கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது ‘குடும்பவியல் வாழ்வும் பிரச்சிகைகளும் இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளும்” என்ற தொனிப் பொருளில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறுகின்றது. இம் மாநாட்டில் மலேஷய சர்வதேச பல்கலைக் கழக பேராசிரியர் தமீம் உஸாமா,சவூதி அரேபியாவின் உம்முல் குரா பல்கலைக் கழக பேராசிரியர் ரமடான் அப்துஸ் ஸாதிக் ஆகியோர் பேருரைகளையும்,இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு

Image
உத்தேச அரசியலமைப்புக்கான சீர் திருத்தங்கள் மீதான பொது மக்கள் யோசனைகள் முன் வைக்கப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்ட பொது மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வு  எதிர் வரும் 27,28 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. உத்தேச அரசியலமைப்பு சீர் திருத்தத்தில்  ஒரு அங்கமான தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கருத்துக்களை கண்டறியும் செயலமர்வு  தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (20.02.2016) அம்பாறை மாவட்டத்தில் நடை பெற்றது.  இந்த செயலமர்வு  சேனைக்குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் கல்முனை சுப்பர் ஸ்டார் விடுதியில் இடம் பெற்றது.  அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த கல்விமான்கள்,புத்தி ஜீவிகள் , அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டனர். பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் ஸ்ரீதரனின் வழிகாட்டுதலுடன் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் அரசியலமைப்பு திருத்தத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான வேட்பாளர்கள் தெரிவு  செய்தல், கட்சி மாறுதல், தேர்தல் பிரச்சார

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை அருள்மிகு  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர்  ஆலய  வருடாந்த  மகோற்சவ திருவிழா  இன்று சிறப்பாக  நிறைவடைந்தது. கடந்த புதன்கிழமை (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திரு விழா 12 நாட்களாக  இடம் பெற்ற திருவிழா  இன்று திங்கட் கிழமை (22) தீர்த்தோற்சவதுடன்  நிறைவு பெற்றன . உற்சவ காலத்தின் போது  பஞ்சமுக அர்ச்சனை தீபத் திருவிழா ,பக்தி முக்தி பாவநோற்சவம், வேட்டைத்திருவிழா,புஸ்பாஞ்சலி திருவிழா ,கற்பூர சட்டி திருவிழா  என்பன இடம் பெற்று நேற்று ஞாயிற்றுக் கிழமை மக்கள் புடை சூழ சப்பறத்திருவிழா இடம் பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு  சிவஸ்ரீ  கந்தவரதேஸ் வரக் குருக்கள் தலைமையில்  உற்சவ கால கிரியைகள் இடம் பெற்றன .

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய செயல் வீரன் பிரதி அமைச்சர் ஹரீஸ் !!

Image
கல்முனை றோயல் வித்தியாலயத்தில் கடந்த வருடம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் 'றோயலின் புலமைத்தளிர்கள்' நிகழ்வு சனிக்கிழமை (20) ஆசாத் பிளாஷாவில் இடம்பெற்றது. றோயல் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத் தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். இதில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் எல்.ரீ.சாலித்தீன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம்   உள்ளிட்ட கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கல்முனை றோயல் வித்தியாலயத்தினை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதியில் பிரதி அமைச்சர் ஹரீஸினால் 2012ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ், இப்பாடசாலையிலிருந்து 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும்