நற்பிட்டிமுனை கரீம் முகம்மது ஹலீமுக்கு சத்தியஜோதி விருது

நம்நாடு நற்பணி பேரவையின் ஹிந்தி கீத்ராத் நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்தன  மண்டபத்தில் நடை பெற்றது.  சாம ஸ்ரீ அல் -ஹாஜ்  ரபீக் தலைமையில்  இடம் பெற்ற  நிகழ்வில் நற்பிட்டிமுனை   ஹலீமுக்கு சத்தியஜோதி   விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை அல் -கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான நற்பிட்டிமுனை   கரீம் முகம்மது  ஹலீம்  இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார் . கௌரவிக்கப் பட்ட 15 பேருள்  வயது குறைந்தவர் ஹலீமாவார் .

கௌரவிப்பு  விழாவில் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, புரவலர் ஹாசிம் உமர் ,நற்பணி மன்றத்தின்  தலைவர்  தேசமானி ரபீக் ஆகியோரால்  ஹலீம் பொன்னாடை போர்த்தி சத்திய ஜோதி விருது வழங்கி கௌரவித்தனர் 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது