Posts

Showing posts from October, 2011

மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் குறித்து கூடிய கவனம்

Image
145 பேர் இறந்துள்ளதாக அமைச்சு தகவல் இடைப்பருவப் பெயர்ச்சி மழையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு கூறியது. கடந்த 10 மாத காலத்தில் நாடுபூராவும் 20,753 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் 145 பேர் டெங்கு நோயினால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஜுலை மாதத்திலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த மாதத்தில் 4781 பேர் அடையா ளங்காணப்பட்டனர். ஆனால் கடந்த காலத்தில் நாடுபூராவும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரம் காரணமாக டெங்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் அநேகமான பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதையடுத்து மீண் டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கோரியுள்ளது. டெங்கு காரண மாக மேல் மாகாணத்திலே அதிகமான வர்கள் இறந்துள்ளனர். 58.1 வீதமானவர்கள் இப்பகுதியில் இறந்துள்ளனர்.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும்

Image
துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (27) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில்  அகில இலங்கை ஜமியதுல் உலமாசபை, முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள்இ ஏனைய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இன்று நாட்டின் எப்பாகத்திலும் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் துல்கஃதா மாதத்தினை முப்பதாக நாளை நிறைவு செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகின்றது என்ற தகவலை  கூடிய பிறைக்குழு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி புனித ஹஜ்ஜூப் பெருநாள் எதிர் வரும் திங்கற் கிழமை (07) கொண்டாடப்படும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு

Image
கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீஸ் ஹோட்டலில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களது ஏற்பாட்டில் நடை பெற்றது. இங்கு தேர்காலத்தின்போது உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மனக்கசப்புக்களை மறந்து கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அணைவரும் உழைக்குமாறு பா.உ வேண்டுகோள் விடுத்தார்.

சாய்ந்தமருதில் திவிநேகும வேலை திட்டம்

Image
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் ' திவி நெகும ' மனைப்பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது பிரதேச வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் மத்தியில் பயிர்ச்செய்கையினை ஊக்குவித்து அவர்களின் பொருளாதார நிலமையினை உயர்த்துவதுடன் நச்சற்ற போசாக்குள்ள உணவுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் இ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் இ சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோஸ்தர்களான ஏ.பி.எம்.அஸ்ஹர் இ ஏ.எல்.ஏ.மஜீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம்

Image
கல்முனை மாநகர சபையை கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில், கொழும்பு 12 இல் அமைந்துள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

நற்பிட்டிமுனை கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.எஸ் பரீட்சையில் சித்தி

Image
நற்பிட்டிமுனை கிராம சேவகர் எஸ்.எல்.ஏ.எஸ் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார் . நற்பிட்டிமுனை எம்.ஆசீக் என்பவரான முனை பிர தேச செயலகத்தில் கிராம சேவகராக கடமை புரியும் இவர் மர்ஹூம் ஏ.எல்.எம். பளீல் பிர தேச செயலாளரின் மருமகனாவார் .

அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் எனும் நூலின் வெளியீடு; கல்முனை மேயருக்கு "மருதமணி பட்டம்"

Image
பிரபல பன்னூலாசிரியரும் ஊடகவியலாளருமான சாய்ந்தமருது எம் எம் எம் நூறுல் ஹக் எழுதிய 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மெட்ரோ மிரர் செய்தி இணையத்தள முகாமைத்துவ ஆசிரியர் செயிட் அஸ்லம் எஸ்.மௌலானா தொடக்கவுரையையும் கவிஞர் நவாஸ் சௌபி நூல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர். அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப், மருதம் கலை இலக்கிய வட்டத்தினால் "மருதமணி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அமைப்பின் தலைவர் ஏ.எம்.நஸீர், தவிசாளர் நவாஸ

இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சவூதி அரேபியா இணக்கம்

Image
இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சவூதி அரேபியா இணக்கம் தெரிவித்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் சவூதி அரேபியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அங்கு மாகாணசபை, உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் மன்ஸூர் பின் முதீப் பின் அப்துல் அஸீஸைச் சந்தித்தார். அச்சந்திப்பிலேயே இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். அச்சந்திப்பின்போது சவூதி அரேபியாவின் சமூகஇ மகளிர் விவகார அமைச்சர் கலாநிதி யூசுப் பின் அல் உதைமின்இ சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜவாத் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்த்தாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்

கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Image
நேற்று (25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச் சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.  பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17268) பெறுமதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான நிதிப்பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள்.  ஜனநாயக சோசலிச குடியரசின் தமிழ் பேசும் மக்களுக்கு எழுத்துமூலமாக கிடைத்துள்ள மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.

மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டி

Image
மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி பவுண்டேசனின் அனுசரணையுடன் மருதமுனை கிரிகெட் சங்கம் நடாத்தி வரும் மர்ஹூம் டாக்டர் எச். எல். ஜமால்டீன் எஸ். எஸ். பி ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டி  தொடரின் இறுதிப் போட்டி மற்றும் அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் புதன்கிழமை (26.10.2011) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. நொக் அவுட் அடிப்படையில் நடைபெற்ற இத் தொடரில் அணிகள் பங்கு பற்றின. இவ் இறை இறுதிப் போட்டிகளில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகம், மருதமுனை மிமா விளையாட்டு கழகம், மருதமுனை கல்பனா விளையாட்டு கழகம், மருதமுனை பிரிஸ்பேர்ன் விளையாட்டு கழகம் என்பன பங்கு பங்குபற்றுகின்றன .

மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா

Image
மலையாக கலை கலாச்சார  சங்கத்தின் அனுசரணையுடன் மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா நேற்று முன்தினம்(23 ) மாலை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது. மகாத்மாகாந்தி உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதையும் ,பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய செயலாளர்  சுப்பிர மணியம் புண்ணிய சீலன் உட்பட மகாத்மாகாந்தி நினைவ பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர்களையும் படத்தில் காணலாம் மலையாக கலை கலாச்சார  சங்கத்தின் அனுசரணையுடன் மகாத்மா காந்தி நினைவு ரத்னா தீப விருது வழங்கும் விழா நேற்று முன்தினம்(23 ) மாலை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது. மகாத்மாகாந்தி உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதையும் ,பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாத்தளை ஸ்ரீ முட்டு மாரியம்மன் ஆலய செயலாளர்  சுப்பிர மணியம் புண்ணிய சீலன் உட்பட மகாத்மாகாந்தி நினைவ பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர்களையும் படத்தில் காணலாம்

இதயத்தில் வீற்றிருக்கும் முஸ்லிம் தேச தலை நகர மக்களுக்கு நன்றிகள்

Image
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமும்  பொதுக் கூட்டமும்  இன்று கல்முனையில் நடை பெற்றது. கல்முனை  மாநகர பிரதி முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் திரளான கல்முனை மக்கள் கலந்து கொண்டனர் 

லிபிய தலைவர் கடாபி சுட்டுக் கொலை

Image
லிபியாவில் 42 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த கேணல் முஅம்மர் கடாபி நேற்று புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. கடாபி தன்னுடைய நெருக்கமான நண்பர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் தனது பிறந்த சொந்த ஊரான செற் நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த போது அந்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இப்போது அவர் மரணமடைந்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி மனித குலத்திற்கு எதிராக மேற் கொண்ட குற்றச் செயல்கள் சம்பந்தமாக கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது. நேற்று நடந்த தாக்குதலின் போது கடாபியின் இரண்டு கால்களும் படுகாய மடைந்திருப்பதாக லிபியாவின் தேசிய இடைக்கால ஆட்சி மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியான அப்டெல் மஜீத் ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு அறிவித்தார். காயமடைந்த கடாபி ஒரு அம்பியூலன்ஸில் இனந்தெரியாத ஓரிடத்தில் வேகமாக எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னர் வந்த செய்திகள் கூறுகின்றன. கடாபியின் ஆட்சி முடி

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

Image
சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையிலிருந் து இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத தோற்றி சித்தியடைந்த 5 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களும் அக்கரைப்பற்று உதவும் கரங்கள் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இது தொடர்பான வைபவம் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்றது.  இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதில் உதவி அதிபர் எம்.எஸ். நஸார் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது சாய்ந்தமருது கோட்ட மட்டத்தில்184 அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இப்பாடசாலையைச் சேர்ந்த எம்.ஏ.சபீக் அப்றின் உட்பட மேற்படி ஐந்து மாணவர்களும் கற்பித்த நான்கு ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 70புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களுக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டன.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் அறிகுறி

Image
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்து சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் டி. ஏ. ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார். இந்தக் காலப் பகுதியில் சில பிரதேசங்களில் கடும் மழையும் பெய்ய முடியும் எனவும் அவர் கூறினார். இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் கடும் காற்றும் வீசக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை இக்காலப் பகுதியில் இடிமின்னல் தீவிரமாக இருக்கும். அதனால் அவற்றின் பாதிப்பு களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது வீடுகளில் மின்சாரப் பொருட்களைப் பாவிப் பதையும், திறந்தவெளிகளில் நடமாடு வதையும், நீராடுவதையும், உடற் பயிற்சி களில் ஈடுபடுவதையும் உயர்ந்த மரங்களில் நிற்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இவர் கேட்டுக் கொண்டார்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்சியடைந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவிகளுக்கு பியசேன எம்.பி. பாராட்டு

Image
அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைதீவு கோட்டத்தைச் சேர்ந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி வைப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அண்மையில் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான ஏ.ஆர்எம்.அப்ராபாணு இ ஏ.எல்.எப்.பஸ்ரின் ஆகியோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டியதுடன் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில்சிறுவர் சந்தை

Image
முன் பள்ளி பாடசாலை   பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடைய ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை  சிறுவர் சந்தை நிகழ்வு ஒன்று இடம் பெற்றது. அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

கோடாபய ராஜபக்க்ஷயின் வழிகாட்டலில் தேசிய மாணவர் படையணி

Image
தேசிய மாணவர்கள்  படையணியின் மூலம் உயர் படிப்பினைகளை பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வோம்  என்ற தொணிப்பொருளில் பாடசாலை வளாகங்களில் 2011 ஒக்டோபர் 5ஆம் திகதி காலை 9.30 மணியளவில் 2011ஆம் ஆண்டுக்கான பாடசாலை சிரமதான அலங்கார  வேலைத்திட்டம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.  இதன் அடிப்படையில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிரமதான நிகழ்வைப்படத்தில் காணலாம். இந்நிகழ்வு பாதுகாப்புச் செயளாலர் கோடாபய ராஜபக்க்ஷயின் வழிகாட்டலில் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தலைமையில் கல்வி அமைச்சு இணைந்து கடல், வான், தரை ,பொலிஸ் வாத்திய மாணவர்கள் படை ஆண், பெண் குழுக்களின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.