Posts

Showing posts with the label அதிசயம்

ஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி

Image
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.  இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.  இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்‌ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார்.  Dozens of gold miners killed in collapse in Afghanistan ========================================== At least 30 people were killed when a gold mine collapsed in northea

திருகோணமலை மொகமட் ராசிக் என்ற, மனிதப் புனிதரின் அற்புதமான பணி

Image
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தினமும் நோயாளர்களின் பணிவிடைகளை பார்த்து வரும் நபரொருவர் திருகோணமலை மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் ஆச்சரியமிக்க ஒரு புனித மனிதராகவும், புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து வருவதுடன் நோயாளர்களுக்கு தினமு‌ம் பனிவிடை செய்து வருவதாகவும் வைத்தியசாலைக்கு வருவதை வழக்கமாக்கியும் கொண்டுள்ளார். கடந்த இரண்டரை வருடங்களாக தினமும் வைத்தியசாலைக்கு வருவதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். தேசிய நீர்வழங்கள், வடிகாலயமப்பு சபையில் பணிபுரியும் ஜமால்தீன் மொகமட் ராசிக் என்பவரே இந்த சமூக பணியில் ஈடுபட்டுள்ளவர். 1978-79 களில் இடியப்பம் விற்று தனது குடும்ப வறுமையை போக்கிய இவர் இன்று தனது உழைப்பில் ஒரு பகுதியை நோயாளர்களுக்காக ஒதுக்கியுள்ளார். தினமும் காலை 7.00 முதல் 8.00 மணிவரை நோயாளர்களுக்கு சேவை செய்வதற்காவே நேரத்தை ஒதுக்கி அந்நேரத்தில் வேறு எந்த விடயத்திலும் ஈடுபடாதவர் எனவும் தெரியவருகின்றது. நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் இவரை ஏதாவதொரு வாட்டில் (களம்) நிச்சயம் காணலாம். இதேவேளை தான் சந்திக்கும் நோய

இன்று தேசிய மீனவர் தின அதிஷ்டம் மருதமுனையில் இன்று மாலை கீரி மீன் அதிகளவில் கரைவலைக்கு பிடிபட்டுள்ளது.

Image

கல்முனை கடற்கரைப்பள்ளிக்கு அருகாமையில் இன்றும் 40இலட்சத்துக்கும் அதிகமான பாறைக்குட்டி மீன் மீனவர்களுக்கு பிடிபட்டுள்ளது

Image

இலங்கை ஜனநாயகத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா

Image
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.  அது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.  இந்த நாட்டில்  இனவாதம் தலைவிரித்தாடி சிறுபான்மையினர் அழிக்கப்பட்டபோது  ஏற்படாத அக்கறையும் கவலையும் இப்போது அமெரிக்காவுக்கு  ஏற்பட்டுள்ளது .   அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .

2700 அடி உயரக் கயிற்றில் ஹீல்ஸ் காலுடன் நடந்து அசத்திய பெண்

Image
ஹைஹீல்ஸ் போடும் பெண்களால் சரியாக நடக்க முடியாது என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா காட்சிகளும் கேலி கிண்டல் ஜோக்குகளும்  ஃ பெயித்திடம் எடுபடாது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த திகில் சாகச விரும்பிதான் ஃபெயித் டிக்கி (26). நிறைய சாகசங்களை செய்து போராடித்ததால் அண்மையில் Highgirls Brazil Festival இல் கலந்து கொண்டார். 2755 அடி உயரத்தில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் உள்ள ஹைலைனில் (கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வழி) ஹைஹீல்ஸ் காலுடன் கடப்பதென்றால் சும்மாவா...

ஒரு மாத குழந்தையை விற்ற குற்றத்தில் மூன்று பேர் கைது

Image
அனா வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு மாத குழந்தையை விற்ற குற்றத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று (03.11.2015) இடம் பெற்றதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமத்தில் வசித்துவந்த திருமணம் முடிக்காத இருபது வயதுடைய பெண் பிள்ளைக்கு கடந்த 2015.10.04ம் திகதி திருகோணமலை வைத்தியசாலையில் வைத்து பெண் பிள்ளை ஒன்று பிறந்துள்ளது அப் பிள்ளையை இருபதாயிரம் ரூபாவிற்கு கடந்த 28.10.2015ம் திகதி பிறைந்துரைச்சேனை பகுதியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு விற்பனை செய்யப்பட்டள்ளது. குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர்கள் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிள்ளையின் தாய் அதனை வாங்கியவர் மற்றும் தரகர் ஆகிய மூவரும் வாழைச்சேனை பொலிஸாரால் நேற்று (03.11.2015) கைது செய்யப்பட்டு நேற்றய தினமே வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஏ.எல்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியின் பொறுப்பற்ற தனத்தினால் கல்முனையின் அபிவிருத்திக்கு ஆப்பு!

Image
சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசனலியின் பொறுப்பற்ற தனத்தினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலைக்கு கிடைக்கவிருந்த அவசர விபத்துப் பிரிவு வேறு வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.  இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் கருத்து தெரிவிக்கையில்,  அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் பயன் பெற்றுவரும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சுமார் இருபத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் அவசர விபத்து பிரிவுக்காக சகல உபகரணங்ளுடன் கூடிய நான்கு மாடிக்கட்டிடம் ஒன்று உலக வங்கி நிதி உதவியில் நிர்மாணிக்க பூர்வாக நடவடிக்கைகள் ஏற்பாடாகியிருந்தன.  சுமார் இரண்டு வருடங்களாக திட்டமிடப்பட்ட குறித்த அவசர விபத்துப் பிரிவு கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து மண் பரிசோதனைக்காக ஆவணங்களுடன் வந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு திசை திருப்பப்பட்டுள்ளனர்.

மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி

Image
பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நேற்று  (20) அதிகாலை ஆடு ஒன்று மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. சுமார் 08 கிலோ கிராம் நிறையுடய அதிசய ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.

20 கிலோ எடையுடன் காட்சியளிக்கும் 8 மாத குழந்தை!

Image
8 மாத குழந்தை ஒன்று 20 கிலோ உடல் எடையுடன் காணப்படுவது கொலம்பியாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவை சேர்ந்த யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி, தனது எட்டு மாத குழந்தை சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரித்து கொண்டே போவதால் அதிர்ச்சியுற்றார். இதனையடுத்து குழந்தையின் உடல்நிலையை பற்றி ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.இதில் , தனது குழந்தை அழும் நேரமெல்லாம் உடனடியாக பாலூட்டினார் என்றும் அவன் இவ்வளவு குண்டாவதற்கு தானே காரணமாகிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தை பார்த்த மருத்துவமனை இயக்குநர் சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ், அக்குழந்தையை தங்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார். தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலங்களில் அக்குழந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் குழந்தை குணமடைவதற்கு நீண்ட காலம் பிடிக்

கற்பனை என்பது இறைவனின் கொடை

Image
கற்பனை என்பதை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாக கொடுத்துள்ளான் . அந்த  வித்தியாசமான கற்பனையில் உருவான  ஒரு ஆக்கமே  இந்த வாத்து உருவமாகும் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற . எஸ்.கிளமன்  என்பவர்  அலுவலகத்தில்  வீசப்பட்ட கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி   தனக்கு கிடைத்த ஒய்வு நேரத்தில்   இந்த அழகான  வாத்து உருவத்தை   செய்து முடித்துள்ளார்   ஒரு கிலோ கழிவு கடதாசி இதற்கு  பயன்படுத்தி உள்ளதாகவும் மூன்று நாட்கள்  தேவைப் பட்டதாகவும்    கிளமன் கூறுகிறார்.

கைகள் இல்லை எனினும் கலங்காது கருமமாற்றும் காரிகை!

Image
லண்டனை சேர்ந்த 48 வயதான Annette Gabbedey என்ற பெண்மணி தனது இரு கைகளையும் மணிக்கட்டுக்கு கீழாக முற்றாக இழந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாது பல்வேறு வடிவங்களில் ஆபாரணங்களை  உருவாக்கி அசத்துகின்றார். உள்ளதை கொண்டு திருப்தி கொள்வதில் உயர்விருக்கிறது என்பது நபி மொழியும் கூட . அவ்வாறே தனக்கு இருக்கும் முண்டக் கையை வைத்தே, திருப்தியுடன் உழைப்பதானது இரு கைகளிருந்து ; சோம்பேறியாக வாழும்  ஏனையோருக்கு நல்லதோர் படிப்பினையன்றோ ? . ' காலுக்கு செருப்பில்லையே என்று அழுதேன் .காலே இல்லாத ஒருவனைக் காணும் வரை ' என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி படித்துள்ளோம். அல்லவா ? தனது   இரு கைகளை இழந்த இந்த அழகிய பெண்ணின் அயராத  முயற்சியைப் பார்த்தீர்களா ? ஆம்!.  மாட மாளிகை இல்லை, கூட கோபுரமில்லை, ஓட வாகனமில்லை என அங்கலாய்ப்போருக்கு சோதனையை யும் தாண்டி சாதிக்கும் இந்த   பெண்மணி ஒரு முன்னுதாரணம் அல்லவா ?   
Image
"ஆள் பாதை ஆடை பாதி" என்று சொல்வோம். இங்கே" பாம்பு பாதி - சிறுமி பாதி" என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியைப்பற்றிய அபூர்வ தகவல் இது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும் , கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி   பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும் , தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர். இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக , மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள் , இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி , ´ செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ் ' அல்லது ´ ஜிங் ஜிங் நோய் ' என்று குறிப்பிடுகின்றனர். இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்

உலகின் நிறை கூடிய பெண்ணின் எடை 400 ஆக குறைப்பு!

Image
தனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது  1000  இறாத்தல் நிறையை  5  வருடங்களில்  600  இறாத்தலால் குறைத்துள்ளார். அமெரி்க்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் ( 32 வயது) என்ற மேற்படி பெண் தனது  2  வயது பெறா மகனை எலிஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார். 1000  இறாத்தல் நிறையைக் கொண்ட மேரா தவறுதலாக பாலகன் மீது உருண்டு விழுந்துள்ளார். இந்நிலையில் பாலகன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். ஆரம்பத்தில் மேரா திட்டமிட்டு படுகொலை செய்ததாக கருதப்பட்டது. எனினும் , 2008 ஆம் ஆண்டு மேரா படுகொலை செய்யவில்லை ,  சிறுவனின் மரணத்துக்கு அவரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும் , அதனால் மேரா குற்றவாளியல்ல எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் ,  தனது பெறா மகனின் மரணத்துக்கு காரணமான தனது நிறையை குறைக்க தீவிரமாகப் போராடிய மேரா ,  தனது நிறையை  600  இறாத்தலால் குறைத்துள்ளார். தற்போது அவரது நிறை  400 இறாத்தலாகும்.   அளவோடு இருந்தால் நலமோடு வாழலாம் அல்லவா ?  உடல் பருமமும் தான்

நொச்சியாகாமத்தில் மீன் மழை!!

Image
அநுராதபுரம் நொச்சியாகாமம் – வெடியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளது. நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இப் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக பெய்த கடும் மழையுடன் கூடிய காலநிலையில் பல மணத்தியாலங்களாக இங்கு மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீன் மழையில் போது 400 – 500 வரையான மீன்கள் தரையில் விழுந்துள்ளன.

திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’… அதிர்ந்து போன உறவினர்கள்

Image
  திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை  விரும்பும் மனிதர்கள்,   தங்களது  சினிமா  ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில்  வெறும்  கேக்காக   ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக  மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க  திகில்  பட ரசிகர்  தனது  திருமண  கேக்கை வடிவமைத்த  முறையைப்  பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அப்படி என்ன மாடல் என்று நீங்களும் பாருங்களேன்… வித்தியாசமான திருமண கேக்…  .   அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். அதிர்ச்சி வைத்தியம்…   மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்தி

உலகின் உயரமான மனிதன் திருமண பந்தத்தில் இணைந்தார்

Image
உலகின் உயரமான மனிதனாகக கருதப்படும் 8 அடி 3 அங்குலமான சுல்தான் கொசென் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஆம், மேர்வ் டிபோ என்ற 20 வயதான 5 அடி 8 அங்குல உயரமான பெண்ணுடனேயே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இப்பெண் கொசெனை விட 2 அடி 7 அங்குலம் உயரம் குறைந்தவர். இந்நாள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளெனவும், தனது உயரத்தினால் தனக்கான துணை கிடைக்காமையால் கவலையில் இருந்து வந்ததாகவும் ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சுல்தான் கொசென் தெரிவித்துள்ளார். அவரது சொந்த நாடான துருக்கியில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. உலகில் இதுவரை சுமார் 10 பேரே 8 அடிக்கு மேல் உயரமானவர்கள் என்பதுடன் அதில் சுல்தான் கொசெனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் போத்தல்களால் கட்டப்படும் வீடு!

Image
 பொலிவியா மக்கள் பாவனை முடிந்ததும் குப்பையில்  வீசப்படும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது. இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர். பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார். பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துள்ளார்.இதனையடுத்து பலரும் இம்முறையில் வீடு கட்டும் முயற்சியை ஆரம்பித்துள்னர். தற்போது பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளமை தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் வாகா. ஆம்! வீடு கட்டுவதற்கு கல் மட்டுமல்ல- சிமெந்து மணல்  போன்ற ம

தாடி முளைத்த பெண்!

Image
பொதுவாக ஆண்களுக்குத்தான் மீசை ,தாடி என்பன வளர்வதுண்டு.ஆனால்; வழமைக்கு மாறாக ஒரு பெண்ணுக்கு தாடி வளர்ந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா (வயது 38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.இவருக்கு 25 வயதாக இருக்கும் போது முதல் குழந்தை பிறந்தது, அதன் பின் இவரது முகத்தில் திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது. இந்த தாடியை அகற்ற முற்பட்ட போது, கடுமையான வலியினால் அப்படியே விட்டுவிட்டாராம்.இதனால் கடந்த 19 ஆண்டுகளாகவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகத்தை மறைத்தவாறு சென்று வருவதாகவும்; வீட்டிற்குள்ளும் தன்னுடைய குழந்தைகள் பரிகாசம் செய்வார்கள் என்ற பயத்தில் முகத்தை மறைத்தே வாழ்ந்து வருவதாகவும் அகஸ்டினா தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இவர் முதன் முதலாக முகத்தை மறைக்காமல் வெளியே வந்தபோது, மக்கள் விசித்திரமாக பார்த்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள அபூர்வ குழந்தை!

Image
இறைவனின் படைப்பில் மனித இனம் மிகவும் மேலானது. இந்த மனிதப்பிறவியிலும் விசித்திரமான மனிதப்பிறவிகளையும் இறைவன் படைத்துள்ளான் அகோரமான சில ஊனமுற்ற  குழந்தைகளை காணும் போது எம் கண்கள் கசிகின்றனல்லவா? ஒரு பெண் கருவுற்றிருந்தால் அவளுக்கு சுகப்பிரசவம் கிடைக்க வேண்டும் என நாம் பிராத்திப்பதுண்டு ஆனால் எனவே இனிமேல்  நல்ல ஆரோக்கியமான ,அங்கத்திலே ஒரு குறைபாடுமில்லாத பரிபூரண குழந்தையொன்றை பெற வேண்டும் என்றே இனிமேல்  பிராத்திகக வேண்டும் போலுள்ளது.  ஆம் !வெளிநாட்டில் தாடையில் காதுகளுடன் பிறந்துள்ள இந்த விசித்திரமான குழந்தையை பார்க்கும் போதும் போது கூட அதே அனுதாபங்கள் தான் ஏற்படுகின்றது அல்லவா?  .