Posts

Showing posts from January, 2017

இன்று அதிகாலை சாய்ந்தமருதில் இடம் பெற்ற வாகன விபத்தில்

Image
சாய்ந்தமருது பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு  நோக்கி வந்த கல்முனை டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதி காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள்

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (30) திங்கட்கிழமை நடைபெற்றது.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக்,  பிரதேச செயலாளர் எம்.எச். கனி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்முனை கரையோர பிரதேசத்தில் காணப்படும் சுனாமியால் பாதிப்புக்குள்ளான கட்டட இடிபாடுகளை அகற்றி அப்பிரதேசத்தை அழகுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.   நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர்   றவூப் ஹக்கீமினால் கல்முனை மாநகர பிரதேசத்தின் திறந்தவெளி கரையோரத்தை அழகுபடுத்துவதற்கான வரைபடத்தை அமைப்பதற்கான பணிப்புரை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி கரையோர பிரதேசத்தை அழகுபடுத்தும் வ

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாய்ந்தமருது கல்வி மேன்பாட்டுக்கான கல்விச் செயலனிக் குழு உருவாக்கம்.

Image
சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கிராம அபிவிருத்திச் சங்க பிரிதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், கடந்தவருடம் ஓகஸ்ட் மாதமளவில் நிதிகள் கிடைக்கப் பெற்றமையினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வருடத்திற்காக நிதி ஒதுக்கீடுகள் வருட ஆரம்பத்தில் கிடைக்கப் பெற்றுள்ளமைய

நற்பிட்டிமுனை காபட் வீதி கைவிடப் பட்டுள்ளது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அசமந்தம்

Image
ஆள் பாதி  ஆடை பாதி என்று சொல்வது போல் நற்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது .  கிராமத்தின்  அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு  முக்கால் பகுதிக்கு  காபட்  வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல்  வீதி வரை  உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று  கிடக்கிறது.  கல்முனை மக்கள் வங்கி  முன்பாகவிருந்து  கல்முனை  பொலிஸின் முன்பாக நட்பிட்டிமுனை வரை செல்லும்  2 கி.மீ வீதி  30 மில்லியன்   ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட இரண்டாங்கட்ட வேலைகள்  நடை பெற்று  அதுவும் அரை குறையுடன்  காணப்படுகிறது

அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

Image
அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (2017.01.21) கல்முனையில் நடை பெற்றது. தமிழர் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான  ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு  செலுத்தும் வகையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதை வலியுத்தியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது. தமிழர் கலாச்சார பண்பாடுகள் தடை செய்யப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்ற  இச்சூழ் நிலையில் தமிழ்நாட்டு வாழ் உறவுகளின் போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கல்முனை வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு  திரட்டும் வகையில் இந்த  அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் கல்முனை நகரில் இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக ஒன்று சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து அமைதிப் பேரணியாக கல்முனை நகரை சென்றடைந்து அங்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல

நற்பிட்டிமுனையில் பாரிய அபிவிருத்தி - சமுர்த்தி நடமாடும் வங்கி சேவை திறந்து வைப்பு

Image
நற்பிட்டிமுனையி கிராமத்தில் சமுர்த்தி நடமாடும்  வாங்கி சேவை கட்டிடம் இன்று திறந்து வைக்கப் பட்டது . விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  ஆகியோர்   இக்கட்டிடத்தை  திறந்து வைத்தனர்  திறந்து வைக்கப் பட்ட  இக் கட்டிடம்  கடந்த 2012.05.27 ஆம்  திகதி  ஆயுர்வேத வைத்தியசாலையாக  அப்போது கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சராக இருந்த எம்.எஸ்.சுபையிரினால்  திறந்து வைக்கப் பட்டது. 

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற தைப் பொங்கல் விழா

Image
உழவர் திருநாளான தைப் பொங்கல் விழா அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அம்பாறை,மட்டக்களப்பு  பிராந்திய லயன்ஸ் கழகங்களும் காரைதீவு  இந்து சமய விருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பொங்கல் விழா காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகளுடன் இடம் பெற்றன. காரைதீவு  முச்சந்தியில் அமைந்துள்ள விபுலானந்த அடிகளார் சதுக்கத்திலிருந்து ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலத்தில் உழவர்களை கௌரவப் படுத்தும் வகையில் அவர்களால் பயன் படுத்தப்படும் விவசாய உபகரணங்களுடன் பெருந் திரளான இந்துக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் லயன்ஸ் கழக ஆளுனர் உட்பட கழகங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். விபுலானந்த சதுக்கத்தில் இருந்து  ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலம் ஆலயத்தை சென்றடைந்து நந்திக் கொடி ஏற்றலுடன் கலாச்சார விழுமியங்களுடன் ஆலய முன்றலில் பொங்கல் விழா இடம் பெற்றன. இவ்விழாவில் காரைதீவு  மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்

காணாமல் போன கல்முனை மீனவர்களுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவில்

Image
காணாமல் போய் மீட்கப்பட்ட ஏனைய நான்கு மீனவர்களையும்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்   எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொர தெனிய சகிதம் இன்று (13) வெள்ளிக்கிழமை சந்தித்து அம்மீனவர்களின் நலன் தொடர்பாக கலந்துரையாடியபோது.  

கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரிக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை

Image
கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவருக்கு நஞ்சு மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் தண்டக்கோவை 54 ஆம் பிரிவின் கீழ் 25000 ரூபா தண்டப் பணமும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் கொண்ட தீர்ப்பு கல்முனை மேல் நீதி மன்றத்தில் நீதிபதி நவரத்தின மாறசிங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  அத்திமலை வெள்ளவாய என்ற இடத்தைச் சேர்ந்த  யாப்பா முதியன்சலாகே யாப்பா திலக என்ற பொலிஸ் அதிகாரிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.  மொணறாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது மொணறாகல நிதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமைபுரிந்த இவர்  2013.12.01ம் திகதி அதிகாலை வேளை 2கிலோ 519கிராம் கஞ்சாவை மொணறாகலையிலிருந்து தனது பயணப்பையில் மறைத்து பொத்துவில் பிரதேசத்திற்கு எடுத்து வந்தபோது பொத்துவில் பொலிசாரினால் உல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்து பொத்துவில் நீதிவான் நிதி மன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் .  பொத்துவில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கு 2014.07.25ம் திகதி சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை  செய்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி  நவரத்

காணாமல்போன ஏனைய நான்கு மீனவர்களும் மீட்பு

Image
காணாமல்போய் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நான்கு கல்முனை மீனவர்களும் மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் இன்று (12) வியாழக்கிழமை அதிகாலை மாலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். கல்முனையைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணமல்போன நிலையில் இரண்டு மீனவர்கள் மாலைதீவு மீனவர்களால் கடந்த புதன்கிழமை (4) பாதுகாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.ம்.எம். ஹரீஸ் மாலைதீவு சென்று அந்நாட்டு உப ஜனாதிபதி அப்துல் ஜிஹாத் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப் ஆகியோருடன் கலந்துரையாடி ஏனைய நான்கு மீனவர்களையும் தேடும் பணியினை துரிதப்படுத்தியிருந்தார்.   இதன்விளைவாக மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் குறித்த நான்கு மீனவர்களும் மாலைதீவின் வடக்கு பிரதேச கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.   மீட்கப்பட்டுள்ள இம்மீனவர்களை இன்று (12) மாலை

கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலய வித்தியாரம்ப விழா

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாரம்ப விழா கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் ஏ.எச்.அலிஅக்பர் தலைமையில் நடை பெற்ற விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வருகை தந்த முதலாந்தர  மாணவர்களை இரண்டாந்தர மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்வூகள் இடம் பெற்றதுடன் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும்இ பெற்றௌர்களும் விழாவில் கலந்து கொண்டனர்