Posts

Showing posts from September, 2016

முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய மௌனமும்! தமிழ் தலைமைத்துவங்களுடைய மிரட்டலும் !!

Image
யுத்தம் காரணமாக கடுமையான அழிவுகளுக்கு முகம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  நியாயமான நீதியான தீர்வு  எட்டப் படவேண்டும். அந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே வேளை முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய மௌனமும் தமிழ் தலைமைத்துவங்கள் தங்களுடைய உரிமையைக் கேட்கின்ற போது ஒரு வகையிலான மிரட்டல் பாணியில் வடக்கும் கிழக்கும் இணைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுவதும்  எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்று தேசிய ஜனநாயக மக்கள் கூட்டணியின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.  நல்லாட்சி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவதில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில்  அரசின் தீர்வானது நேரடியாக யுத்தத்தில் பங்குபற்றிய தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமென  சம கால தமிழ் அரசியல்  தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளுக்கு பதில் கூறும் வகையிலும்  இந்த விடயங்களில் முஸ்லிம் தலைமைகளின் மௌனம் முஸ்லிம் சமுகத்துக்கு பாதிப்பபை ஏற்படுத்தும் என்பதை தெளிவு  படுத்தும் வகையிலும்; ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பு  சம்மா

வட, கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை

Image
சுமந்திரனின் கருத்துக்கு  ஹிஸ்புல்லாஹ் பதிலடி வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி, ஏற்றுக் கொண்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது உண்மைக்குப் புறம்பானது எனவும், தலைவர் அஷ்ரப் ஒருபோதும் வட,கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவருடன் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பயணத்தில் ஒன்றாக பயணித்த எனக்குத் தெட்டத் தெளிவாக தெரியும் எனவும் மு.கா. ஆரம்ப கால உறுப்பினரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  “வடக்கு – கிழக்கு இணைப்பு அஷ்ரபால் ஏற்கப்பட்ட ஒன்றே!’’ எனும் தலைப்பில் பிரபல தேசியப் பத்திரிகையொன்றில் இன்று வியாழக்கிழமை முன்பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியாகியிருந்த இச்செய்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது:- வடக்கு – கிழக்கு மாகாணங்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் - பலாத்காரத்தினால் இலங்கை அரசின் பூரண அனுமதியின்றி இரவோடு

தாய்க்கும் மக்களுக்கும் கல்முனையில் மரண தண்டனை

Image
கொலைக் குற்றம் புரிந்த தாய் ஒருவருக்கும் இரண்டு மகன்மாருக்கும் இன்று கல்முனை மேல் நீதி மண்றில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த மூவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது. கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்கவினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப் பட்டன. கடந்த 201.04.05 அன்று ஒலுவிலில் வைத்து 26 வயதான எஸ்.ரீ.முகம்மது சாஹிர் என்பவர்  அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தவர்கள் என்ற குற்றச் சாட்டில் ஒலுவிலைச் சேர்ந்த யூ.எல்.செமிலத்தும்மாஇஏ.எல்.முகம்மது பைஸால்இஏ.எல்.இப்றாஹீம்( றிபான்) என்ற தாய்க்கும் இரண்டு மகன்கன்மார் ஆகியோருக்கு  கல்முனை மேல் நீதி மன்றில் நீதிபதி வீ.சந்திர மணி அவர்களால் 20.07.2010 அன்று  மரண தன்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. குற்வாளிகள் அந்த தீர்ப்பை எதிராக மேல் நீதி மன்றில் மேன் மறையீடு செய்தமையினால் தீர்ப்பில் இருந்த வழுக்கள் ஆராயப்பட்டு மீண்டும் இன்று  கல்முனை மேல் நீதி மன்றில் விசாரணைக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் எடுக்கப் பட்டபோது மூவரும் கொலையாளிகள் என தீர்ப்பு வழங்கி மூவருக்

கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு புதிய அலுவலக அடையாள அட்டை அறிமுகம்

Image
கல்முனை வலயக்  கல்வி அலுவலக  உத்தியோகத்தர்களுக்கு  புதிய அலுவலக  அடையாள  அறிமுகப் படுத்தப் பட்டு  விநியோகிக்கப் பட்டது. வலயக் கல்விப்   பணிப்பாளர் ,எம்.எஸ்.அப்துல்    ஜலீல்  தலைமையில் இடம் பெற்ற  நிகள்வில்  வலயக் கல்வி அலுவலக  கணக்காளர் ,மற்றும் பிரதிக்கல்விப்  பணிப்பாளர்கள்  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்  பொது மக்கள் தினமான புதன் கிழமைகளில் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தல் பிரகார சீருடை மற்றும் அடையாள அட்டை   கட்டாயம் அணிய வேண்டும் என வலயக் கல்விப்  பணிப்பாளரினால் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. 

கொரிய நாட்டு வைத்தியர்கள் கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை -வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆளுமை

Image
கொரிய நாட்டு  வைத்தியர்கள்  கல்முனை வைத்தியசாலையில்  சத்திர சிகிச்சை  -வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆளுமை  கொரிய நாட்டைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் இலவச கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகள் நடாத்தப் பட்டு வருகின்றன. கொரிய நாட்டு சூன் சுன்ஹயங் பல்கலைக் கழக வைத்தியசாலை கொன் குளோபல் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து இலவச வைத்திய சேவைக்கு இலங்கை வந்துள்ள  10பேர் அடங்கிய சத்திர சிகிச்சை நிபுணத்துவக் குழு வைத்தியர்கள் கல்முனை ஆதார வைத்திய சாலையில் தங்கியிருந்து நேற்றும் (28) இன்றும் (29) நாளையும்(30) இந்த இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர். சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்களும், பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர்களும் இக்குழுவில் அடங்கியுள்ளனர். சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி. பைஸல் காஸிம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இவ் வைத்தியர் குழு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் வரட்சி

Image
அம்பாறை மாவட்டத்தில்  நிலவுகின்ற வெப்பமான காலநிலையினால் நீர்த்தட்டுப்பாடு நிலவுவதுடன் கால்நடை பண்ணையிலிருந்து பெறப்படுகின்ற பாலின் அளவு ஜம்பது வீதமாக குறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக மழைவீழ்ச்சி கிடைக்காததன் காரணத்தால் கால்நடை பிரதேசமான வட்டமடு, சாகாமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் புற்கள் வறண்டு பாலைவனமாக காட்சி தருகின்றன. மலைப்பிரதேச காடுகள் வரண்டு காணப்படுவதால் வன ஜீவராசிகள், நீர், உணவு தேடி பல திசைகளிலும் அலைந்து திரிகின்றன. காட்டு யானைகள் வயல் பிரதேசங்களில் நுழைந்து சிறு ஓடைகளில் உள்ள சொற்ப அளவு நீரை உறுஞ்சிக் குடித்து வருகின்றன இதே வேளை 2016 - 2017ம் ஆண்டுக்கான பெரும்போக செய்கைக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்ள விவசாயிகள் மழையினை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இம்முறை பெரும் போக நெற்செய்கை அடுத்த மாதம் ஒக்டோபர் இறுதிப் பகுதியிலே இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Image
சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   இது தொடர்பான ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.   15 வீத வற் வரிக்கு அமைவாக சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும்; என்று அமைச்சர் கூறினார்.   ஏற்கனவே புகையிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 90 வீதம் வரை வற் வரியை அதிகரிக்கும் யோசனை பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களை ஆராய்வதற்கென அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உபகுழுவின் அறிக்கைக்கு அமைய அமைச்சரவையில் ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

நற்பிட்டிமுனை NFC வி.கழகம் வெற்றி பெற்றது.

Image
நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில்     நற்பிட்டிமுனை NFC வி.கழகம் வெற்றி பெற்றது. நற்பிட்டிமுனை ITS பௌண்டேசனால் நடாத்திவந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டி நற்பிட்டிமுனை இலவன் ஸ்டார் வி.கழத்தை எதிர்த்து நற்பிட்டிமுனை NFC வி.கழகம் விளையாடியது. இதில்  நற்பிட்டிமுனை NFC வி.கழகம் முதல் இடத்தை தட்டிக்கொண்டது.  இரண்டாம் இடத்தை இலவன் ஸ்டார் வி.கழகமும் , மூண்றாம் இடத்தை இஸ்றின் வி.கழகம் தட்டிக்கொண்டது.   முதல் இடத்தை தட்டிக்கொண்ட கழத்திற்கு 10000/- வும் , இரண்டாம் இடத்தைப் பெட்ரா கழகத்துக்கு    5000/-வும்,  மூண்றாம் இடத்தை பெற்ற  கழத்திற்கு 3000/-வும்  பரிசாக வழங்கப் பட்டன . இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்கு மாகாண பிரதான முகாமையாளர்  ஏ.எல் சித்தீக், கல்முனைச் சாலை முகாமையாளர் வீ. ஜஹ்பர்   உட்பட  முக்கியஸ்தர்கள் பலரும் இந்தப்  போட்டியில்  கலந்து கொண்டனர் 

மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா

Image
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக  பணியாற்றும் திருமதி ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம்   நட்பிட்டிமுனையில் நடை பெறவுள்ளது. நட்பிட்டிமுனை நெடா அமைப்பின் அனுசரணையுடன்  நட்பிட்டிமுனை சிவசக்தி  மகா வித்தியாலய  அதிபர் எஸ்.சபாரெத்தினம்  தலைமையில்  ஞாயிற்றுக் கிழமை (25) மாலை நட்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடை பெறும் . நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,ரீ.கலையரசன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ,கல்முனை வலயக்  கல்வி அலுவலக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் ,நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  டீ.மோகனகுமார்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். மாகாண  சபை உறுப்பினர்கள் இருவர் முன்னிலையிலும் நூல் வெளியீடு இடம்பெறுவதுடன்  நூலின் அறிமுகவுரை  தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சஞ்சீவி குமார் நிகழ்த்துவார் . தென் கிழக்குப் பல்கலை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Image
( அகமட் எஸ் . முகைடீன் , ஹாசீப் யாசீன் ) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலய   சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது . அல் - அஸ்ஹர் வித்தியாலய   அதிபர் ஏ . எச் . அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச் . எம் . எம் . ஹரீஸ் , கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் . எஸ் . அப்துல் ஜலீல் , விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி . எம் . வை . அறபாத் , கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ . எல் . சகாப் , அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ . பாவா , கே . எம் . தௌபீக் , ஏ . எம் . றினோஸ் , கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பறகதுல்லாஹ் , கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் , ஆசி

பிரதி அமைச்சர் ஹரீஸ் இனம்,மதம் பார்க்கவில்லை திறமைக்கு மதிப்பளித்தார்

Image
( அகமட்   எஸ் .  முகைடீன் ,  ஹாசீப்   யாசீன்யு.எம்.இஸ்ஹாக்  ) கடந்த   வருடம்   நடைபெற்ற   உயர்தரப்   பரீட்சையில்   கல்முனை  கார்மேல்   பற்றிமா   கல்லூரி   மாணவன்   மயில்வாகனம்   சாறுஜன்  விஞ்ஞானப்   பிரிவில்   சகல   பாடங்களிலும்  ' ஏ '  தரச்   சித்தியினைப் பெற்று   மாவட்ட   மட்டத்தில்   முதல்   இடத்தை   பெற்றமையினை  பாராட்டி   கௌரவிக்கு   முகமாக   மெஸ்றோ   அமைப்பினால்  மடிகணினி   வழங்கி   வைக்கும்   நிகழ்வு   கல்லூரி   வளாகத்தில்   இன்று (20)  செவ்வாய்க்கிழமை   நடைபெற்றது . கல்லூரியின்   பிரதி   அதிபர்   எம் . சுவேந்திர   ராஜா   தலைமையில் இடம்பெற்ற   இந்நிகழ்வுக்கு   ஸ்ரீலங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்   பிரதித் தலைவரும்   விளையாட்டுத்துறை   பிரதி   அமைச்சரும்   மெஸ்றோ  அமைப்பின்   ஸ்தாபகத்   தலைவருமான   சட்டத்தரணி  எச் . எம் . எம் . ஹரீஸ்   பிரதம   அதிதியாக   கலந்து   கொண்டு  இம்மடிகணினியை   வழங்கி   வைத்தார் .  இந்நிகழ்வில்   கல்முனை   வலய   பிரதிக்கல்விப்   பணிப்பாளர்  எஸ் . எல் . அப்துல்   றஹீம் ,  மெஸ்ரோ   அமைப்பின்   தலைவர்   சிரேஷ்ட சட்டத்தரணி   ஏ . எம் . ந

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஏ.மஜீதுக்கு பிரியாவிடை

Image
தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  சபையில்  நீண்ட காலமாக கடமையாற்றி  ஓய்வு பெற்ற  நிலைய  பொறுப்பதிகாரி  எஸ்.எல்.ஏ.மஜீத்  அவர்களுக்கு  பிரியாவிடை  வைபவம் இடம் பெற்றது . இவர்  நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  காலத்தில்  இவரின் கீழ்  பணி  புரிந்த  சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் எட்டுப்  பேர்   இணைந்து  இந்தப் பிரியாவிடை வைபவத்தை  ஏற்பாடு செய்தனர் . மானி  வாசிப்பாளர்  எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் ஒலுவில் கிறீன்  வில்லா  விடுதியில் கடந்த சனிக்கிழமை (17.09.2016) நடை பெற்ற  பிரியாவிடை வைபவத்தில்  எம்.எஸ்.எம்.கடாபி (எழுதுனர் ), ஏ.எஸ்.பாரிஸ் (மானி வாசிப்பாளர் ),எஸ்.எம்.ஹனூஸ் (மானி வாசிப்பாளர் ),ஏ.எச்.எம்.புவாட் (மானி வாசிப்பாளர் ),எம்.ஏ.எம்.இல்யாஸ் (மானி வாசிப்பாளர் ),எம்.ஐ.எம்.ஹாரிஸ் (மானி வாசிப்பாளர் ),எம்.எஸ்.றியாஸ் (மானி வாசிப்பாளர் ) ஆகியோரும் அவர்களின் குடும்ப  உறுப்பினர்களும்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர். தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  சபை கல்முனை  நிலைய  பொறுப்பதிகாரியாகவும்  சாய்ந்தமருது   நிலைய    பொறுப்பதிகாரியாகவும்  கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எல்.ஏ.மஜீத்  மற்றும் அவரது

சம்மாந்துறை ஊடகவியலாளர் அன்சாரின் தாயார் காலமானார்

Image
ஊடக நண்பர்  சம்மாந்துறை சி.எம்.அன்சாரின் தாயார்  இன்றிரவு  சம்மாந்துறையில் காலமானார் . அன்னாரது ஜனாஸா  நாளை செவ்வாய்க்கிழமை (20) காலை 9.00 மணிக்கு சம்மாந்துறையில் நல்லடக்கம்  செய்யப் படும் 

மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்று

Image
மண்டூர் முருகன் ஆலய  வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்று   தீர்த்தோற்சவம்  இடம் பெற்றது .முருகப் பெருமான்  வெளி வீதி உலா வருவதையும் திரண்டு செல்லும் பக்தர்களையும் காணலாம் 

வேதாந்தியின் வித்தியாச தியாக நாள்

Image
அகதிகளான நமது சமுகமும் அடிமைகளான நமது தலைமயும் இனத்தை தொலைத்த இளைஞர் கூட்டமும் திகத்தின் சுகத்தை விரும்பும் மக்களும் எம்மைச் சூழ்ந்த அறியாமைகளும் எதற்கும் நடுங்கும் எமது மனங்களும் நம்மோடு இருக்கும் நாட்கள் வரைக்கும் நமக்கும் தியாகத் திருநாள் உண்டோ - வேதாந்தி -

கல்முனையில் இன்று வெளியிடப் பட்டுள்ள பெருநாள் வாழ்த்து வாசகம்

Image
"தேசிய பட்டியல் எமக்கான முகாந்திர முதிசம் இல்லை என்றால் தலை புரளும் " "தேசிய பட்டியல் தந்தால்  ஹக்கீம் செங்கோல் சாணாக்கியன் தேசியம் பற்றி சிந்தித்தால்  ஹக்கீம் கொடுங்கோல் அரக்கன் " "கிழக்கிற்கு தலைமை வேண்டிய வன்னிக்  கரடியை வழி  படுகிறோம் காட்டிக் கொடுப்போர் இனங்காணப் படுவர் "    உரிமை  - ஈத் முபாறக் SLMC (AA)

பெருநாள் வாழ்த்துக்கள்

Image
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம்.ஹலீம்   எம்.எஸ்.அப்துல் ஜலீல் , வலயக் கல்விப் பணிப்பாளர்  கல்முனை