Posts

Showing posts from October, 2016

காலத்திற்கேற்ற நவீன அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும்

Image
முஸ்லிம் கவுன்சில் கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன சிறுபான்மைச் சமூகங்களது நலன்களையும் உள்வாங்கி நவீன அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். தென் ஆபிரிக்கா , கென்யா , நேபாளம் , கிழக்கு டிமோர் ஆகிய நாடுகளில் பன்மைத்தன்மை பேணுதல் , சமூகநீதி , சமத்துவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்த அரசியலமைப்புத் திட்டம் தயாரிக்கப்படும். முஸ்லிம் இயக்கங்களின் கட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்பாடுகள் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது , அரசியல் யாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு குழுக்களும் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அடுத்த இரு வாரத்திற்குள் இவை மொழி  பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். வழி காட்டல்குழு பிரதமர் தலைமையில் செயற்பட்டு வருகின்றது. சகல கட்சிக

மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.சாலிஹ் வியாபார நிர்வாக முதுமானி பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து பட்டச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.சாலிஹ் கொஸ்டாரிக்கா(மத்திய அமெரிக்கா)சான் யூவான் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமானி பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து பட்டச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.சர்வதேச தொழில் கற்கைகளுக்கான மதிப்பீட்டு நிறுவனத்தின் வர்த்தகமானி மற்றும் முதுமானி கற்கைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை(28-10-2016)கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட சுவிட்சிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  தூதுவர் கலாநிதி ஹெயின்ஸ் வொக்கர் நெடர்கோணிடமிருந்து ஏ.ஆர்.எம்.சாலிஹ் பட்டச்சாண்றிதழைப் பெற்றுக் கொண்டார். இவர்; கல்முனை பிரதேச செயலகத்தில் திவிநெகும சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளராக் கடமையாற்றுகின்றார்.மருதமுனை கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும், மருதமுனை  3ஆம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் இணைத் தலைவராகவும்க,ல்வி மற்றும் சமூக சேவைகளுக்கானஅமைப்பின் வாழ்வாதாரப் பணிப்பாளராகவும்  மேலும் பல அமைப்புக்களில் பல பதவிகளையும் வகித்துக் கொண்டு சமூக சேவையிலும்

குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Image
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி அம்ரா நஸார் 172 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் மாணவர்களிடையே 13 வது இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி உமர் லெப்பை முஹம்மத் நஸார் பாத்திமா அஸீமா தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தத்தின் பங்காளர்கள். முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.

Image
கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தற்போதைய அரசினால் இன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு முயற்சிகள் முழுமையாக முஸ்லிம் சமூகத்தினை புறக்கணித்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தத்தின் பங்காளர்கள். முஸ்லிம்களே இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான தரப்பினராகும். முஸ்லிம்களை பின்தள்ளிவிட்டு ஒரு தீர்வினை நோக்கிய அரசின் போக்கானது வருத்தத்திற்குரியதாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்;டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்கிஸ்சை பிர்ஜாயா ஹோட்டலில் இடம்பெற்ற பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார். வடக்கில் பல்லாயிரம் உயிர்களை காவுகொண்ட யுத்தத்திற்கு காரணமான அத்தனை காரணிகளும் இன்று கிழக்கினை ஆக்கிரமித்து வருகின்றன. ஒரு புறம் நடைபெற்ற யுத்தத்திற்கான தீர்வு முயற்சிகள் மறுபுறம் இன்னொரு யுத்தத்திற்கான முஸ்தீபுகள். மிகவும் கொடுமையான ஒரு காலத்தினை நோக்கி கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் சமூகங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இன்று இரண்டு

உணவுக் கால்வாயில் மாட்டிக் கொண்ட பூட்டூசி! சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் மற்றுமொரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார்!!

Image
யு.எம்.இஸ்ஹாக்  உணவுக் கால்வாயில் மாட்டிக் கொண்ட  பூட்டூசி சத்திர சிகிச்சை இன்றி அகற்றப் பட்ட சம்பவம் ஒன்று  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்   வசதிகள் குறைந்த சம்மாந்துறை வைத்திய சாலையில் மற்றுமொரு பர பரப்பை  ஏற்படுத்தியுள்ளார்  இந்த சம்பவத்தை மக்கள் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது  சம்மாந்துறையை சேர்ந்த  43 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக  வீட்டில்  இரவு நேரத்தில்  பெனடோல்  மாத்திரை  சாப்பிடுவதற்கு  முற்பட்டு  மேசையில் இருந்த  மாத்திரையை  விழுங்கி விட்டு  உறங்கி உள்ளார் .  இரண்டு நாட்களின் பின்னர்  குறித்த நபருக்கு  வயிற்று உபாதை ஏற்பட்டு  சாப்பிட முடியாமல்  வாந்தி வரத்தொடங்கியுள்ளது. அதன் பின்னர் குறித்த பெண் சம்மாந்துறை  அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  சிகிச்சை பெற்ற  போது  இவரை  பரிசோதித்த  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்  இவரது உணவுக்கால்வாயில் ஒரு திண்மப் பொருள் ஒட்டிக் கொண்டிருப்பதையும்
Image
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கான  விருது வழங்கும் விழா  நேற்று  ஞாயிற்றுக் கிழமை (23)   ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன  தலைமையில்  கண்டி தர்மராஜ  கல்லூரி மண்டபத்தில்  நடை பெற்றது    கல்வி அமைச்சர்  அகிலாவிராஜ் காரியவசம் , கல்வி ராஜாங்க அமைச்சர்  வேலுசாமி ராதாகிருஷ்ணன்   ஆகியயோரின்   அழைப்பின் பேரில்மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் எக்கநாயக்க அமைச்சர்களான லக்ஸ்மன்  கிரியெல்ல ,ரவூப் ஹக்கீம் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள்  உட்பட  கல்வி  திணைக்களப்  பணிப்பாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள் ,அரசியல் பிரமுகர்கள்  என பலர்  கலந்து கொண்டனர் . தமிழ் மொழி தினப் போட்டியில் முதலிடம் பெற்ற  மாணவர்களுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகள்  நினைவு சின்னமும் சான்றிதழும் வழங்கி வைத்ததுடன்  முதலாமிடம் பெற்ற  நிகழ்வுகளும் அங்கு  அரங்கேற்றப் பட்டன

அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா

Image
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கான  விருது வழங்கும் விழா  நாளை  ஞாயிற்றுக் கிழமை (23)   கல்வி அமைச்சர்  அகிலாவிராஜ் காரியவசம் , கல்வி ராஜாங்க அமைச்சர்  வேலுசாமி ராதாகிருஷ்ணன்   ஆகியயோரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன  தலைமையில்  கண்டி தர்மராஜ  கல்லூரி மண்டபத்தில்  நடை பெறவுள்ளது. மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் எக்கநாயக்க உட்பட  மாகாண கல்வி அமைச்சர்கள் ,கல்வி  திணைக்களப்  பணிப்பாளர்கள்  என பலர்  கலந்து கொள்ளவுள்ளனர் .

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு மாத விழிப்புணர்வு

Image
நட்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  மாணவர்கள் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு  ஊர்வலமொன்றை   ஏற்பாடு செய்து  நேற்று மாணவர்களும் ஆசிரியர்களும் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக செல்வதைக்  காணலாம் 

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற வறுமை ஒழிப்பு தினம்

Image
வாழ்வின் எழுச்சி  திணைக்களத்தினால்  இவ்வாண்டு முன்னெடுக்கப் படும்  வாழ்வாதார  செயற்றிடத்தின் கீழ்  திவிநெகும  பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்றிருக்கும்  இளைஞர்களுக்கான  தொழில் வழி காட்டல்  பயிற்சி வழங்கப் பட்டு அவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் , வறிய  குடும்பங்களுக்கு பலன்தரும்  மரக்கன்றுகள் வழங்கல் , திரிச பியச  திட்டத்தில் நிர்மாணிக்கப் பட்ட வீடு கையளிப்பு, சுயதொழிலுக்கான கடன் வழங்கல்  போன்ற நிகழ்வுகள்  இடம் பெற்றன . இளைஞர்களுக்கான இந்தப்  பயிற்சி நெறி  ஹை டெக்  லங்கா நிறுவனத்தினால்  வழங்கப் பட்டது .  இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட  கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  30 இளைஞர்கள்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்திற்கு அனுப்பி  வைக்கப் பட்டு ஒரு மாத கால  கனரக வாகனப் பயிற்சியை முடித்து வந்துள்ளனர்  இந்த  நிகழ்வு  கல்முனை பிரதேச செயலகத்தில்  திவிநெகும தலமைப் பீட முகாமைத்துவ  பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம் பெற்ற  போது  பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி  பிரதம அதிதியாகவும்  மற்றும்  திவிநெகும  அதிகாரிகளும்   பயிற்சி பெற்ற  இளைஞர்களும், வாழ்வாதார உதவி பெறுவ

கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த வலய சமாதான தின விழா

Image
உலக சமாதான தினத்தைக் கொண்டாடும் முகமாக கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த வலய சமாதான தின விழா   திங்கட் கிழமை (17) நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் நடை பெற்றது.  கல்முனை கல்வி வலயத்துக்கான இன நல்லிணக்க மற்றும் சமாதான கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.ரஸீன்  வழி காட்டலுடன்    கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்   கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்   பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  நிகழ்வில்  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான  எஸ்.எல்.ஏ.றஹீம்., பீ.எம்.வை.அரபாத் ,திருமதி .ஜிஹானா அலிஹ்ப்  ஆகியோரும் , கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்ஷர் ,  கோட்டக் கல்விப்  பணிப்பளர்களான எஸ்/எல்.எம்.சலீம் ,பீ.கே.கந்தசாமி ,ஏ.எல்.சக்காப் ,திருமதி .ஆர்.திரவியராஜா  ஆகியோரும்  உதவிக்கு கல்விப் பணிப்பாளர்களான  கே.வரதராஜன்,எம்.எம்.கலீல்.ஏ.ஏ.சத்தார் ,ஏ.எல்.எம்.ஜஹாங்கீர்  உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , கல்முனை வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளின்  அதிபர்கள் ,மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்