கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கான  விருது வழங்கும் விழா  நேற்று  ஞாயிற்றுக் கிழமை (23)   ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன  தலைமையில்  கண்டி தர்மராஜ  கல்லூரி மண்டபத்தில்  நடை பெற்றது 

  கல்வி அமைச்சர்  அகிலாவிராஜ் காரியவசம் , கல்வி ராஜாங்க அமைச்சர்  வேலுசாமி ராதாகிருஷ்ணன்   ஆகியயோரின்   அழைப்பின் பேரில்மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் எக்கநாயக்க அமைச்சர்களான லக்ஸ்மன்  கிரியெல்ல ,ரவூப் ஹக்கீம் ,மாகாண அமைச்சர்கள் ,உறுப்பினர்கள்  உட்பட  கல்வி  திணைக்களப்  பணிப்பாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள் ,அரசியல் பிரமுகர்கள்  என பலர்  கலந்து கொண்டனர் .

தமிழ் மொழி தினப் போட்டியில் முதலிடம் பெற்ற  மாணவர்களுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகள்  நினைவு சின்னமும் சான்றிதழும் வழங்கி வைத்ததுடன்  முதலாமிடம் பெற்ற  நிகழ்வுகளும் அங்கு  அரங்கேற்றப் பட்டன










Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது