Posts

Showing posts from January, 2013

துருவம் ஊடக வலையமைப்பின் இருநாள் செயலமர்வு!

Image
துருவம் ஊடக வலையமைப்பு, சிம்ஸ் கெம்பஸ் உடன் இணைந்து நடாத்திய பிரதேசத்தின் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான இருநாள் ஊடக செயலமர்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில் பல்வேறு தலைப்புக்களில் தலைசிறந்த வளவாளர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடாத்தப்பட்டது. முதல்நாள் அமர்வில் நேர்காணல் என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜ், பத்திரிகை செய்திக் கட்டமைப்பு என்ற தலைப்பில் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், பத்தி எழுத்து என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, செய்தி, அறிவிப்புக்கலை நுணுக்கங்கள் என்ற தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சனுஸ் முஹம்மது பெறோஸ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள். இரண்டாம் நாள் செயலமர்வில் சமூக வலையமைப்பும், ஊடகத் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா, ஊடகத்தில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் வீ.எஸ். இந்திரகுமார், அச்சு ஊடகத்துறையும் சட்டமும் என்ற தலைப்பில்

இன்னும் சற்று நேரத்தில் பரீட்சைபெறுபேறு

Image
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்னும்  சற்று நேரத்தில்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தளமான www.doenets.lk  என்ற முகவரியில் பார்வையிட முடியும். உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் நாளைய தினம் அஞ்சல் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

தந்திச்சேவை இடைநிறுத்தப்பட மாட்டாது

Image
தபால் சேவைகள் அமைச்சர் தகவல்! தந்திச்சேவையை (Telegrams) இடைநிறுத்துவது பற்றி இதுவரை எவ்வித தீர்மானமும்   எடுக்கவில்லை என தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க  தெரிவித்தார். தந்திச்சேவை எதிர்காலத்தில் சில மாற்றங்களுடன்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தந்திச்சேவைக்கான நாடுமுழுவதிலும் 1018 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தற்சமயம் தபால் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தந்திச்சேவையில் மாற்றங்கள் இடம் பெறுமா? என்பது குறித்து நேற்று தபால் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ஜீவன் குமாரதுங்க இத்தகவலைத் தெரிவித்தார். 

பட்டதாரிகள் 52000 பேருக்கும் அடுத்த மாதம் நிரந்தர நியமனம்

Image
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி 52,000 பட்டதாரிகளுக்குமான நிரந்தர நியமனம் பெப்ரவரியில் வழங்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். ஐ. தே. க. மற்றும் ஜே. வி.பியினரின் பொய்ப்பிரசாரங்கள் பயனற்றவை என தெரிவித்த அமைச்சர், கடந்த பெப்ரவரியில் ஆரம்பித்த பட்டதாரிகள் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கை கள் இந்த 2013 பெப்ரவரியுடன் முழுமையாக நிறைவுபெறும் எனவும் தெரிவித்தார். பயிற்சிப் பட்டதாரிகளான 52,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் உறுதியான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடமில்லையென ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. எம்.பிக்கள் பல்வேறு விமர்சனங்களையம் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பட்டதாரிகள் சங்கத்தின் நிகழ்வையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன அண்மையில் சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றபட்டதாரிகள் சங்க நிகழ்வில் ஜனாதிபதியினால் மூவருக்கு  நிரந்தர நியமனங்களுக்கான ஒரு அடையாளமாகவே இக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனைய அனைவருக்கும் எதிர்வரும்

குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை! உடனே அறிவியுங்கள்..!!

Image
கைக்குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபை இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளை பெற்று சிறுவர் பராமரிப்பு இல்லங்களிடம் ஒப்படைக்கப்படும். சிலர் குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் குழந்தைக்கு மயக்க மருந்தை ஊட்டி பரிதாபமாக காண்பித்து பிச்சை எடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மாஅதிபர் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் இவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். குழந்தைகளை சுமந்தவாறோ, சிறுவர் சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களைக் கண்டால்  1929  என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் கைக்குழந்தையை சுமந்தவாறோ சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவ

10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6பிரதி அமைச்சர்கள் நியமனம்

Image
புதிதாக 10 அமைச்சர்கள்- 2 திட்ட அமைச்சர்கள்- 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில்; இன்று திங்கட்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர் . அமைச்சர்கள் :     பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா     சுற்றாடல் துறை  - சுசில் பிரேமஜயந்     மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி     தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க     முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன     வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா     உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்     கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க     தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்     சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன திட்ட அமைச்சர்கள் :     நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்     ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்கள்:     எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி     எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி     பைஸர் முஸ்தபா – முதலீட்டு

ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்

Image
கல்முனையின் உள்ளுர் அரசியல் வாதி ஒருவரின் செயலாளா் எனக்கூறி  0772374735  எனும் தொலைபேசி மூலம் கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானை அச்சுறுத்தியுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் தெடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் கல்முனைக்குயின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியதோடு பல வீடுகளுக்குள்ளும் நீர் நிரம்பியதையடுத்து மக்கள் இடம் பொயர்ந்துள்ளனா்.  இவ் அவல நிலையை படம்பிடித்து செய்தி சேகரிக்க இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளா் றம்ஸான் சென்றுள்ளார்.  அவ்வேளையில்  எந்த வீதியால் செல்வது என நின்று கொண்டிருந்த குறித்த அரசியல் வாதியின் ஆதரவாளரிடம் பாருங்கள் எமது ஊரி நிலையை. இன்னும் சிலகாலங்களில் நடப்பதற்குக் கூட கல்முனையில் வீதி இருக்குமோ தெரியாது. அருகில் உள்ள சாய்ந்தமருது மருதமுனை ஊர்களைப்பாருங்கள் என்ன அழகாக வீதிகளை அமைத்துள்ளார்கள் என்று கூறி இந்நிலைமை பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறுங்கள் என்றதுடன் அவா் சேகரித்த செய்தி புகைப்படங்களையும் அனுப்பிவிட்டார். அச்செய்தி இணையத்தளத்தில் பிரசுரமாகியும்விட்டது. பிற்பகள் 5.50 மணியளவில் தொலைபேசியில் தான் குறித்த அரசியல்வாதியின் செயலாளா் எனக் கூறி அச

ரிசானாவின் பெற்றோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Image
சவுதி அரேபியாவில் ஷரிஆ தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் பெற்றோர்களான முகம்மது நபீக் மற்றும் செய்யது பரீனா ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் சங்கத்தால் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி ரிசானாவின் பெற்றோர்களுக்கு கையளித்தார். அமைச்சர் டிலான் பெரேரா- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். தௌபீக்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர் இதன்போது ரிசானா நபீக்கின் பெற்றோரிடம் 10 இலட்சம் ரூபா நிதியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் தொழில் வாய்ப்புக்கான நியமன கடிதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கலாசார மண்டப திறப்பு விழா

Image
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மைமுனா அஹமட் கலாச்சார மண்டபத்தினை  நீதிபதி ஹாஜியானி மைமுனா அஹமட் திறந்து வைத்தார். இத்திறப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹாசீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர். என்.ஆரீப், சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றகீம் மற்றும் ஆசிரியர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர். இக்கலாச்சார மண்டபத்தினை  நீதிபதி ஹாஜியானி மைமுனா அஹமட் அவர்களின் செலவில் நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஸானா குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு

Image
ரிஸானா நபீக்கின் குடும்பத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை சந்திக்கவுள்ளார். இது தொடர்பான அழைப்பு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ரிஸானாவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பு தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதை ரிஸானாவின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நாளை மாலை  இடம்பெறவுள்ள இச் சந்திப்பில் ரிஸானா நபீக்கின் குடும்ப உறுப்பினர்கள் சகலரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாதுக்கு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத் விருதுகள்

Image
கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான முகாமைத்துவ, திண்மக்கழிவகற்றல் போட்டி, சிறந்த நூலகங்களை நடாத்திய சபைகள் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கலந்துகொண்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அம்பாறை  மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாதுக்கு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்  விருதுகள் வழங்குவதை காணலாம் 

Sheik Yusuf Mufthee Jumma Bayan (Rizana Nafeek)

கல்முனை மாநகர சபை பிரியாவிடை வைபவம்

Image
கல்முனை  மாநகர சபையில் கடமை புரிந்து ஒய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு அண்மையில் பிரியாவிடை வைபவம்  இடம்பெற்றது .இதில் மாநகர முதல்வர் ,ஆணையாளர்,கணக்காளர் ,பொறியியலாளர் ,நிருவாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர் .

உடன் அமுலுக்கு வரும்வகையில் பிரதம நீதியரசர் நீக்கம்!

Image
 பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அப்பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குவதற்கான தீர்மானத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கைச்சாத்திட்டார்.   அரசியலமைப்பின் 107(2) பிரிவின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டளையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி செயலகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட உதவிச்செயலாளர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் எடுத்துச்சென்று கையளித்தனர். பிரதம நீதியரசரை நீக்குமாறு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு தானும் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

உதவி நல்க விரும்பினால்

Image
 றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது அவல நிலைமையை போக்கும் வகையில் பொருளாதாரரீதில் உதவுவதற்கு தாம் விரும்புவதாக எம்மோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் கூறியதுடன் றிஸானாவின் குடும்பத்தவர்களது வங்கிக் கணக்கு விபரத்தை  வழங்குமாறும் கேட்டிருந்தனர். அவ்வாறு மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தவர்களது நலனில் அக்கறையுள்ள சகோதரர்களுக்காக பின்வரும் வங்கிக் கணக்கு விபரம் வழங்கப்படுகின்றது. வங்கிக் கணக்கு விபரம்: Mr.& Mrs. M.S.M. NAFEEK (Joint Account )  A/C No:- 191020023213  HATTON NATIONAL BANK,  MUTUR BRANCH

ரிசானா நபீக் நாடு திரும்பவில்லை மண் மறைந்தார்

Image
மரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார். எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார். குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேற்று புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.  ரிசானாவின் கழுத்து வெட்டப்பட்ட கொடுரக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க தைரியமற்றவர்கள் தயவு செய்து வீடியோவை கிளிக் செய்யவேண்டாம். 

மூதூர் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்புவார்: சவூதி அரேபிய தூதுவர்

Image
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நீதி அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக நீதி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பணிப்பெண் ரிஸானா நபீகின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதிற்கு அனுப்பி வைத்த கருணை மனு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருடனான சமாதான முயற்சிகள் பயனளிக்கும்.  இதன் காரணமாக ரிஸானா விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உண்டு. மனிதாபிமான அடிப்படையிலான  ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமாக கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் விஷேட குறிப்புகள