Posts

Showing posts with the label Politics

"துள்ளுற மாடு பொதி சுமக்கும்" ! பிள்ளையானுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸீர் !!

Image
கிழக்கு மாகாண சபையில் 2008 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப்போன்ற நிதி வீண்விரயம் தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற நிதி வீண்விரயம் குறித்த விடயங்கள் மிக விரைவில் அம்பலத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய ஆட்சியின் பாரபட்சமற்ற வெளிப்படை தன்மைகொண்ட ஒதுக்கீடுகளை ஒப்பிட்டு நோக்கும் சந்தர்ப்பம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். மாகாண சபையின் ஜுன் மாதத்திற்கான அமர்வில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபத்தி தலைமையில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது நிதியொதுக்கீட்டுச் சமர்சீர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரட்ணம் சுட்டிக்காடினார். இதேபோன்று நிதியொதுக்கீடுகளில் பாரபட்சம் மற்றும் புறக்கணிப்பு இடம்பெறுவதாக உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது

இரு புதிய பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Image
இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (21) பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர். மின்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரமும் இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத்தேர்தலா? முதலில் எதனை நடத்துவது? இன்று தீர்மானிக்கப்படும்

Image
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பதனை இன்று வெள்ளிக்கிழமை ஆளும் கட்சி தீர்மானிக்கும் என சிங்கள பத்திரிகையொன்று ö சய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு  ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்படவுள்ளன.  எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

Image
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் நி ஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வினால்  கொண்டுவரப்பட்ட  கண்டன பிரேரணை  ஏக மனதாக  நிறைவேற்றப்பட்டு  கண்டன உரை நிகழ்த்தப்பட்டது. (கண்டன பிரேரணையின் போது ஆற்றிய உரையின் சுருக்கம் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்) இங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ், இன்று பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் அடிக்கடி முஸ்லிம்கள் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்றும்   குறிப்பாக பொதுபலசேனா அமைப்பினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோல் முஸ்லிம்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் இணைந்து செயற

கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்க வேண்டும்

Image
கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்குவதே பொருத்தம் என  நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டுள்ளனர். கல்முனை தொகுதியில் பெரும் பான்மை  ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை கொண்ட நற்பிட்டிமுனை கிராமம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப் படுவதாகவும் தேர்தல் காலங்களில் ஆசை காட்டி மோசம் பண்ணுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இருந்த சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இன்னும் எவரும் நியமிக்கப் படவில்லை .எனினும் பலர் ஊர் ரீதியாக அப்பதவியை பெற முயற்சிகின்றனர். கல்முனை மாநகர சபையில் கல்முனை குடி,மருதமுனை, சாய்ந்தமருது  ஊர்களை சேர்ந்தவர்கள் முதல்வர்களாகவும் ,பிரதி முதல்வர்களாகவும் இருந்து வந்துள்ளனர். எனினும் நற்பிட்டிமுனை கிராமத்துக்கு முதல்வர் பதவியை வழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் பிரதி முதல்வர் பதவியையாவது வழங்க வேண்டும் என அந்தஊர் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்த விடயத்தில் எமது கிராமத்துக்கு கல்முனை தொகுதி பாராளும

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Image
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம்  இன்று முற்பகல் சுபவேளையில் செய்துக் கொண்டனர். மேல் மாகாண அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் விபரங்களும் வருமாறு: - பிரசன்ன ரணதுங்க - மேல் மாகாண முதலமைச்சர், நிதி திட்டமிடல்,நீதித்துறை,காணி,கல்வி , உள்ளுராட்சி                                 மாகாண நிர்வாகம்,மனித வள ,தொழில் வாய்ப்பு, பொறியியல் சேவை மற்றும்                                 தகவல் துறை அமைச்சு உதய கம்பன்பில   -   விவசாய,கமநல அபிவிருத்தி,சிறு நீர்ப்பாசன,கைத்தொழில் ,சூழல், கலை                                 கலாசார நடவடிக்கைகள் அமைச்சு ரஞ்சித் சோமவங்ச  - சுகாதார,சுதேச வைத்திய,சிறுவர் பாதுகாப்பு அமைச்சு. உபாலி கொடிக்கார  - மின் சக்தி எரிசக்தி,மாகாண வீதிகள்,வீடமைப்பு நிர்மாணத்துறை,நீர்வள,வடிகாலமைப்பு ,                                      சமூக சேவைகள் மற்றும் நகர,தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு. நிமல் லன்சா   -      போக்குவரத்து விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார,மகளிர் விவகார, உணவு விநியோக,    

புதிய முதலமைச்சர்கள் வௌ்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம்!

Image
மேல், தென் மாகாணசபைகளுக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர். இது தொடர்பான விசேட வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் போனஸ் ஆசன விபரம்

Image
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போனஸ் ஆசனங்கள் பற்றி விபரம் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு – நௌசர் பௌசி காலி – துல்ஷான் காரியவசம் ஹம்பாந்தோட்டை – ஆனந்த பத்திரங்க கம்பஹா – லலன்த குணசேகர மேல்  மாகாணம் கொழும்பு மாவட்டத்துக்கு – நௌசர் பௌசி நியமனத்துடன் கொழும்பு மாவட்டத்துக்குகான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன் . மேல் மாகாண சபைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது .

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரல் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் - ஹரீஸ் எம்.பி

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக என்றும் ஒலிக்கும் என்பதில் எம் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில், நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். 'அல்ஹம்துல்லாஹ்' இத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சித் தலைமையினை பலப்படுத்துவதற்காகவும் வாக்களித்த கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் ஏனைய மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள், இளைஞர்கள், பெரியார்கள், உலமாக்கள், பெண்கள், கட்சிப் போரா

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் புதிய நிர்வாகிகளும்

Image
தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு இன்று (2014.03.30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம் டாக்டர் ஏ.உதுமாலெப்பை அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையடுத்து தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் 2014ம் ஆண்டுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 15 மீயுயர்பீட உறுப்பினர்களையும் 19 அரசியல் பீடஉறுப்பினர்களையும் மாநாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்தும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேராளர்களின் அங்கீகாரத்துடன் பிரகடனம் செய்தார். மீயுயர் பீடஉறுப்பினர்கள் விபரம் வருமாறு; 01. அமைச்சர். ஏ.எல்.எம். அதாஉல்லா – தலைவர் 02. டாக்டர் ஏ. உதுமாலெப்பை – சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம் 03. ஐ.ஏ. ஹமீட் – பிரதிசெயலாளர் நாயகம் 04. எம்.எச்.ஏ. ஸமட் – உதவிச் செயலாளர் நாயகம் 05. எம்.எஸ். உதுமாலெப்பை – தேசியஅமைப்பாளர் 06. ஜே.எம். வஸீர் – தேசியப் பொருளாளர் 07. ஏ. அகமட் ஸகி – இளைஞர் அமைப்பாளர் 08. பொறியியலாளர். எம்.எஸ். நஸீர் – பணிப்ப

கல்முனையில் தேசிய காங்கிரஸ் கட்சியினரின் படங்களுக்கு கறுப்பு மை!

Image
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி நிர்மாணப்பணிக்குரிய பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்த அவ்வீதி நிர்மாணத்திற்குரியவர்களின் நிழற்படங்கள் இனந்தெரியாத நபர்களினால் மைபூசி அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரிய வருவதாவது; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; ‘மஹிந்த சிந்தனை’ எதிர்கால நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்முனைப்  ஸாகிறா கல்லூரி வீதி, கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளி வீதி, கடற்கரைப் பள்ளி வீதி, கடற்கரை வீதி ஆகிய நான்கு வீதிகள்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் அமைச்சினால் 20 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியியோரினால் கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை மாலை இவ்வீதிகள் திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு திறந்து

கிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்

Image
கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களை மேற்கொள்ளும் போது மாகாண இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு மாகாண அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அந்த யோசனையை ஆராய்ந்த மாகாண அமைச்சரவை மேற்படி முடிவை எடுத்துள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார். மாகாண அமைச்சரவையின் இம்முடிவு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சரவை அண்மையில் கூடியது :- கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் மாகாணத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றமை மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு நிவாரணமாகவும், மாகாணத்தில் வேலையின்மைப் பிரச்சினையை பெருமளவு குறைப்பதற்கும் பெரும் துணையாக அமைந்துள்ளது. எனினும் இவ்வாறான நியமனங்களின் போது, திறமை

அஷ்ராப் வைத்தியசாலை அபிவிருத்திக்கு தடையாக ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அறிகிறேன்!

Image
இனம், மதம், நிறங்களுக்கப்பால் வைத்தியசாலைகளை நோக்க வேண்டும் இவ்வாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள்ளக வீதித்திறப்பு நேற்று மாலை(26.03.2014) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வைத்தியசாலைகள் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கான பணிகளைச் செய்து வருகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்பிரதேச மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பெரும் பங்களிப்பு செய்து வருவதை நாம் காண்கின்றோம். வைத்தியசாலைகளை இனம், மதம், நிறம் என்ற போர்வையில் உற்றுநோக்கக் கூடாது. வைத்தியசாலை என்பது பொதுப் பணி செய்யும் இடம். இவ்விடத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பது அதிகாரம் உள்ளவர்களின் பொறுப்பாகும் என்பதைச் சுற்றுக்க

கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் இணைந்தார் அதாவுல்லா கட்சியில் -சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உறுதி வழங்கினார் அதாவுல்லா

Image
முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்தார்  மற்ற கிராமங்களுக்கோ ,ஏனைய சமூகங்களுக்கோ பாதிப்பு எழாவண்ணம் சாய்ந்தமருதுக்கான  உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தருவேன் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆயிரக்கணக்கான சாய்ந்தமருது மக்கள் முன்னிலையில் உறுதியளித்தார் சாய்ந்தமருதுக்கான  தனியான ஒரு உள்ளூராட்சி சபை கோரிக்கையை முவைத்து  நேற்று 24.03.2014 இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது . கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலெப்பை,மாகாண சபை உறுப்பினர்களான ரீ,எல்.அமீர்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் அடங்கலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அதாவுல்லா கட்சியில் இணைந்தார்

சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாம் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; சிப்லி பாறூக்

Image
சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களாக காத்தான்குடியை அண்மித்த பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.  இந்த தொடர்ச்சியான ஆக்கிரமிப்புச் செயலானது இன்று நேற்று அல்லாமல் சுமார் இருபது, முப்பது வருடங்களாக காத்தான்குடியையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் திட்டமிடப்பட்ட வகையில் இந்த ஆக்கிரமிப்புச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த காணி அபகரிப்பு சம்பந்தமாக நாங்கள் பின்னோக்கி பார்க்கின்ற போது ஆரையம்பதியிலே மயானமாக இருந்த சுமார் 08 ஏக்கருக்கும் மேலான கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்திருந்த பொது மயானக் காணி தற்பொழுது கலாச்சார மண்டபம் மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதிகளை அமைத்து அவை வேறு பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட

பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக பேசவேண்டாம் என அறிவுரை

Image
பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும்  பராளுன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை  தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின்  செயலாளர் லலித் வீரதுங்க ஆகீயோர் விளக்கமளித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன . மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பிரேரணை  தொடர்பாக நாட்டுக்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். மேலும் ஒருசில அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஜெனீவா அறிக்யைில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளனர்  இந்த விடயங்கள் சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் புலனாய்வுத்துறையினரின் அறிக்கையை பெற்றிருக்கின்றேன். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றேன். என தெரிவிக்கப்பட்டுள்ளததாக அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவரினால் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பாக சில அமைச்சர்கள் முஸ்ல

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் எனும் சிலரின் பகற்கனவு ஒருபோதும் நிறைவேறாது

Image
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கே மு.கா. ஆதரவு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் கோருவதற்காக அரசாங்கத்தை விட்டு விலகிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில உள் நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்ற சதித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். வத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதனை உறுதி செய்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கியது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாப தியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில், கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மு.கா.வுக்கும் அரசுக்குமிடையில் பாரிய பிரச்சினைகள் கிடையாது’

Image
முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் அரசாங்கத்திற்குமிடையில் பாரிய பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியிலே முடிந்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜெனீவாவில் மு.கா. முன்வைத்துள்ள அறிக்கையிலுள்ள அனைத்து விடயங்களும் உண்மையல்ல என்று குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் இதில் அடங்குவதாகவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், மு.கா. அறிக்கையிலுள்ள ஒவ்வொரு விடயம் குறித்தும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு விளக்கமளித்துள்ளார். ஏதும் முறைப்பாடு கிடைத்தால் அதனடிப்படையில் நாட்டின் சட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த அறிக்கையிலுள்ள எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மையல்ல. ஐ.ம.சு.மு.வில் 16 கட்சிகள் உள்ளன. ஆசியாவில் உள்ள பெரிய கூட்டணி இது. ஐ.ம.சு.மு. ஜனநாயக கூட்டணியாகும். கூட்டணி கட்சிகளிடையே சிறுசிறு பிரச்சினை உள்ள போதும் சகலரதும் கருத்துக்களை கவனித்து ஜனாதிபத

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்றம் - தடுத்து நிறுத்தினார் ரவூப் ஹக்கீம்

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு உகந்த காலம் இதுவெல்லவெனவும் அவ்வாறான நடவடிக்கையினை நிறுத்துமாறும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை மாநகர முதல்வருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். கல்முனையின் நீண்டகால பாரம்பரியங்களைக் கொண்ட தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பில் நீதியமைச்சுக்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர், அங்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கல்முனையின் தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புதிய பெயர் மாற்றம் என்ற சொ

தியாகிகளால் பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்து தாய்நாட்டை வெற்றிகொள்ள ஒன்றுபடவேண்டும்

Image
இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தியாகிகளால் பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்து தாய்நாட்டை வெற்றிகொள்ள ஒன்றுபடவேண்டுமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அந்நியநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது தேசத்தை மீட்டெடுத்த சுதந்திர இலங்கையின் தேசியத் தலைவர்களின் பங்களிப்பினை நினைவுபடுத்தி, அவர்களின் பங்களிப்பினை கௌரவித்து எமது தாய்நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் தேசிய சுதந்திர தின நாளான பெப்ரவரி 04 ஆம் திகதியை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். இத்தினத்தில் வீடுகள், நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் என்பவற்றில் எமது தேசிய கொடியினை பறக்கவிட்டு மூவின மக்களும் தங்களின் ஒற்றுமையையும், தாய் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்த முனைய வேண்டும். இதனுடாக எமது நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளின் சக்திகளால் ஏற்படவிருக்கும் பாதக நிலைக்கு எதிராக எமத