தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் புதிய நிர்வாகிகளும்

தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு இன்று (2014.03.30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.
இம்மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம் டாக்டர் ஏ.உதுமாலெப்பை அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் 2014ம் ஆண்டுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 15 மீயுயர்பீட உறுப்பினர்களையும் 19 அரசியல் பீடஉறுப்பினர்களையும் மாநாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்தும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேராளர்களின் அங்கீகாரத்துடன் பிரகடனம் செய்தார்.

மீயுயர் பீடஉறுப்பினர்கள் விபரம் வருமாறு;
01. அமைச்சர். ஏ.எல்.எம். அதாஉல்லா – தலைவர்
02. டாக்டர் ஏ. உதுமாலெப்பை – சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம்
03. ஐ.ஏ. ஹமீட் – பிரதிசெயலாளர் நாயகம்
04. எம்.எச்.ஏ. ஸமட் – உதவிச் செயலாளர் நாயகம்
05. எம்.எஸ். உதுமாலெப்பை – தேசியஅமைப்பாளர்
06. ஜே.எம். வஸீர் – தேசியப் பொருளாளர்
07. ஏ. அகமட் ஸகி – இளைஞர் அமைப்பாளர்
08. பொறியியலாளர். எம்.எஸ். நஸீர் – பணிப்பாளர்,சர்வதேசவிவகாரம்
09. எம்.எல்.ஏ. அமீர் – இணைப்பாளர்
10. மல்லிகாபத்திரண – மகளிர் அமைப்பாளர்
11. அமீருல் அன்சார் மௌலானா – கொள்கைபரப்புச் செயலாளர்
12. சட்டத்தரணிஆரிப் சம்சுடீன் – வர்த்தகசங்க இணைப்பாளர்
13. ஏ.எம்.பாரிஸ் – உறுப்பினர்
14. ஜே.பி.ஜே. சம்பத் – உறுப்பினர்
15. முஹம்மட் மௌஜூத் – உறுப்பினர்

அரசியல் பீட உறுப்பினர்கள்:
1.பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல்.எம்.உவைஸ்
2.பிரதி தேசிய இளைஞர் அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.றியாஸ்
3.பிரதி தேசிய பொருளாளர் ஏ.ஜே.ஜூனைட்
4.மேலதிக கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி பஹீஜ்
5.உதவி கொள்கை பரப்புச் செயலாளர் பாலித
6.பிரதி தேசிய இணைப்பாளராக எஸ்.எம்.சபீஸ்
7.செயலாளர் பொருளாதார விவகாரம் எ.எம்.சுபைர்
8.செயலாளர் சட்ட விவகாரம் ஏ.எப்.எம்.றூபி
9.செயலாளர் கலாசார அலுவல்கள் யூ.எல்.எம்.அரபாத்
10.செயலாளர் கல்வி நடவடிக்கைகள் ஏ.எல்.எம்.கையூ அதிபர்
11.அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ஹால்தீன் அமீர்
12.அம்பாறை பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் பாடகர் எஸ்.எச்.ஏ.மஜீட்
13.பிரதி இணைப்பாளர் சர்வதேச விவகாரம் முஸம்மில்
14.நூறுல் பௌஸ்
15.ஷாஹிர் ஹூசைன்
16.எம்.எம்.பதூர்கான்
17.யூ.எம்.நிசார்
18.எம்.ஏ.தம்பிக்கண்டு
19.எம்.ஐ.கியாவுதீன்
20.எம்.எம்.சமூன்
21.எம்.எம்.வாஹீட்
22.சட்டத்தரணி சபறுல்லா
இதேவேளை, கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக சிராஸ் மீராஷாஹிப், கிழக்கு மாகாண இணைப்பாளராக சுபைதீன், கிழக்க மாகாண பிரதிச் செயலாளராக எம்.ஏ.றாசீக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முஸம்மில், அம்பாறை மாவட்ட செயலாளராக ஹனிபா, அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் பாறுக், அம்பாறை மாவட்ட பிரதி பொருளாளராக றிஷாம், அம்பாறை மாவட்ட பிரதி தலைவர்களாக உபைதுல்லா, சம்சுதீன் ஹாஜி, அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக நியாஸ், அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளராக பரீட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இம்மாநாட்டின் இறுதியில் எடுக்கப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்கள் வருமாறு,
1. மனித உரிமை மீறல் என்ற போர்வையில் இலங்கை அரசின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தி அரசையும் சமூகங்களையும் சின்னாபின்னப்படுத்தும் முயற்சிகளுக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
2. சகல இனவாத சக்திகளுக்கும் எதிராக இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
3. சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தக் கூடியவாறான அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் தான்தோன்றித் தனமாக செய்து வரும் அரசியல் சக்திகளுக்கு எதிராக இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது.
அத்துடன் காலஞ்சென்ற தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஏ.பி. தாவூட் அவர்களுக்கு பேராளர் மாநாட்டின் பின் கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்ததுடன்,அன்னாருக்காக துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி